Thursday, September 10, 2015

இயற்கை விளை பொருட்களால் செய்யப்படும் நாப்கின்


அதிக அதிகமான பூச்சிக்கொல்லி இரசாயன விஷங்களை உள்வாங்கி வளர்க்கப்படுவது பருத்திப் பயிராகும்;(பரான் என்ற ரசாயனமும்,பருத்தியை வெண்மையாக்க குளோரினும் பயன்படுத்தப்படுகிறது;இதன் மூலமாக டையாக்சின் உண்டாகிறது)
இந்தப் பருத்தியை எடுத்து நாப்கின் தயாரிக்கிறார்கள்;நாப்கினின் வெளிப்புறம் உலர்வாக இருப்பதற்கு ரேயான் பயன்படுத்தப்படுகிறது;இது போதாது என்று நறுமணத்திற்காக பல்வேறு செயற்கை இரசாயனங்கள் டையாக்சினால் உடலின் வெப்பம் அதிகமாக ஏற்படுகிறது;மேலும் நாப்கினை அதிகநேரம் உபயோகப்படுத்துவதற்காக அதில் ஜெல் பொதிக்கப்படுகிறது;இதனால் கர்ப்பப் பையில் நீர்த்தன்மை உறிஞ்சப்பட்டு வறட்சித்தன்மை ஏற்படுத்துகிறது;

6 மணி நேரத்திற்கு ஒருமுறை நாப்கினை மாற்ற வேண்டும் என்று கூறுகிறார்கள்;இது வேலைக்குப் போகும் பெண்களுக்குச் சாத்தியமா?

அதிகமான நேரம் நாப்கினை உபயோகப்படுத்துவதால், பாக்டீரியா தொற்று,அரிப்பு,எரிச்சல்,கர்ப்பப்பையில் யூரின் ட்ராக் இன்ஃபெக்ஷன்,பெல்விக் இன் ப்ளமென்ட்டரி நோய்,ஒவரியில் கட்டி என கேன்சர் வரை கொண்டு வந்துவிடுகிறது;

பெண்கள் பயன்படுத்தும் இரசாயனத் தன்மை கலந்த இந்த நாப்கினால் மேலும் ஹார்மோன் களில் குறைபாடு,குழந்தையின்மை,கருச்சிதைவு,தைராய்டு குறைபாடு,மன அழுத்தம்,மார்பகப்புற்று நோய் போன்ற நோய்களும் வர வாய்ப்புகள் அதிகம்;

இது போன்ற பக்கவிளைவுகளில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள டெக்ஸ்டைல் டெக்னாலஜி படித்துக் கொண்டிருக்கும் ஒரு டாக்டரேட் ஆராய்ச்சி மாணவி பாரம்பரிய மூலிகைச்சாறுகளைக் கொண்டு ஆர்கானிக் பருத்தியுடன் கூடிய துணியில்,மருத்துவ ரீதியான ஆயத்த ஆடைகளின் தயாரிப்பில் ஆர்வத்துடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்;

வேப்பம் பூ,ஆர்கானிக் கஸ்தூரி மஞ்சள் தூள்,அரச இலைக்குறுத்து, பச்சைத் தேயிலை;ஆவாரம்பூவும் இலையும்,காய்ந்த எலுமிச்சைத் தோல்,கற்றாழைச் சாறு இவைகளைக் கொண்டு பக்கவிளைவுகளற்ற நாப்கின் பேடு தயாரிக்ககமுடியும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது;

இயற்கை இயல் ஆசான் நம்மாழ்வாரின் சுதேசி தற்சார்பு சார்ந்த பாரம்பரியம் காக்கும் இவ்வாறான மருத்துவக் குறுந்தொழில்கள் நாடெங்கும் பரவட்டும்;

மேலும் விபரமறிய:sumathisri@gmail.com      sivakasimarang7@gmail.com


No comments:

Post a Comment