Saturday, August 22, 2015

சதுரகிரியில் மட்டும் கிடைக்கும் மூலிகை


கருதோஷ நிவாரண மூலிகை 240 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே முளைக்கும்;இதன் இலையை உற்றுநோக்கினால்,பெண் கருப்பையில் ஒரு குழந்தை படுத்திருப்பது போன்ற தோற்றம் இருக்கும்;

இதை பாலில்/தேனில் கலந்து சாப்பிட்டால் மலட்டுத்தன்மை நீங்கும்;ஆரோக்கியமான குழந்தைகள் 100 வரை ஒரு பெண் பெறுவாள்;50 வருடமாக கருத்தரிக்காத பெண்ணுக்குக் கூட கர்ப்பம் உண்டாகும் பாக்கியம் ஏற்படும்;

ஆண் குழந்தை வேண்டும் என்று விரும்புவோர் ஞாயிற்றுக்கிழமை காலையிலும்,பெண் குழந்தை வேண்டும் என்று விரும்புவோர் பவுர்ணமி அன்றும் இம்மூலிகையை பால்/தேனில் கலந்து உண்டு,தாம்பத்தியம் கொண்டால் போதும்;

ஆண்மை இழந்தவர்கள் மீண்டும் ஆண்மை பெறவும்;அரவாணி அல்லது பேடியாக இருப்பவர்கள் தாங்கள் விரும்பும்வகையில் ஆணாகவோ/பெண்ணாகவோ மாற இந்த மூலிகை பயன்படும்;அதற்கு ஏற்ற வகையில் திதி,நட்சத்திரம் அன்று வெறும் வயிற்றில் உட்கொண்டால் அவர்கள் விருப்பப்படி இனம் மாறமுடியும்;

இம்மூலிகை உலகத்திலேயே தமிழ்நாட்டில்,ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அமைந்திருக்கும் சதுரகிரி மலைப்பகுதிகளில் மட்டுமே விளைகிறது;சுயநல போக்கு இல்லாத சித்த வைத்தியர்களுக்கு மட்டுமே இது தென்படும்;மற்றவர்களால் இதைக் கண்டுபிடிக்க முடியாது;



ஓம் வராகி சிவசக்தி ஓம்

No comments:

Post a Comment