Friday, October 19, 2012

ஏன் தினமும் நாம் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்?



கடந்த சில பதிவுகளில் ஒன்றில் நமது ஐந்து பிறவிகளில் நாம் செய்த புண்ணியச் செயல்களின் விளைவுகளால் நமக்கு இந்தப் பிறவியில் பலவிதமான வசதிகள்,செல்வாக்கு,தனித்திறமை உண்டாகியிருக்கிறது.நாம் அனுபவிக்கும் அத்தனை சுகங்களுக்கும் கடந்த ஐந்து பிறவிகளில் நாம் செய்த பூர்வ புண்ணியப்பலன்களே காரணம்.நாம் பிறந்திருக்கும் வம்சாவழியில் நமது ஐந்து தலைமுறை முன்னோர்களின் பாவ புண்ணியம் வெறும் எட்டில் ஒரு பங்கு மட்டுமே நம்மை சிரமப்படுத்தும்.மற்றவை எல்லாம் நாமே தேடிக்கொண்டது.இதற்கு மேல் விளக்க குரு அனுமதி இல்லை;

அதே போல நாம் கடந்த ஐந்து முற்பிறவிகளில் செய்த தவறுகளின் மொத்தமே இந்த பிறவியில் நாம் அனுபவிக்கும் நோய் அல்லது கடன் அல்லது வறுமை அல்லது அவமானங்கள் ஆகும்.இதை குறைக்க நம் ஒவ்வொருவராலும் முடியும்.ஏதாவது ஒரு சித்தரையோ அல்லது மஹானையோ நாம் நேரில் தரிசித்தால் நமது கர்மவினைகள் தீர்ந்துவிடும் என்று நம்புகிறோம்;அவர்களை நமது ஆன்மீக முயற்சியின்மூலமாக நேரில் தரிசித்தாலும்,அவர்கள் நம்மை ஆசிர்வாதிப்பார்கள்;அவ்வளவுதான்! நமது கர்மவினைகளை நாமே தான் தீர்க்க வேண்டும்.

இன்னொரு வழி இருக்கிறது.அதுதான் மந்திர ஜபம் !! பூமியில் நம்மிடையே ஏழு கோடி மந்திரங்கள் புழக்கத்தில் இருக்கின்றன.சிலமந்திரங்கள் ஒரு கட்டுரை நோட்டின் பல பக்கங்களுக்கு விரியும்.சில மந்திரங்கள் ஒரே ஒரு ஏ4 சைஸ் பக்கத்தினை நிரப்பும்.காயத்ரி மந்திரங்கள் மூன்றே மூன்று வரிகளைக் கொண்டது;முதல் வரி வித்மஹே என்று நிறைவடையும்;இரண்டாவது வரி தீமஹி என்று முடியும்;மூன்றாவது வரி ப்ரசோதயாத் என்று வரும்.

நம்மில் பலர் எதற்கு மந்திரம் ஜபிக்கிறோம்?என்று உணரலாமலேயே பலவிதமான மந்திரங்களை தினமும் ஜபிக்கிறார்கள்.அது மிகப்பெரிய தவறு.அவ்வாறு செய்தால்,சில வாரங்கள் அல்லது மாதங்களுக்குப்பிறகு அவ்வாறு ஜபிப்பவருக்கு மனநிலை பாதிப்பாகும்.இந்த பாதிப்பு பற்றி தெரியாமலேயே பலர் தொடர்ந்து மந்திர ஜபம் செய்துவருகிறார்கள்.ஏதாவது ஒரே ஒரு மந்திர ஜபம் செய்வதே முறை!!!

