Monday, December 5, 2011

கடன்களை தீர்த்து,மீண்டும் பொருளாதார உயர்வை எட்டிட உதவும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு



ஸ்ரீசொர்ண பைரவ அஷ்டகம் செல்வச் செழிப்பைத் தரும்;மேலும் தொழிலில் கொடிகட்டிப்பறந்து,தற்போது மீளமுடியாத வீழ்ச்சியடைந்தவர்களை மீண்டும் எழுச்சியடையச் செய்ய வைப்பதும் இதுவே!

ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் படத்தை பூஜையறையில் வைத்துக்கொண்டு,வெல்லம் கலந்த பாயாசம்,உளுந்துவடை,பால்,தேன்,பழங்கள் இவைகளைப்படையலிட வேண்டும்.படையலிட்டுவிட்டு, வில்வ இலைகளால் அர்ச்சித்துக்கொண்டே மூல மந்திரம் ஜபித்து வர வேண்டும்.இந்த வழிபாட்டுமுறையை ஒரு தேய்பிறை அஷ்டமியன்று ஆரம்பித்து,தினமும் இவ்வாறு செய்து வர வேண்டும்.இதன் மூலமாக வீழ்ச்சியிலிருக்கும் தொழில்,வளர்ச்சியை நோக்கிச் செல்லத் துவங்கும்.
உயிரைத் தவிர, அனைத்தையும் இழந்தவர்கள் இந்த உலகில் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள்.அவர்கள்,இப்போது கூறப்படும் வழிபாட்டு முறையைப் பின்பற்றிட,அவசியம் அசைவம் சாப்பிடுவதை கைவிட்டே ஆக வேண்டும்.அவ்வாறு செய்தபின்னரே,இந்த வழிபாட்டை துவக்கிட வேண்டும்.
ஏதாவது ஒரு பவுர்ணமியன்று இரவு எட்டு மணிக்கு ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் படத்தின் முன்பாக தாமரை நூலில் நெய் தீபம் ஏற்றிட வேண்டும்.

இது கிடைக்காதவர்கள்,எந்த எண்ணையிலும்,எந்த நூலிலும் தீபம் ஏற்றலாம்.அவ்வாறு ஏற்றிவைத்துவிட்டு,ஸ்ரீசொர்ண பைரவஅஷ்டகத்தை பதினெட்டு முறை பாராயணம் செய்ய வேண்டும்.இவ்வாறு ஒன்பது பவுர்ணமிகளுக்குச் செய்துவர, இழந்த அனைத்தும் திரும்பக் கிடைப்பதுடன்,தொழிலில் மீண்டும் அசைக்க முடியாத இடத்தை எட்டிட முடியும்.

தவிர,பெரும் செல்வச் செழிப்பில் இருந்தவர்கள்,திடீரென வறுமை புதைகுழிக்குள் வீழ்ந்துவிட்டாலும்,அதிலிருந்து அடியோடு மீண்டு விடலாம்.அதே சமயம்,ஒன்பதாவது பவுர்ணமியன்று அவல் பாயாசம் நைவேத்தியமாகப் படைக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் ஜபித்தபின்னர்,நைவேத்தியத்தை அருகில் இருப்பவர்களுக்கு விநியோகிக்க வேண்டும்.ஒரு பகுதியை நாமும் சாப்பிட வேண்டும்.


ஒரே நேரத்தில் நமது கர்மவினைகள் தீரவும்,அப்படி தீரத் தீர உடனே செல்வ வளமும்,கவுரவமும் கிடைக்க வேண்டுமெனில்,ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்வதே வழி!!

ஓம்சிவசிவஓம்

No comments:

Post a Comment