Wednesday, September 23, 2015

பொறாமை,திட்டு முறைப்பாடுகளை நீக்கும் மயில்தோகை விசிறி


மயில் தோகையால் விசிறி செய்து கைகளால் விசிறும் பழக்கம் பல நூற்றாண்டுகளாக தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியா,இலங்கை,மலேஷியா,சிங்கப்பூரில் இருந்துவந்தது;இப்போது மிகவும் அரிதிலும் அரிதாக மயில் தோகையால் செய்யப்படும் கைவிசிறிகள் பயன்படுத்தப்படுகிறது;


நமது திறமையை பயன்படுத்தும் சந்தர்ப்பம் வரும்போது,அதனால் சாதனைகளை நிகழ்த்துவது வழக்கம்;இந்தச் சாதனையை,வெற்றியை நம்முடைய உறவுகள்,அடிக்கடி பழகுபவர்களிடம் பகிர்ந்து கொள்வதும் நம்முடைய சுபாவம்;அப்படி பகிரிந்த உடனே அதை நமது நெருங்கிய நட்பு/உறவு வட்டத்தால் ஜீரணிக்க முடிவதில்லை;அதனால் தான் நமக்கு திடீர்,திடீர் என்று உடல் நலக்குறைவு ஏற்படுகிறது;அல்லது நமது ரத்த உறவுகளுக்கு ஏற்படுகிறது;

இதில் இருந்து விடுபடவே நம்முடைய முன்னோர்கள் மயில் தோகையால் விசிறி வீட்டில் வைத்திருந்தனர்;


மீண்டும் நாம் இதைப் போல உருவாக்கி,பயன்படுத்துவோமா? 

பழமையான பொருட்கள் உள்ள வீடாக (உங்கள் வீடு)இருந்தால் தேடிப்பாருங்கள்;நிச்சயம் இருக்கும்;அதைக் கூட இப்போது நாம் பயன்படுத்தலாம்;

No comments:

Post a Comment