நாம் வாழ்ந்து வரும் கலியுகத்தில்,குடும்பஸ்தராகவும் இருக்க வேண்டும்;இறையருளும் வேண்டும் என்று விரும்புபவர்களுக்காக ஆன்மீக ஆராய்ச்சியாளர் திரு.மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட மந்திரமே ஓம்சிவசிவஓம் ஆகும்.வைஷ்ணவ சம்பிரதாயத்தைப்பின்பற்றுபவர்கள் ஓம்ஹரிஹரிஓம் என்ற மந்திரத்தை தினமும் ஜபிக்கலாம்.
இந்த மந்திரத்தினை முறையோடு தினமும் 15 நிமிடங்கள் வரை ஜபித்துவந்தால்,45 அல்லது 60 வது நாளிலிருந்து நமது வாழ்க்கையில் செயல்படத் துவங்கும்.சிலருக்கு 90 நாட்களுக்குப் பிறகே செயல்படத்துவங்கும்.

எந்த ஒரு மந்திரமும் ஒரு லட்சம் தடவை  ஜபித்தப்பின்னரே அந்த மந்திரத்திற்கு சக்தி வந்து,நமது தேவைகளை நிறைவேற்றும்;ஆனால்,ஓம்சிவசிவஓம் மந்திரஜபமானது சுமார் 10,000 தடவை ஜபித்ததுமே நமது தினசரி வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களிலிருந்து நம்மை பாதுகாக்கத்துவங்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை ஆகும்.அதற்காக நமது ஜபத்தின் எண்ணிக்கையை ஜபிக்கும்போது எண்ண வேண்டியதில்லை;நாம் எப்போது ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஆரம்பித்துவிட்டோமோ? அப்போதிலிருந்தே நமது கர்மவினைகள் கரையத் துவங்கிவிட்டன என்று பொருள்.நம்மிடம் இருக்கும் தங்க நகைகள் 22 காரட்,24 காரட் தரமுள்ளவை;இவைகளுக்குச் சமமானவை நாம் ஜபித்த பிற மந்திரங்கள்.ஆனால்,நாம் ஓம்சிவசிவஓம் மந்திரத்தை ஒரு  லட்சம் தடவைக்கும் மேலாக ஜபித்துவிட்டால்,(ஒரு லட்சம் தடவைக்கும் மேலாக நமது வாழ்நாள் முழுவதும் ஜபித்துக்  கொண்டே இருப்பது நல்லது;அவசியம்!!!) ஓம்சிவசிவஓம் மந்திர ஜபத்தின் தரம் 500 காரட் தங்கத்துக்குச் சமம்.அதென்ன 500 காரட்?

மண்ணாசை,பெண்ணாசை,பொன்னாசை இந்த மூன்றில் ஏதாவது ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட ஆசைகள் மனிதனை ஆன்மீக வாழ்க்கையில் முன்னேற விடாமல் தடுக்கும்.செல்வச் செழிப்பின் மீது அளவு கடந்த ஈர்ப்பு ஒரு மனிதனுக்கு வந்தால்,அவன் ஏராளமான நிலங்களை வாங்கிக் கொண்டே இருப்பான்;அப்படி வாங்கிப்  போடுவதற்காக தனது அறிவு,திறமை,செல்வாக்கு என அனைத்தையும் பயன்படுத்தி,ஏராளமானவர்களின் எதிர்ப்பையும் மீறி மண்வெறி பிடித்து செயல்படுவான்;அவனது குரு,அவன்/ள் மீது உள்ளன்போடு இருப்பவர்களின் அறிவுரையையும் கேட்க மாட்டான்/ள்.

