Wednesday, September 23, 2015

மந்திரங்கள் என்றால் என்ன? அவைகளால் என்ன பயன்?


மனத்தை திறனாக்கும் எந்த ஒரு எழுத்தும் மந்திரம் எனப்படும் என்கிறார் திருமூலர்;
மந்திரம் என்பதற்கு வீடு என்று ஒரு அர்த்தமும் உண்டு;

நாம் உண்ணும் உணவு,70 நாட்களுக்குப் பிறகு,நமது உடலில் விந்து அணுவாக மாறுகிறது;18 வயது முதல் 70 வயது வரையிலும் ஒரு ஆணால் தனது வாழ்க்கைத் துணைக்கு தாம்பத்திய சுகத்தை,திருப்தியைத் தரமுடியும்;பழமையான ஆன்மீக நூல்கள் சொல்வது என்னவெனில்,மாதம் இருமுறை மட்டும் தாம்பத்தியம் வைத்துக் கொண்டால் இது சாத்தியம் என்று விளக்கியுள்ளன;

ஆன்மீக ரகசியங்கள்,மந்திரங்கள்,இறைவழிபாட்டுமுறைகள் எல்லாமே 40,50,60 வயதுக்குப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றுதான் நம்மில் பலர் நினைத்துக் கொண்டு,ஆன்மீகப் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்வதில்லை;இது மாபெரும் தவறு;ஏனெனில்,ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? என்ற பழமொழி யோகக் கலையை ஐந்து வயதில் கற்க வேண்டும்;அப்படி கற்பதற்கு உடலை ஐந்து வயதிலேயே வளைத்துப் பழக்க வேண்டும்;

அதே சமயம்,யோகாசனம் செய்யும் போது மந்திரம் ஜபிக்க வேண்டும்; என்பது  சென்ற நூற்றாண்டுடன் மறைந்துவிட்ட மரபாக இருக்கிறது;ஆமாம்! ஒவ்வொரு யோகா செய்யும் போதும் அதற்குரிய கடவுளின் மந்திரத்தை ஜபித்துக் கொண்டே இருக்க வேண்டும்;அப்போதுதான் அந்த யோகாசனம் உரிய தெய்வீக ஆற்றலை நமக்கு வழங்கும்;

இன்றைய வேகமான வாழ்க்கையில் யோகாவுக்கு அனைவரும் செல்கிறோம்;யோகாவை தினமும் எப்பாடு பட்டாவது செய்கிறோம்;ஆனால்,மந்திரங்கள் ஜெபியுங்கள் என்று எழுதினாலே,அவரை மந்திரவாதி என்று ஒதுக்குகிறோம்;

சமுதாய நலனுக்கு என்று உருவாக்கப்பட்டவையே அஷ்டகர்ம மந்திரங்கள்;இந்த மந்திரங்களுக்குள் இருந்து இவைகளுக்கு உயிராக இருப்பவர்களே அஷ்டபைரவப் பெருமான் கள்!

மனிதன் எந்த யுகத்திலும் செய்யும் செயல்களை எட்டுவிதங்களுக்குள் அடக்கிவிடலாம்;அந்த எட்டுவிதமான செயல்களை தடுத்து நிறுத்திட அல்லது ஒரே செயலைத் திரும்பத் திரும்பச் செய்யவே அஷ்டகர்ம மந்திரங்கள் பயன்படுகின்றன;


இந்த எட்டுவிதமான செயல்கள் மூலமாக 64 விதமான பாவங்கள் அல்லது புண்ணியச் செயல்களை ஒவ்வொரு மனிதனாலும் செய்ய முடியும்;எனவேதான் அஷ்டபைரவர்கள் ஒவ்வொருவரும் எட்டு எட்டாக பிரிந்து 64 பைரவர்களாக உதயமானார்கள்;இந்த 64 பைரவர்களே,அஷ்ட கர்மாக்களால் செய்யப்படும் 64 வித பாவங்களுக்குத் தண்டனைகளை சூட்சுமமாக அடுத்தடுத்து வரும் பிறவிகளில் தருவர்;ஒருவேளை இந்த அஷ்ட கர்மாக்களைக்கொண்டு 64 விதமான புண்ணியச் செயல்களைச் செய்தால் அதற்கு உரிய யோகங்கள்,வரங்களையும் தருபவர்கள் இந்த 64 பைரவர்களே! அப்படி 64 வித பைரவர்கள் தரும் வரத்தை செயல்படுத்தும் சக்திகளே 64 வித வராகிகள்!


