Friday, December 9, 2011

மறுபதிவு:ஓம்சிவசிவஓம் ஜபிக்க விரும்வோர் செய்ய வேண்டியது என்னென்ன?






21 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.அசைவம் சாப்பிடுவதை அடியோடு நிறுத்திட வேண்டும்.இந்த இரண்டு கட்டுப்பாடுகளை பின்பற்ற முடிந்த எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும்,எந்த ஜாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஓம்சிவசிவஓம் ஜபிக்கலாம்.

எந்த ஒரு மந்திரத்தையும் ஜபிக்க முறைப்படி மந்திர தீட்சை எனப்படும் குரு உபதேசம் கண்டிப்பாக தேவை;ஆனால்,ஓம்சிவசிவஓம் ஜபிப்பதற்கு அதுகூடத் தேவையில்லை என்பது மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின் ஆன்மீக ஆராய்ச்சி முடிவு ஆகும்.


விரைவான மற்றும் சிறந்த பலன்கள் நமக்குக் கிடைக்க வேறுவிதமான வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால்,நமது கஷ்டங்கள் ,சிரமங்கள்,வேதனைகள் எதுவாக இருந்தாலும் அதை தீர்க்க இறை நாம ஜபம் மட்டுமே கலியுகத்தில் உதவும்;வழிகாட்டும்;நிம்மதியையும்,மகிழ்ச்சியையும் தரும் என்பது இந்து தர்ம சாஸ்திர உண்மை.


ஓம்சிவசிவஓம் ஜபிக்க விரும்புவோர் ஒரு மஞ்சள் துண்டு,இரண்டு ருத்ராட்சங்கள்(ஐந்து முகம் எனில் நன்று;வேறு எந்த முக ருத்ராட்சங்கள் கிடைத்தாலும் சம்மதமே!),அருகிலிருக்கும் பழமையான சிவாலயத்திலிருந்து பெறப்பட்ட விபூதி கொஞ்சம் இவைகளை சேகரித்துக் கொள்ள வேண்டும்.
இந்த மஞ்சள் துண்டினை கணவன் மனைவியாக இருந்தால் மட்டும் இருவருமே ஓம்சிவசிவஓம் ஜபிக்க பயன்படுத்திக்கொள்ளலாம்;இந்த மஞ்சள் துண்டினை எக்காரணம் கொண்டும் துவைக்கக் கூடாது;வேறு எதற்காகவும் பயன்படுத்தக்கூடாது;மஞ்சள் துண்டில் பட்டுத்துண்டு எனில் இன்னும் சிறப்பு ஆகும். மஞ்சள் நிறத்துக்கு மந்திரங்களை ஈர்த்து வைத்துக்கொள்ளும் சக்தி உண்டு.அதே சமயம்,மஞ்சள் துண்டினை நீரில் நனைத்தால் அதுவரையிலும் நாம் ஜபித்து சேமித்திருந்த ஓம்சிவசிவஓம் மந்திர அதிர்வுகள் நீரில் அழிந்துவிடும்.
ஏதாவது ஒரு அமாவாசையன்று நமது வீட்டுப்பூஜையறையில் ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஆரம்பிக்க வேண்டும்;நெற்றியில் விபூதி பூசிக்கொள்ள வேண்டும்;இரு உள்ளங்கைகளிலும் ருத்ராட்சம் வைத்து கைகளை மூடிக்கொள்ள வேண்டும்;மனதுக்குள் ஓம் (உங்கள் குல தெய்வம்) நமஹ என்று ஒரு முறையும்,பிறகு ஓம் கணபதியே நமஹ என்று ஒரு முறையும் வேண்டிக்கொள்ள வேண்டும்.அதன் பிறகு,நமது நியாயமான கோரிக்கைகளில் எது அவசியமோ/அவசரமோ/முக்கியமோ அதில் ஒன்றை மட்டும் மனதுக்குள் கேட்க வேண்டும்.யாரிடம்? நமது அப்பா சிவபெருமானிடம் தான்!பிறகு ஓம்சிவசிவஓம் என்று ஜபிக்க வேண்டும்.

முதல் 30 நாட்களுக்கு 10 நிமிடம் மட்டுமே ஓம்சிவசிவஓம் ஜபிக்க முடியும்.அடுத்த 30 நாட்களுக்கு இந்த 10 நிமிடத்தை 20 நிமிடமாக உயர்த்திட வேண்டும்.மூன்றாவது 30 நாட்களுக்கு இந்த 20 நிமிடத்தை 40 நிமிடமாக அதிகரிக்க வேண்டும்.நான்காவது மாதமாகும் முன்பே இந்த 40 நிமிடத்தை 60 நிமிடமாக்கிவிட வேண்டும்.

வெளியூர்ப் பயணம்,மாதவிலக்கு, துக்கவீடு,ருதுவீடு,ஜனன வீடுகளுக்கு அன்றைக்கே சென்றால், அதிகபட்சமாக 5 நாட்களுக்கு ஓம்சிவசிவஓம் ஜபிக்கக் கூடாது.


இந்த மாதிரி நான் ஓம்சிவசிவஓம் ஜபித்து வருகிறேன்.எனக்கு இம்மாதிரியான அனுபவங்கள் கிடைத்தது என்று நீங்கள் உங்கள் வட்டத்தில் பகிர்ந்து கொண்டால்,அடுத்த சில நாட்களுக்கு ஓம்சிவசிவஓம் ஜபிக்க முடியாமல் போகலாம்;அல்லது எப்போதுமே ஓம்சிவசிவஓம் ஜபிக்கவே முடியாமல் போகலாம்.எனவே, ரகசியம் காக்கவும்.

சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அமைந்தால் மட்டும் ருத்ராட்சங்கள் ,விபூதி இல்லாமலும் ஓம்சிவசிவஓம் ஜபிக்கலாம்.தப்பில்லை;தோஷமும் இல்லை;


ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம் ஆறு மாதம் வரையிலும் தினமும் ஓம்சிவசிவஓம் ஒரு லட்சம் தடவை ஜபித்துவிட்டால்,அதன்பிறகு நமது பிறந்த ஜாதகத்தில் இருக்கும் எந்த ஒரு தோஷமும்,பாவமும் செயல்படுவது பெருமளவு குறைந்துவிடும்;அல்லது அந்த கர்மவினை தீர துல்லியமான சரியான வழி கிடைத்துவிடும்.ஒரு லட்சத்துக்குப் பிறகு,ஒரு நாளுக்கு 10 நிமிடம் மட்டுமே ஓம்சிவசிவஓம் ஜபித்தாலே போதுமானது.


ஓம்சிவசிவஓம்





2 comments:

  1. அன்புள்ள ஐயா, தங்கள் மூலம் ''ஓம்சிவசிவஓம்" மந்திரத்தை அறிந்து கொண்டேன், தங்கள் வலை பதிவிலிருந்து எடுத்த அந்த பிரதோஷ
    நோட்டிசை அச்சடித்து விநியோகித்து வருகிறேன், ஆண்டவன் கிருபையால் யாதும் நலமாக உள்ளது

    ReplyDelete
  2. மஞ்சள் துண்டை எந்தவிதத்தில் உபயோகிக்க வேண்டும் என்று தெரிவித்தால் உதவியாக இருக்கும். நன்றிகள்

    ReplyDelete