Saturday, October 20, 2012

ஆயிரம் லிங்கங்கள் இருக்கும் உத்திரகோச மங்கை!!!




இராமநாதபுரத்திலிருந்து 12 கி.மீ.தொலைவில் இருப்பது உத்தரகோச மங்கை ஆகும்.இங்கே மங்களநாதசுவாமி திருக்கோவிலில் தல விருட்சமாக இலந்தை மரம் இருக்கிறது.இந்த இலந்தை மரத்தின் அருகில் ஒரு வரிசைக்கு ஐம்பது லிங்கங்கள் வீதம் இருபது வரிசைகளாக ஆயிரம் லிங்கங்கள் இருக்கின்றன.
இந்த லிங்கங்களைப் பார்த்தவாறு திருவாதிரை நட்சத்திரத்தன்று வரும் இராகு காலத்திலோ அல்லது அமாவாசையன்று வரும் குரு ஓரையிலோ ஒரு மணி நேரம் ஓம்சிவசிவஓம் ஜபித்தால் ஒரே நேரத்தில் ஆயிரம் லிங்கங்களை ஜபித்தபலன்கள் மொத்தமாகக் கிடைக்கும்;இப்படி மூன்று மாதங்களுக்கு ஒரு நாள் வீதம்,12 முறை இங்கே வந்து ஓம்சிவசிவஓம் ஜபித்தால்,நமக்கு லிங்க தரிசனம் கிடைக்கும்.

இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு மாதமும் வரும் திருவாதிரைவீதம் பனிரெண்டு  திருவாதிரை நாட்களுக்கு  வழிபட்டுவர,கடுமையான கர்மவினைகள் தீர்ந்துவிடும்.

மேலும்,நமது ஆத்ம சக்தி அதிகரிக்கும்.தவிர,ஆயிரம் லிங்கங்களின் ஆசியும் மொத்தமாகக் கிடைக்கும்.


ஓம்சிவசிவஓம்

No comments:

Post a Comment