பெண்ணாசை மட்டுமல்ல;(நாம் வாழும் காலத்தில் ஆணாசையும் வந்துவிட்டால்,)நோய் வந்தப்பின்னரோ,அவமானப்பட்டப்பின்னரோ திருந்துவார்கள்.காலம் பூராவும் திருந்தாத ஜன்மங்களும் உண்டு.மனு தர்ம சாஸ்திரம் சொல்வது என்னவெனில்,ஒரு ஆணும் பெண்ணும் மனதார ஒருவரை ஒருவர் விரும்பி இணைந்தால் அது பாவமில்லை;இந்த கருத்தை மையப்படுத்தி ஒரு ஆண் தான் விரும்பும் பெண்ணை மனோதத்துவ ரீதியாகவோ,செல்வாக்கைப் பயன்படுத்தியோ சம்மதிக்க வைப்பதே இந்திய நாடெங்கும்,தமிழ்நாடெங்கும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.(ஒரு பெண் தான் விரும்பும் ஆணை இதேபோல 'வளைக்கும்' கர்மாக்களும் பரவத் துவங்கியிருக்கிறது)
யாராக இருந்தாலும் தனது மனைவியைத் தவிர,(அல்லது தனது கணவனைத் தவிர) வேறு ஒரு முறையற்ற உறவில் சிக்கினால், அந்த நொடியே அவர்கள் தமது புண்ணியப்பலன்களை இழந்துவிடுவார்கள்.விரிவாகச் சொன்னால்,ஒரு ஆண் தனது 15 வது வயதில் இருந்து இன்று வரையிலும் இருந்து வந்த விரதங்கள்,பரிகார பூஜைகள்,செய்த அன்னதானங்கள்,குடும்பத்துக்காக செய்த சிறப்பு வழிபாடுகள் போன்றவைகளால் குறிப்பிட்ட அளவுக்கு புண்ணியம் சேர்ந்திருக்கும்;அவைகள் அனைத்தையும் திருடுவதற்காகவே வேறு உலகத்திலிருந்து இங்கே மனிதராகப் பிறந்திருக்கும் ஒரு கூட்டமே இருக்கிறது.அந்த கூட்டத்தில் ஆண்களும் உண்டு;பெண்களும் உண்டு.அவர்கள் அன்பையும்,ஆழ்ந்த அக்கறையையும் முகமூடிகளாகக் கொண்டு தாமாகவே தேடி வருவதுண்டு;அந்த முறையற்ற உறவில் சிக்கிய மறு நொடியே அதுவரை சேர்த்து வைத்திருந்த அனைத்து புண்ணியப் பலன்களையும் அந்த முறையற்ற உறவில் இழந்துவிடுவார்கள்;அதனால் தான் பலருக்கு பரிகாரங்கள் பலன் தராமல் போய்விடுகின்றன.
இதிலிருந்து மீள்வதற்காகவே,ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம் குறைந்தது ஓராண்டு அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் வரை தினமும் ஓம்சிவசிவஓம் ஜபிக்கச் சொல்கிறோம்;இப்படி ஒரு நாள் கூட விடாமல் தினமும் ஓம்சிவசிவஓம் ஜபித்து வருவதால்,அந்த புண்ணியத்தைத் திருடும் கூட்டத்திடமிருந்து நீங்கள் தப்பித்து விடுவீர்கள்:
ஆன்மீகத்தில் ஒரு உயர்ந்த நிலையை எட்டியதும்,துறவியாக அடுத்த சில பிறவிகளுக்குள் பிறப்பீர்கள்;அப்படி பிறக்கும்போது உங்களுக்கு மண்ணாசையும்,பெண்ணாசை(ஆணாசையும்) போயிருக்கும்;ஆனால், பொன் ஆசை நீங்காமல் இருக்கும்.இந்த ஒரு ஆசையை நீக்கிவிட்டால் நீங்கள் முக்தியை அடையும் தவநிலையை எட்டிவிடுவீர்கள்.
கொங்கணர் சித்தருக்கு வெகு நாட்களாக பொன் ஆசை இருந்தது.அவர் கன்னியாகுமரி அருகில் இருக்கும் மருத்துவாழ்மலைக்குச் சென்று ஸ்ரீகாகபுஜண்டர் சித்தரை தரிசித்தார்;அவரிடம் தான் மாற்றுக்குறையாத தங்கம் செய்யும் வித்தையை கேட்டார்.
அதற்கு காகபுஜண்டர், “உயர்ந்த மாற்றுக்குறையாத தங்கம் செய்யும் முறை என்பது இறைவன் அருளும் வரம்.அந்த வரத்தைப்பெற தாங்கள் பூர்வ ஜன்மத்தில் தவம் செய்த இடம் வடுகபுரிக்கு அருகில் இருக்கிறது.அது இலுப்பைக் காடாக இருக்கிறது.அங்கே தாங்கள் சென்று தவமியற்றினால்,இறையருளால் தங்களின் ஆசை கைகூடும்” என்று கொங்கணருக்கு வழிகாட்டினார்.அவரும்,இன்றைய பிள்ளையார்பட்டிக்கு அருகில் இருக்கும் வடுகநாதபுரி என்ற வயிரவன்பட்டிக்கு வந்து தவம் செய்து வந்தார்.பல ஜன்மங்களாக கொங்கணர்,தொடர்ந்து ஸ்ரீபைரவர் வழிபாடு செய்து வந்தார்;அந்த வழிபாட்டின் அளவு குறிப்பிட்ட நிலையை எட்டியதால் ஸ்ரீபைரவரே கொங்கணரை ஆட்கொள்ள முடிவு செய்து,ஒரு ரிஷி போன்ற வடிவில்  கொங்கணரை சந்தித்தார்.
கொங்கணருக்கு ரசவாதம்(அந்தக் காலத்து கெமிஸ்ட்ரி) கற்றுக்கொடுத்தார்.அதன்படி,கொங்கணர் 500 காரட் தங்கம் செய்துவிட்டார்.பணத்தாசை எப்படியோ அதே போலத்தான் பொன் ஆசையும்! 500 காரட் தங்கம் செய்ததும்,கொங்கணருக்கு பொன் ஆசை தீரவில்லை;தான் செய்த 500 காரட் தங்கத்தை தனது குருவான ரிஷியிடம்(ரிஷி வடிவில் இருந்த ஸ்ரீபைரவரிடம்) காட்டி பெருமைப்பட்டார்.அடுத்தபடியாக 1000 காரட் தங்கம் தான் செய்யப்போவதாக அவரிடமே சொன்னார்.
ரிஷி வடிவில் வந்த ஸ்ரீபைரவருக்குப்புரிந்து போனது;எனவே,அவர் கொங்கணரிடம், ‘நாம் இலுப்பைக்காடு போகலாம்;போய் அங்கே நாம் தங்குவோமா?’என்று கேட்டார்.அப்போதுதான் கொங்கணருக்கு,ஸ்ரீகாகபுஜண்டர் சொன்னது நினைவுக்கு வந்தது.உடனே,கொங்கணருக்கு  புரிந்து போனது;தனக்கு 500 காரட் தங்கம் செய்யும் ரசவாதத்தைக்கற்றுக் கொடுத்தது வெறும் ரிஷி அல்ல;தான் வழிபாடு செய்து வரும் பைரவரே அவ்வாறு வந்திருக்கிறார். இந்த நினைவு கொங்கணருக்கு வந்ததுமே அந்த ரிஷி,பைரவ வடிவமெடுத்து கொங்கணருக்கு காட்சியளித்தார்.கொங்கணர் மெய்சிலிர்த்துப் போய் அவரிடம் ஆசி பெற்றார்.பைரவரது தரிசனம் கிடைக்கவே இத்தனை ஜன்மங்கள் பைரவர் வழிபாடு விடாமல் செய்து வந்திருக்கிறார்.உடனே,கொங்கணருக்கு பொன் ஆசையும் அற்றுப் போனது;தான் செய்த 500 காரட் தங்கத்தை வீசி எறிந்துவிட்டு,அங்கேயே ஜீவசமாதி ஆனார்.ஆமாம்,கொங்கணர் ஜீவ சமாதி ஆன இடமே காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி ஆகும்.
கொங்கணர் சித்தருக்கு ரிஷி வடிவில் வந்து ரசவாதம் கற்றுகொடுத்த இடமே இன்றைய காரைக்குடி அருகில் இருக்கும் மாத்தூர் ஆகும்.இந்த இடத்தில் தான் கொங்கணர் பல பிறவிகளாக பைரவரை நினைத்து தவம் செய்தார்.இன்று மாத்தூரில் அருள்மிகு பெரியநாயகி சமேத ஐந்நூற்றீஸ்வரர் கோவில் இருக்கிறது.பைரவரின் வழிகாட்டுதல் படி,கொங்கணர் 500 காரட் தங்கம் செய்த இடமே மாத்தூர்!!!(நன்றி:பைரவ ரகசியம்,பாகம்1,பக்கம் 34,35,36)

