Saturday, August 22, 2015

மூன்று நூற்றாண்டுகளாக பொருளாதார முற்றுகையில் இந்தியா!


இந்தத் தலைப்பில் பத்து வால்யூம் கொண்ட புத்தகங்கள் எழுதலாம்;அந்த அளவிற்கு நமது நாட்டை ஆண்டவர்கள் தொலை நோக்கு இல்லாமல் இருந்தமையால் இன்று நமது சம்பளம் வெட்டியான செலவுகளுக்குப் போய்க் கொண்டிருக்கிறது;

சில வாரங்களுக்கு முன்பு,மேகி நூடுல்ஸை நமது அரசாங்கம் இந்தியாவில் எங்கும் விற்பனை செய்யக் கூடாது என்று தடை செய்தது;தடை செய்தமைக்கான காரணங்கள் நியாயமானவை;அதற்குப் பதிலடியாக அமெரிக்காவில் இந்தியாவின் நிறுவனமான ஹால்டிராம்ஸைத் தடை செய்தனர் அமெரிக்க அரசு அமைப்பினர்;காரணம் உலக வல்லரசு என்ற அகங்காரம் மட்டுமே! இதே மாதிரியான சம்பவம் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நடைபெற்றிருந்தால்?


இந்த சம்பவத்தின் அடிப்படையைப் புரிந்து கொள்ள வேண்டும் எனில்,பொருளாதாரம் சார்ந்த ஆர்வமும்,அது சார்ந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிந்திருந்தால் மட்டுமே கடந்த 300 ஆண்டுகளாக நாம் எப்படியெல்லாம் வஞ்சிக்கப்பட்டோம் என்பதை புரிந்து கொள்ள முடியும்;

மேகி நூடுல்ஸ் சம்பவத்தின் அடிப்படையைப் புரிந்து கொண்டால் அப்படியே நூல் பிடித்தவாறு 1980,1940,1910,1850,1810 என்று பழைய சம்பவங்களை வரிசைப்படுத்திக் கொண்டே செல்லலாம்;

கி.பி.1700 களில் சீனப்பெருஞ்சுவரை விடவும் நீளமான வேலி ஒன்றை பிரிட்டனின் கிழக்கத்தியக் கம்பெனியினர் இந்தியாவின் குறுக்காக அமைத்தனர்;அது இன்றைய ஆப்கனிஸ்தானில் இருந்து ஒரிசா மாநிலம் வரை நீண்டிருந்தது;இதன் மூலமாக உப்புக்கு வரி 400% போட்டு இந்தியர்களை திட்டமிட்டு சாகடித்தனர்;செயற்கைப் பஞ்சத்தை உருவாக்கி சில லட்சம் இந்தியர்களைக் கொன்றனர்;இது தொடர்பாக சமீபத்தில் உப்புவேலி என்ற புத்தகமே வெளிவந்திருக்கிறது;

இதை முழுமையாக வாசித்தால் நாம் எவ்வளவு செல்வச் செழிப்போடு வாழ்ந்தோம்;எப்படி நம்மை பிரிட்டன் கொள்ளையடித்தது? எப்படி உலக பொருளாதார வல்லரசு என்ற நிலையில் இருந்து பரம ஏழை நாடாக மாறினோம் என்பதை உணர முடியும்;

1750கள் வரையிலும் உலக மொத்த உற்பத்தியில் 25% இந்தியாவின் பங்களிப்பாக இருந்தது;இரண்டாம் உலகப்போரில் ஏற்பட்ட போர்ச்செலவை இங்கிலாந்து,அப்போதைய அடிமை இந்தியாவின் மீது திணித்து,வரி வசூல் என்ற பெயரில் கசக்கிப் பிழிந்ததுடன்,இந்தியாவின் உலக பொருளாதாரப் பங்களிப்பை 2% அளவுக்கு குறைத்தப்பின்னரே(சக்கையாக்கியப் பின்னரே) இந்தியாவுக்கு சுதந்திரம் 1947 இல் தந்தது;Source:The Rising and Falling of Great Powers


டாக்கா நகர் மஸ்லீம் துணிகள் நெய்பவர்களின் கை விரல்களை ஆங்கிலேயன் வெட்டினான்;ஏன்? அந்த மஸ்லீம் துணிகள் மிகவும் தரம் வாய்ந்தவை;விலையோ மிகவும் குறைவு;அந்த துணிகளுக்கான உற்பத்தியை நிரந்தரமாக நிறுத்தினால் தான் தனது விசைத்தறி துணிகளை உலகம் எங்கும் விற்பனை செய்ய முடியும்;

