Saturday, August 22, 2015

சுயம்பு லிங்க மூர்த்தி உருவாகும் தேவரகசியம்


இறை சேவையில் முழுமையாகத் தங்களைக் கரைத்துக் கொண்டு,இறைவனுடன் இரண்டற கலந்த பக்தர்களே சித்தர்கள் ஆவர்;இத்தகைய சித்தர் ஒருவர் இறைவனுக்காக கதறிக் கதறி அழுகின்ற கண்ணீர்த்துளிகள் வானில் இருந்து பூமியில் விழும்;அப்படி பிரபஞ்சத்திலேயே முதன் முதலில் விழுந்த போது இரண்டு இளம் தளிர்களைக் கொண்ட தீர்க்க சுந்தர விருட்சம் என்ற சிறு செடி பூமியில் முளைத்து எழுகிறது;

பிறகு,அந்த சித்தரின் கண்ணீர்த்துளிகளை மட்டுமே உணவாக ஏற்றுக் கொண்டு,வளர்கிறது;இப்படி 100 யுகங்கள் கடந்ததும் அந்த சித்தர் ஈசனுடன் இரண்டற கலந்துவிடுகிறார்;

100 யுகங்களுக்கு மேல் எந்த இறைஅடியாரும் ஈசனிடமிருந்து தனித்து இயங்கிட முடியாது;அவர் ஈசனுடன் கலந்தே ஆக வேண்டும் என்பது வாலை நியதி;

இப்படி ஒரு சித்தர் ஈசனுடன் கலந்தப் பின்னர், அடுத்து வரும் சித்தர் அந்தச் செடிக்குத் தம்முடைய பக்திக் கண்ணீரை அடுத்த 100 யுகங்களுக்குச் சமர்ப்பிக்கிறார்;

ஒருவேளை,ஒரு சித்தர் ஈசனுடன் கலந்தப் பின்னர்,அடுத்த சித்தர் உடனடியாக வராவிட்டால்(வரும் காலம் கனியாவிட்டால்) அந்த பக்திச் செடி எவ்வளவு யுகங்களாக இருந்தாலும் பக்திக் கண்ணீருக்காக காத்துக் கொண்டிருக்கும்;சித்தர்களின் பக்திக் கண்ணீரைத் தவிர வேறு எதன் மூலமாகவும் அந்தச் செடி வளராது;

இப்படி 1000 சித்தர்களின் பக்திக் கண்ணீரால் வளர்க்கப்பட்ட தீர்க்க சுந்தரச் செடியே ஒரு மரமாக வளர்ந்து பூத்துக் குலுங்குகிறது;1000 யுகங்களின் முடிவில் அந்தச் செடி ஒரு சிவாலயத்தில் சுயம்பு லிங்கமாக உருமாறுகிறது;

அப்படி உருமாறும் தீர்க்க சுந்தர விருட்சத்தின் தண்டு,வேர்,கிளை பகுதிகள் அந்த ஆலயத்திற்கு உரிய சுயம்பு லிங்க மூர்த்தியாகவும்,அதன் கனிகள் அந்த ஆலயத்தின் ஸ்தல விருட்சமாகவும் அமைந்துவிடுகிறது;

ஒரு திருத்தலத்தில் உள்ள ஈசனைத் தரிசிப்பதும்,அங்குள்ள ஸ்தல விருட்சத்தைத் தரிசிப்பதும் ஒன்றே என்பது முன்னோர்களின் அனுபவப் பழமொழி!

தீர்க்க சுந்தர விருட்சம் ஒவ்வொரு யுகத்திலும்,ஒவ்வொரு உலகத்திலும் வெவ்வேறு பெயர்களைக் கொண்டிருக்கிறது;நாம் வாழ்ந்து வரும் கலியுகத்தில் தீர்க்க சுந்தர விருட்சம் “வேப்ப மரம்” ஆகும்;இந்த தீர்க்க சுந்தர விருட்சத்தின் ரூப சக்தியைக் கொண்டு விளங்கும் இடம் வைத்தீஸ்வரன் ஸ்தலத்தின் ஸ்தல விருட்சமான வேப்பமரம் ஆகும்;

இதன் தரிசனம் எப்பேர்ப்பட்ட கொடிய நோய்களையும் தீர்க்கும் சக்தி வாய்ந்தது;

ஓம் அகத்தீசாய நமஹ


வாழ்க பைரவ அறமுடன்,வளர்க வராகி அருளுடன்!!!

No comments:

Post a Comment