Saturday, August 22, 2015

கண் நோய்கள் தீர பாட்டி வைத்தியம்


இரு கண்களையும் மூடி கண்களின் மேல் தினமும் மூன்று வேளையும் எலுமிச்சம்பழங்களை(தலா ஒன்று வீதம் இரண்டு) 6 நிமிடங்கள் வரை உருட்ட வேண்டும்;

அப்படி உருட்டும் நாட்களில் அசைவம்,முட்டை,புரோட்டா சாப்பிடாமல் இருக்க வேண்டும்;அப்படி இருந்து கொண்டு,கண்களின் மீது உருட்டும் போது ஓம் வராகி சிவசக்தி ஓம் என்று மனதிற்குள் ஜபிக்க வேண்டும்;இப்படிச் செய்து வந்தால்,சில வாரங்களுக்குள் கண் நோய்கள் படிப்படியாக சரியாகிவிடும்;கண்பார்வை பெருகும்!

ஆதி அருணாச்சலமாகிய சதாசிவனின் விழிகளில் இருந்து பிறந்த தாவரம் எலுமிச்சை;இதனால் இதற்கு சிவகனி என்ற பெயரும்,சிவ கண்ணி என்ற பட்டமும் உண்டு;இறைவனின் இருகண்களே சூர்ய அக்னியும்,சந்திர அக்னியும்;இவை இரண்டுமே பகல்,இரவு நேரங்களின் குறியீடுகள்;

இறைவனின் கண்களில் இருந்து பிறந்தமையால் எலுமிச்சை அக்னி சக்தி உடையது;ஆனால்,இடக்கண்ணில் இருந்து எலுமிச்சை தோன்றியதால் சந்திர அக்னிக்குரிய குளுமை இதில் இருக்கின்றது;



வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்!!!

No comments:

Post a Comment