டாக்கா நகர் மஸ்லீம் துணியில் செய்யப்பட்ட ஒரு 16 முழச் சேலையை ஒரு பெண் உடுத்தினால்,அவள் ஆடை உடுத்தியது போலவே இருக்காதாம்;அவ்வளவு மெல்லியதாக அந்தக் காலத்தில் நெய்திருக்கிறார்கள்;மேலும் அந்த சேலையை ஒரு தீப்பெட்டிக்குள் மடித்து வைத்துவிடலாமாம்;(சரி கொஞ்சம் பெரிய தீப்பெட்டி என்றே வைத்துக் கொள்வோமே)


தமிழர்களால் கண்டுபிடிக்கப்பட்டு,கேரளாவில் பல நூற்றாண்டுகளாக வளர்த்தெடுக்கப்பட்ட போர்க்கலை களரி!அதன் தலைமை ஆசானை சுட்டுக் கொன்றது பிரிட்டிஷ் அரசு;இவரது பயிற்சியால் எங்கே தனது இந்திய ஆட்சிக்கு பங்கம் வந்துவிடுமோ? என்ற பயம் தான் காரணம்;களரியை முழுமையாக கற்றவரால் ஒரே நேரத்தில் (சில நிமிடங்களில்) 300 பேர்களைக் கொல்ல முடியும்;


ரைட் சகோதரர்கள் தான் விமானத்தைக் கண்டுபிடித்தார்கள் என்று நாம் பாடத்தில் படித்திருக்கிறோம்;அது வடிகட்டின பொய்; தால் படயே என்பவர் புனே நகருக்கு அருகில் தனது கண்டுபிடிப்பான விமானத்தை முதன் முதலில் பறக்கச் செய்தார்;அதுவும் பொதுமக்கள் முன்னிலையில்! ரைட் சகோதரர்கள் கண்டுபிடித்த விமானம் தரையில் இருந்து சிலஅடிகள் உயரத்தில் தான் பறந்தது;அதுவும் சில அடிகள் தூரம் தான் பறந்தது;ஆனால்,தால் படயே கண்டுபிடித்தவிமானம்  தரையில் இருந்து 10,000 அடி உயரத்தில்சில  கி.மீ.தூரத்துக்குப் பறந்தது;இந்தச் செய்தியை அன்றைய தினசரிகளில் வராமல் பார்த்துக் கொண்டது பிரிட்டிஷ் அரசு;இந்தச் சம்பவத்திற்குப் பின்னர்,தால் படயேவையும்,அவரது கண்டுபிடிப்பையும் பிரிட்டிஷார் கடத்திச் சென்றுவிட்டனர்;ஆதாரம்;Vedic World Heritage;Volume XXVI


வாஸ்கோடகாமா தானாகவே ஐரோப்பாவுக்கு கடல்வழி கண்டுபிடித்ததாக வரலாறு எழுதப்பட்டு,நம்மால் படிக்கப்பட்டு வருகிறது;தென் ஆப்ரிக்காவின் நன்னம்பிக்கை முனையில் பல மாதங்களாக தவித்துக் கொண்டிருந்த வாஸ்கோடகாமாவுக்கு வழிகாட்டியது கேரளாவைச் சேர்ந்த ஒரு கப்பல் வியாபாரி என்பது மறைக்கப்பட்ட உண்மை வரலாறு;

1970களில் கஞ்சித்தொட்டிக் காலம் வந்தது;அக்காலத்தில் இந்தியா நெடுகவுமே பலருக்கு தொழில் இல்லை;வருமானம் இல்லை;அரசாங்கத்தின் மகத்தான திட்டங்கள் மக்களை வந்து சேரத் தாமதம் ஆயின;இந்த சூழ்நிலையில் அமெரிக்கா நமக்கு இலவசமாகவே கோதுமை அனுப்பியது;அப்போது இந்தியாவில் அறிமுகமானது புரோட்டா;கூடவே தண்ணீர் வளத்தைக் கெடுக்கும் கருவேல மரங்களுக்கான விதைகளையும் அமெரிக்கா தான் அனுப்பிய கோதுமையுடன் தந்திரமாக அனுப்பியது;