எனவே,நம் ஒவ்வொருவருக்குமே ஆன்மீகத்தில் முன்னேற வேண்டும் என்ற அவா இருக்கிறது.மண்ணாசை,பெண்ணாசை(ஆணாசை),பொன்னாசை இவைகளை விட்டு முழுமையாக விலகிவிட்டால்,நாம் ஆன்மீகத்தில் முன்னேறிவிடமுடியும்.
நான்கு யுகங்களான க்ருதயுகம்,த்ரேதாயுகம்,துவாபரயுகம்,கலியுகம் என்று இருக்கிறது.இந்த நான்கு யுகங்களில் நாம் வாழ்ந்து வரும் கலியுகத்தில் தான் மிக எளிமையாக இறைவனது அருளைப் பெற முடியும்.கலியுகத்தில் இறை நாம ஜபம் மட்டுமே நமது கர்மவினைகளைப்போக்கும்;இறை நாம ஜபங்களில் குடும்பஸ்தர்களுக்கு ஏற்ற ஒரே மந்திரம் ஓம்சிவசிவஓம் மட்டுமே!!ஓம்சிவசிவஓம் தினமும் ஜபிக்க நமக்குத் தேவையான கட்டுப்பாடுகள் இரண்டே இரண்டு மட்டுமே:=ஒன்று நமது வயது 21 நிரம்பியிருக்க வேண்டும்;இரண்டு நாம் அசைவம் சாப்பிடக் கூடாது.(தாம்பத்தியம் செய்யலாம்;வேறு என்னென்ன சுகங்கள் இருக்கின்றனவோ எதுவும் பின்பற்றலாம்)

