Monday, September 21, 2015

எனது ஜோதிட மாணவ,மாணவிகளுக்கு


1.யாருக்கு மாந்திரீக பாதிப்பு வரும்?

2.லக்னத்துக்கு 2,11க்குரியவர் ஆட்சி அல்லது உச்சம் அல்லது உச்சத்துக்கு இணையான இடத்தில் இருக்கப் பிறந்தவர்கள் இப்போதும் வாழ்ந்து வருகிறார்கள்;இவர்கள் யாரை குரு என்று போற்றுகிறார்களோ,அவர்களுக்கு பெயரும் புகழும் உலக அளவில் உருவாகும்;அதே போல,லக்னத்துக்கு 2,9க்குரியவர் ஒன்றாகி இருந்தாலும் இதே நிலைதான்;இந்த ஜோதிட ரகசியம் பலருக்குத் தெரிவதில்லை;இப்படிப்பட்டவர்கள் எப்படிப்பட்டவர்களின் வசியத்துக்கு அடிமையாவார்கள்? அப்படி வசியத்துக்கு அடிமையானால் எப்போது அதிலிருந்து மீள்வார்கள்?

3.எந்த மாதிரியான கிரக அமைப்பில் பிறந்திருந்தால்,அவர்கள் மனித இனத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பதைக் கண்டுபிடிக்கலாம்?

4.எந்த யுகத்தில் பூமியில் மனிதர்கள் மத்தியில் நாகராஜாக்கள்,நாகராணிகள்,நாக மஹாராஜாக்கள்,நாக மஹாராணிகள் அதிகம் பிறப்பார்கள்?

5.ஒரு கோவிலின் அருளாற்றல் அந்தக் கோவிலின் எந்தப் பகுதியில் பாதுகாக்கப்பட்டிருக்கும்?

6.எந்த மாதிரியான கிரக அமைப்பில் பிறந்தால்,அவர்கள் பிறந்த நாட்டிற்குத் துரோகம் செய்வார்கள்?(தேசத்துரோகிகள்)

7.நினைத்த உருவம் எடுக்கும் இச்சாதாரிகளின் ஜாதக அமைப்பு எப்படிப்பட்ட கிரகச் சேர்கைகளோடு இருக்கும்?

8.யார் சனியின் அம்சத்துடன் இந்தக் கலியுகத்தில் வாழ்ந்து வருகிறார்கள்?அவர்களுக்குரிய லக்னம்,ராசி,நட்சத்திரம் எதுவாக இருக்கும்?

இப்படிக்கு

கை.வீரமுனி. . .ஸ்ரீவில்லிபுத்தூர்.9092116990,9364231011

No comments:

Post a Comment