Saturday, August 22, 2015

தகுந்த வேலை கிடைக்க


தனது மகன்/ளுக்கு பட்டப்படிப்பு,பொறியியல் படிப்பு படித்தும் தகுந்த வேலை கிடைக்காமலிப்பதற்குக் காரணம் என்ன தெரியுமா?

முற்பிறவிகளில் சரியான உணவு,ஊதியம் அளிக்காமல் வேலை வாங்கி இருந்தாலும்; நல்ல வேலை கிடைத்தாலும் கிடைத்த சம்பளத்திற்கு ஏற்ற அளவுக்கு வேலை பார்க்காமல் இருப்பதும் கர்மவினைகளாகி இப்பிறவியில் வேலையின்மையாகியிருக்கிறது;

இதைச் சரி செய்து,படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்க ஸ்ரீஅங்காளி அந்தாதியை தினமும் வீட்டு பூஜை அறையில் கிழக்கு நோக்கி அமர்ந்து,வடக்கு நோக்கி தீபம் ஏற்றி பின்வரும் பாடலை மூன்று முறை பாடவும்;அல்லது ஜபிக்கவும்;வேலை கிடைக்கும் வரை(பட்டதாரியின் தாய் அல்லது தாய்க்குச் சமமானவர்கள்) ஜபிக்கலாம்;

பெற்றோர் இல்லாதவர்கள் தாமே பாடலாம்;பெற்றோர்கள் இல்லாத பட்டதாரி இளைஞர்கள்,இளம்பெண்கள் முடிந்தவரையிலும் அருகில் இருக்கும் அம்மன் சன்னதிகளில் மனதுக்குள் கிழக்கு நோக்கி அமர்ந்து இரவு 8 முதல் 9 மணிக்குள் முதல் 15 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை ஜபிக்கலாம்;

தொலைதூரதேசங்கள்,தொலைதூர மாநிலங்களில் வசிப்பவர்கள் வீட்டில் இருக்கும் பூஜை அறையில் அந்தந்த நாட்டின் இரவு மணி 8 முதல் 9 மணிக்குள் ஜபிக்கலாம்;


வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்!!!




No comments:

Post a Comment