உங்களுக்கு மட்டும் ஒரு ரகசியத்தைச் சொல்கிறேன்.நீங்கள் ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம் பத்து வருடங்கள் வரையிலும் ஓம்சிவசிவஓம் ஜபித்தால்,உங்களின் ஜப எண்ணிக்கை ஒரு கோடியைத் தொட்டுவிடும்.அப்படி தொட்டுவிட்டால்,உங்களைத் தேடி 18 சித்தர்களும் நேரில் வந்து ஆசி கொடுப்பார்கள்.அப்படி 18 சித்தர்களும் ஆசி கொடுத்துவிட்டால்,நீங்கள் இந்த பிறவி நிறைவடையும் போது நீங்களும் சித்தராகிவிடுவீர்கள்.இந்தக் கருத்து நாடி ஜோதிடத்தில் இருந்து ஒருவர் கண்டறிந்து சொன்னார்.
எனவே,நாம் சேமிக்கும் புண்ணியத்தை பாதுகாக்கவும்,நாம் நவக்கிரகங்களின் பாதிப்பிலிருந்து தப்பிக்கவும்,நாம் ஆன்மீக வாழ்க்கையில் மிக உயர்ந்த இடத்தை அடையவும் வழிகாட்டுவது தினசரி ஓம்சிவசிவஓம் மந்திர ஜபம் மட்டுமே!!!
ஓம்சிவசிவஓம்
ஓம்சிவசிவஓம்
ஓம்சிவசிவஓம்



No comments:

Post a Comment