Monday, August 31, 2015

உணவுதியானம் செய்பவர்கள்


பசிக்காம சாப்பிடக்கூடாது;(காலையில் சாப்பிட்ட உணவு,ஜீரணித்தால் தான் மதியம் பசிக்கும்;அப்படி பசிக்காவிட்டால்,மதியம் சாப்பிடக் கூடாது;மதியம் சாப்பிட்ட உணவு ஜீரணம் ஆனால் தான் இரவு பசிக்கும்;)

எக்காரணம் கொண்டும் காலைச் சாப்பாட்டை ஒருபோதும் தவிர்க்கக் கூடாது;அப்படி ஒராண்டு வரை காலையில் சாப்பிடாமல் இருந்தால்,39 அல்லது 49 ஆம் வயது வரும் போது பக்கவாதம் வரும்;

பின்னிரவில் சாப்பிடக்கூடாது;(இரவு 7 மணிக்குள் சாப்பிட்டுவிடவும்;அதன் பிறகு சாப்பிட்டால்,ஜீரண மண்டலம் அதிக நேரம் எடுத்துக் கொள்ளும்;ஜீரணிக்க)


சாப்பிடுவதற்கு 30 நிமிடம் முன்பு ஏதாவது ஒரு பழத்தைச் சாப்பிடுவது ஜீரணமண்டலத்தை,சாப்பிடுவதற்குத் தயார் செய்யும்;


சாப்பிடுவதற்கு 30 நிமிடம் முன்பு தண்ணீர் (தாகம் எடுத்தால்) அருந்திக்கொள்ளலாம்;சாப்பிட்ட 30 நிமிடத்திற்குப் பின்னர் தண்ணீர் அருந்தலாம்;சாப்பிட்ட உடனே அருந்தப் படும் தண்ணீரானது,உண்ட உணவை நஞ்சாக்குகிறது;(சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம் சொல்லும் ஆரோக்கியக் குறிப்பு)

ஒவ்வொரு வேளை உணவிலும் பாதி காய்கறிகளும்,பாதி சோறும் இருப்பது நன்று;
மூன்று வேளையும் பழங்களை மட்டும் உணவாகச் சாப்பிடலாம்;(இப்படிச் சாப்பிட்டுத்தான் 80 வயது வரை நம்ம வீட்டுப் பெருசுகள் ஆரோக்கியமாக வாழ்ந்தனர்)


*மூன்று வேளைகளும் சாப்பிட ஏற்ற பழம் செவ்வாழை மட்டுமே!
வறுத்த காய்கறிகள்,வறுத்த சோறு ஒருபோதும் சாப்பிடவே கூடாது;(சைனீஸ் உணவுகள் சைனாக்காரனுக்குப் பொருந்தும்;நமக்குப்பொருந்துமா? ஏன் எது கிடைச்சாலும் தூக்கி உள்ளே போடுறீங்கப்பா!!!)

சாப்பிடும் நேரத்தில் செல்போனை அணைத்து வைப்பது ப்ரான்ஸ் நாட்டுப் பழக்கம்;இதைப் பின்பற்றலாமே!!
ஆமாம்! சாப்பிடும் போது பேசக் கூடாது;

சாப்பிடும் போது டிவி பார்க்கக்கூடாது;லேப்டாப்பும் தான்;
சாப்பிடும் போது வேகமாகச் சாப்பிடக் கூடாது;மென்று சாப்பிட வேண்டும்;சாப்பிடும் ஒவ்வொரு கவளத்திலும் நமது உமிழ்நீர் கலக்க வேண்டும்;அதுதான் ஆரோக்கியத்தின் அடிப்படை;
சாப்பிடும் போது மென்று சாப்பிடவேண்டும்;(மென்று சாப்பிட மெதுவாக சாப்பிட வேண்டும்;)

அசைவம் சாப்பிடுவது மாபெரும் தவறு;அது நமது ஆயுளைக் குறைக்கும்;

இந்த விதிகளைப் பின்பற்றுவோர் உணவுதியானம் செய்பவர்கள் என்று அர்த்தம்;

ஓம் வராகி சிவசக்தி ஓம்



No comments:

Post a Comment