Wednesday, September 23, 2015

மனிதன் சமுதாயப் பிராணி என்ற நிலையில் இருந்து,சமுதாய அடிமை!




நாம் பேசுவதை சித்தார்த் கேட்டுக்கொண்டிருக்கிறான் என்ற டயலாக் தனி ஒருவன் என்ற திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது;இதே வேலையைத் தான் நமது செல்போன் பேச்சுக்கள் செய்கின்றன;பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக யாராவது மாநிலம் தழுவிய அளவில் விழிப்புணர்வை உருவாக்கினால்,அந்த பன்னாட்டு நிறுவனங்கள் உடனடியாக அந்த நபரை தொந்தரவோ,கொலை முயற்சியோ செய்வதில்லை;அந்த நபரின் செல் போன் பேச்சுக்களைத்தான் கண்காணிக்கின்றன;

இதுதான் முதலாளித்துவத்தின் கோரமுகம்;இதுதான் உலகமயமாக்கலின் உயிர்மூச்சு;இதுதான் தாராளமயமாக்கலின் சுபாவம்;ஆமாம்! நாம் ஒவ்வொருவருமே நவீன அடிமைகள்! 

நமது சிந்தனைகள்,பேச்சுக்கள்,எழுத்துக்கள்,செயல்பாடுகள் அனைத்தும் பன்னாட்டு நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன;அல்லது பன்னாட்டு நிறுவனங்களால் கண்காணிக்கப்பட்டுவருகின்றன;இதோ இந்த இணையதளமும் அதற்குத்தான் பயன்படுத்தப்படுகின்றன;

No comments:

Post a Comment