Saturday, January 28, 2012

ஜீவ சமாதி அடைந்த சிவபக்தர்

திருத்தணி: கோவை மாவட்டம் தாராபுரம் அடுத்த உத்தமபாளையம் பகுதியில் பிறந்தவர் பழனிச்சாமி, 96. இவர், 56 ஆண்டுகளுக்கு முன்அரக்கோணம் அடுத்த போடிநாயுடுகண்டிகை கிராமத்திற்கு குடிவந்தார். சிவபக்தரான இவர்இக்கிராமத்தில் உள்ள பெருமாள் கோவில் அருகே தங்கிதினசரி ஒரு வீடு வீதம் இங்குள்ள, 30 வீடுகளில் சாப்பிட்டு வந்தார். இவர் தங்குவதற்கென இக்கிராம மக்கள்பெருமாள் கோவில் அருகேஅறை கட்டிக்கொடுத்துள்ளனர். இவர் கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு மந்திரித்தல்ஜோசியம் பார்த்தல் ஆகியவற்றையும் செய்து வந்தார். இந்நிலையில்கடந்த 17ம் தேதி அன்று கிராம மக்களை அழைத்து, "நான் வரும், 20ம் தேதி மாலை, 3 மணிக்கு இறந்து விடுவேன். எனவே எனக்கு, 6 அடி ஆழம், 3 அடி அகலத்தில் பள்ளம் தோண்டி புதையுங்கள்என்றார். இதையடுத்துபெருமாள் கோவில் அருகே ஜீவசமாதி கட்ட பள்ளம் தோண்டப்பட்டது. உயிருடன் இருக்கும்போதே புதைத்தால் கொலை வழக்கில் போலீசார் பிடித்து விடுவார்கள் எனகிராம மக்கள் பயந்தனர். இந்நிலையில் ஏற்கனவே அவர் கூறியதுபோல்அவரது உயிர் இன்று மதியம், 3.05 மணிக்கு பிரிந்தது. இதையடுத்துகிராம மக்கள் முறைப்படி அவரது உடலை புதைத்து ஜீவசமாதி அமைத்தனர். நன்றி:தினமலர் 20.1.12 & நமது அயல்நாட்டு வாசகர்

No comments:

Post a Comment