அந்த கருவேல மரங்கள் இன்று தமிழ் நாட்டின் நீர்வளத்தை சீரழித்துவிட்டன;இப்போதுதான் இதுபற்றிய விழிப்புணர்வு நம்மிடையே உருவாகத் துவங்கியிருக்கிறது;

எப்படியெல்லாம் இந்தியர்களாகிய நமது தனித்தன்மைகள்,திறமைகளை படிப்படியாகவும்,சிறுகச் சிறுகவும் திட்டமிட்டு அழித்தான் ஆங்கிலேயன் என்பதை ஒரு புத்தகமாகவே எழுதி வெளியிட்டுள்ளனர் நியூ செஞ்சுரி பிரசுரத்தினர்;அந்த புத்தகத்தின்பெயர்: நள்ளிரவில் சுதந்திரம்;இதை வாசித்தீர்கள் எனில்,இந்தியாவில் பிரிட்டனின் ஐந்தாம் படையே இருக்காது;

ஏழாம் அறிவு திரைப்படத்தில் போதி தர்மரைப்பற்றியும்,அவருக்கு நோக்கு வர்மம் நன்றாகத் தெரியும்;என்பதையும் விவரித்து காட்சிப்படுத்தியிருந்தனர்;அதைப் பார்த்து நாம் ஆ வென வாய்பிளந்திருந்தோம்;அதைவிடவும் பல அற்புதமான மன திறமைகள் நமது தமிழ்நாட்டில் இன்றும் இருக்கின்றன;ஆனால்,ஒட்டு மொத்த தமிழ்நாட்டிலும் சில பத்து பேர்களிடம் மட்டுமே இருக்கின்றன என்று மதிப்பிடலாம்;


1990களில் அமெரிக்க கணினி நிறுவனங்கள் சூப்பர்க் கம்ப்யூட்டரை வடிவமைத்து வர்த்தக நோக்கில் விற்பனை செய்யத் துவங்கின;அதன் தயாரிப்புச் செலவு ரூ.100 கோடிகள்;அதை விடவும் 4000 மடங்கு செயல்திறனில் அதிகமாக இயங்கும் சூப்பர் கம்ப்யூட்டரை இந்தியா வடிவமைத்தது;இதன் தயாரிப்புச் செலவு வெறும் ரூ.1கோடி மட்டுமே!இந்த சூழ்நிலையும்,பொக்ரான் அணுகுண்டு வெடிப்பினால் அமெரிக்கா,நம் மீது செய்த பொருளாதாரத் தடைக்காலத்தில் செய்த சாதனை;எவனாவது 100 கோடிக்கு சைக்கிள் வாங்குவானா? இல்லை 1 கோடிக்கு பல்ஸார் வாங்குவானா? பன்னாட்டு நிறுவனங்கள் அமெரிக்க அரசிடம் சண்டை போட்டன;இப்படி பல விஷயங்களில் நம்மை உலக நாடுகள் இழிவு படுத்தும் போதெல்லாம் நமது ஆக்கபூர்வமான படைப்பாற்றல் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது;

மின் அஞ்சலை வடிவமைத்தவர் ராஜபாளைம் ஒன்றியம்,முகவூர் கிராமத்தைச் சேர்ந்த சிவா என்பவர்;இவரே எக்கோ மெயிலையும் கண்டுபிடித்தார்; 21.8.2015 அன்று தினமலரில் வந்த செய்திப்படி, மேல்நாட்டவர்கள் நம்மை அவர்களின் பன்னாட்டு நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் வைத்து அழகு பார்ப்பார்கள்;ஆனால்,புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்தினால்,(புதியதாக ஏதாவது கண்டுபிடித்தால்) அதை அவர்களால் தாங்க முடியாது; மேல் நாட்டினராகிய தாங்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும் என்ற மமதை அவர்களுக்கு உண்டு;என்று கூறியிருக்கிறார்;

இனிமேல் சொத்து என்பதை அறிவால் மட்டுமே உருவாக்க முடியும்;செல்வத்தைப் பெருக்குவதற்காக ஒருவர் தேட வேண்டிய மூலதனம் தனி மனித அறிவுத்திறன் தான்! என்பதை ஒரு இந்தியச் சாதனையாளர் தனது அனுபவத்தின் அடிப்படையில் தெரிவித்திருக்கிறார்;

வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்!!!

No comments:

Post a Comment