சிவபெருமான் அல்லது பைரவப் பெருமான் தமது பக்தர்களுக்கு வரங்களைத் தருவர்;எந்த ஒரு பெண் அல்லது ஆண் தொடர்ந்து தன்னை வழிபட்டு வருகிறார்களோ,அவர்களுக்கு தக்க நேரத்தில் வரம் தருவது இவர்களின் கடமை;அப்படி வரம் தரும்போது சில சமயம் முழுமையாகத் தராமல் போவதுண்டு;அந்த அரைகுறை வரத்தை முழுமைப்படுத்துவது சிவனின் துணை ஆதிபராசக்தி;பைரவப் பெருமானின் துணை வராகி;


நாம் பிறந்த ஜாதகத்தில்,சந்திரனுக்கு 2 ஆம் இடத்தில் ராகு நின்றாலோ,அல்லது 12 ஆம் இடத்தில் ராகு நின்றாலோ அதற்கு மஹா சக்தி யோகம் என்று பெயர்;இவர்களுக்கு அன்னை அரசாலையின் அருள் விரைவாக கிட்டும்;அதே போல,சந்திரன் மறைவு ஸ்தானங்களில் நின்று ஸர்ப்ப நட்சத்திரங்களில் நின்றாலும் அன்னை அரசாலையின் அருளுக்குப் பாத்திரமானவர்கள் என்று அர்த்தம்;


கும்ப லக்னமாகி,10 இடத்தில் ராகு இருக்கப் பிறந்தவர்களுக்கு அன்னை அரசாலை(வராகி)யின் அருள் சில மாதங்களுக்குள் கிட்டும்;ஏன் எனில்,இந்த கிரக அமைப்பில் பிறந்தவர்தான் ஸ்ரீராமகிருஷ்ண பரம ஹம்சர்;இவர் கொல்கொத்தா மாநகரத்தில் ஒரு காளிகோவிலில் பூசாரியாக வாழ்ந்து வந்தவர்;இவர் காளியிடம் தினமும் பேசுபவர்;

இதே அளவுக்கு காளியிடம் பேசும் திறன் உள்ளவர்கள் இன்றும் நம்முடைய தமிழ்நாட்டில் வாழ்ந்து வருகின்றனர்;ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் பேசியது ஸ்ரீவராகிகாளியம்மன் என்ற தெய்வத்திடம் என்று கேள்விப்படும் போது பிரமித்துப் போகிறோம்;


ஓம் மகா கணபதி நமஹ என்பதும் ஒரு மந்திரமே!
வாழ்க வளமுடன்;வாழ்க வையகம் என்பதும் ஒரு பொதுநலம் தரும்,பூமி நலம் தரும் சர்வசக்தி வாய்ந்த மந்திரமே!
வாழ்க அறமுடன்;வளர்க அருளுடன் என்பதும் ஒரு ஆன்மீக மந்திரமே!
ஓம் சரவணபவசிவ ஓம் என்பதும் ஒரு வகை மந்திரமே!
ஓம் காளி ஜெய் காளி என்பதும் ஒரு வித மந்திரமே!
ஓம் வராகி சிவசக்தி ஒம் என்பதும் ஒரு வகை மந்திரமே!
ஓம் ஆம் ஹெளம் செள என்பது ஒரு சிவமகா மந்திரமே!
ஓம் என்பதும் ஒரு விதமுக்கியமான மந்திரமே!
ஆமென் என்பதும் ஒரு மந்திரமே!
ஆமீன் என்பதும் ஒரு மந்திரமே!
ஓம் நமசிவாய சிவாயநம ஓம் என்பது சைவ கூட்டுப்பிரார்த்தனை மந்திரமே!
ஓம் சிவசக்தி வராகி ஓம் என்பதும் ஒரு மந்திரமே!


எந்த மந்திரமாக இருந்தாலும்,1,00,000 முறை ஜபித்தப் பின்னரே அதற்கு உயிர் உண்டாகும்;ஆனால்,சில மந்திரங்கள் 1000 முறை ஜபித்ததும் அதற்கு உயிர் வந்துவிடும்;சில மந்திரங்களை ஒரே ஒரு முறை ஜபித்தாலே போதும்;அவைகள் உடனடியாக இயங்க ஆரம்பித்துவிடும்;



நமது நாடு மந்திரங்களின் தாய்நாடு;மந்திரங்களை முறையாக நாம் ஒவ்வொருவரும் பயன்படுத்தினால்,நாம் பொருளாதாரத் தன்னிறைவை கண்டிப்பாக எட்டிவிடுவோம்;சில மாதங்களிலேயே! நாம் பொருளாதாரத் தன்னிறைவை எட்டிவிட்டால் நமது நாடும் உலக வல்லரசு தேசமாகிவிடும்;

அப்படி ஆகாமல் இருக்கவே நாத்திகம்,கம்யூனிசம்,ஜாதியிசம் போன்றவை திட்டமிட்டு பணிபுரிந்து(?!) வருகின்றன;இப்போதாவது விழித்துக்கொள்வோமா?

No comments:

Post a Comment