Friday, September 18, 2015

கடகராசி & மீன ராசியினருக்கு வாழ்க்கை தரும் குரு மங்கள யோகம் & தர்மகர்மாதிபதி யோகம்!


கடகராசியில் பிறந்தவர்களுக்கும்,மீன ராசியில் பிறந்தவர்களுக்கும் இந்த மாதம் ஒப்பற்ற மாதம் ஆகும்;ஏனெனில்,இந்த இரண்டு ராசியினருக்கும் தர்மகர்மாதிபதியோகத்தைத் தரும் கிரகங்கள் குருவும்,செவ்வாயும் ஆவர்;

இரு கிரகங்களுமே சிம்மராசியில் இருக்கும் போது உச்சத்துக்குரிய சக்தியுடன் செயல்படுகின்றன;இன்று 18.9.15 முதல் 45 நாட்களுக்கு இவை இரண்டும் இணைந்து சிம்மராசியில் இருக்கின்றன;இந்த 45 நாட்களில் கடகராசியைச் சேர்ந்தவர்களும்,மீன ராசியைச் சேர்ந்தவர்களும் வாழ்க்கையில் ஒர் உன்னதமான லட்சியத்தை அடைவார்கள்;அப்படி அடைவதற்கு குருவும் செவ்வாயும் காரணமாக இருப்பார்கள்;

குரு மங்கள யோகத்தால் நமது பாரத தேசமும்(சுதந்திர ராசி கடகம் என்பதை நினைவில் கொள்க) ஒரு மகத்தான சாதனையைச் செய்யும் அல்லது ஒரு முக்கியமான திருப்புனை கட்டத்தைச் சந்திக்கும்;

பாரத மாதா என்பது அன்னை வராகியே தான் என்பது பல ஆண்டுகளாக மறைத்து வைக்கப்பட்ட ரகசியம்;

நமது நாட்டை நேசிப்பவர்கள் ஒவ்வொருவருமே,தினமும் அன்னை வராகியை வழிபட வேண்டும்;அப்படி வழிபடுவதன் மூலமாக நமது பாரத தேசம் உலகின் சக்தி வாய்ந்த தேசமாக மாறும்;நாம் ஒவ்வொருவருமே செல்வச் செழிப்பு மிக்கவர்களாகவும்,பொருளாதாரத்தில் தன்னிறைவு மிக்கவர்களாகவும் மாறிவிடுவோம்;

ஓம் வராகி சிவசக்தி ஒம்

வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்!!!

No comments:

Post a Comment