Wednesday, August 19, 2015

தெய்வநிலையை அடைந்தப் பின்னரும் ஆன்மீக முன்னேற்றத்தை உறுதிப்படுத்தும் அரசாலை(வராகி) வழிபாடு!!!









நமது இந்து தர்மபுராணங்கள்,இதிகாசங்கள் நெடுக படித்துப் பார்த்தால்,தேவ உலகத்தைச் சேர்ந்தவர்களும் சாபம் பெற்றிருப்பதை வாசித்திருப்போம்;

ஆமாம்! மனித நிலையில் இருந்து தெய்வ நிலைக்கு உயர்ந்ததும்,ஒரு மனிதனுக்குக் கிடைக்கும் முதல் பதவியே இந்திரப்பதவிதான்;

அதன் பிறகு, அஷ்டதிக் பாலகர்கள்,மும்மூர்த்திகள் என்று எத்தனையோ தெய்வீகப் பதவிகள் கிடைத்தாலும்,அப்படி கிடைத்தப் பின்னரும் அவர்கள் இரண்டே இரண்டு குறைகளால் சாபம் வாங்கியிருப்பர்;

முதல் குறை:தான் என்ற அகங்காரம்
இரண்டாவது குறை;முறையற்ற காம இச்சை
நவக்கிரக வரலாற்றை வாசித்தால் முறையற்ற உறவு பற்றிய சம்பவங்களை நெடுக பார்க்கலாம்;இதைக் கொண்டுதான் நாத்திகம் பேசியவர்கள் நமது இந்து தர்மத்தை இழித்துரைத்துக் கொண்டே இருந்தனர்;நாத்திகவாதிகளோ,சைவத்தைச் சேர்ந்தவர்கள்,வைஷ்ணவ புராணங்கள் பொய் என்றும்,வைஷ்ணவத்தைச் சேர்ந்தவர்கள் சைவ புராணங்கள் பொய் என்றும் மாறி மாறி பல நூற்றாண்டுகளாக சண்டையிட்டுக் கொண்டு வந்திருப்பதைச் சுட்டிக் காட்டி,நாத்திகமே சிறந்தது;உயர்ந்தது;அவசியமானது என்ற பிரச்சாரத்தை வலிமைப்படுத்தி வந்துள்ளனர்;

விஷயம் அதுவல்ல;புராணங்கள் குறியீடாகக்கூறுவது என்னவெனில், எந்த பதவி கிடைத்தாலும் முறையற்ற காம ஆசையில் சிக்கியவன் எவனாக இருந்தாலும் அவன் சின்னாபின்னமடைவான் என்பதே!

இதில் இருந்து, அதாவது நான் என்ற திமிர்த்தனம் ஒரு போதும் வரக்கூடாது;காம ஆசையை ஒரளவுக்கு மேல் கிளறி எழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்;இதற்கு ஏதும் மந்திரங்கள் இருக்குமா? என்று 1985 முதல் தேடித் தேடி சலித்துப் போன போதுதான் அன்னை அரசாலையின் அருமை பெருமைகள் தெரிந்தன;நடைமுறையில் சிவ வழிபாடு செய்து வந்தாலே நான் என்ற அகங்காரம் காணாமல் போய்விடுகிறது;ஆனால்,காம இச்சையைக் கட்டுப்படுத்த பல பிறவிகள் எடுக்க வேண்டும் போலிருக்கிறது என்ற எண்ணம் பல ஆண்டுகளாக நம்மில் பலருக்கு இருந்து வருகிறது;

அன்னை அரசாலை(வராகி) வடிவங்கள் மொத்தம் 64.அதில் மிகவும் முக்கியமான வடிவமே அஸ்வாரூடா என்ற குதிரைக்காரி!

அஸ்வாரூடா என்ற வராகி அம்சத்தை தொடர்ந்து வழிபடுபவர்களுக்கு முறையற்ற காம இச்சை முழுமையாக விலகிப் போகும்;மன அடக்கம் உண்டாகும்;நம்மைப் பெற்ற அன்னையைத் தவிர வேறு யாரால் நம்மைத் திருத்த முடியும்;


அஸ்வாரூடா என்ற வராகி அம்சமே நமது ஐம்புலன் களையும் கட்டுப்படுத்தி வருகிறாளாம்;காமம் என்ற பதத்திற்கு காம இச்சை என்ற அர்த்தம் மட்டுமல்ல;ஒரு கார் வாங்கிட ஆசைப்பட்டாலும்,சொந்தமாக ஒரு பங்களா கட்டிட ஆசைப்பட்டாலும்,ஒரு நடிகையின் மீது மோகம் கொண்டாலும் அதுவும் காமமே! இதிலிருந்து இந்த பூமியிலும்,ஈரேழு பதினாலு உலகிலும் தப்பியவர் என்று எவரும் இல்லை;


ஆனால்,அன்னை அஸ்வாரூடாவைச் சரணடைந்துவிட்டால் அன்னையின் பாசத்தினால் நாம் முக்தி பெறலாம்;தேவ உலகிற்குச் சென்று அங்கே புண்ணிய உலக ஆத்மாவாக இருந்தாலும்,அஸ்வாரூடாவை வழிபட,வழிபட சிவத்துடன் கலந்துவிட முடியும்;

இது தொடர்பான வழிபாட்டுமுறையை நேரடியாக சந்திப்பவர்களுக்கு மட்டுமே உபதேசிக்க முடியும்;


ஓம் வராகி சிவசக்தி ஓம்








No comments:

Post a Comment