Wednesday, December 21, 2011

அர்த்தாஷ்டமச்சனி துயரம் நீங்கிட செய்ய வேண்டிய கால பைரவர் வழிபாடு



21.12.11 முதல் டிசம்பர் 2014 வரையிலும் கடக ராசியினருக்கு அர்த்த அஷ்டமச்சனி( அரை அஷ்டமச்சனி) நடைபெறுகிறது.இவர்கள் இந்த அர்த்த அஷ்டமச்சனியால் இவரது தாயாருக்கு உடல் நல பாதிப்பு அல்லது இவர்களுக்கு வண்டி வாகனபாதிப்பை ஏற்படுத்துவார்.இதிலிருந்து மீள்வதற்கு பின்வரும் கால பைரவர் வழிபாடு செய்துவருவது அவசியம்.அதே சமயம்,அசைவம் சாப்பிடுவதை அடியோடு நிறுத்திவிட்டு,இந்த வழிபாடு செய்தால்தான் பலன் உண்டு.
இந்த வழிபாட்டை நமக்கு அருளிய சிவமயம்,ஆன்மீக ஆராய்ச்சியாளர்,எனது மானசீக குரு திரு.மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களுக்கு  கோடி கோடி கூகுள் நன்றிகள்!!!


வெள்ளிக்கிழமை வரும் ராகு காலமாகிய காலை 10.30 முதல் 12க்குள் கால பைரவருக்கு வெண் தாமரை மாலையை சாற்றிட வேண்டும்;புனுகு பூச வேண்டும்;வெண் பூசணி சாம்பார் கலந்த சாதத்தை படையலிட்டுவிட்டு,பைரவரது காயத்ரி மந்திரத்தை 26 தடவை ஜபிக்க வேண்டும்.அல்லது பைரவரது அஷ்டோத்திரம்,பைரவரது சதநாமாவளியை ஜபிக்க வேண்டும்.

சனிப்பிரதோஷ நாட்களான 2.6.12; 16.6.12;13.10.12;27.10.12;23.2.13;9.3.13 இந்த தேதிகளில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் இருக்கும் கால பைரவரை இவ்வாறு வழிபாடு செய்வது உடனடி பலன்களைத் தரும்.இது பல்லாண்டுகளாக நிரூபிக்கப்பட்ட உண்மை.
அல்லது
திருநெல்வேலி திருச்செந்தூர் சாலையில் இருக்கும் ஸ்ரீவைகுண்டம் ஊரில் அமைந்திருக்கும் சிவாலயமானது தென் தமிழ்நாட்டின் நவகைலாசங்களில் ஒன்றாகும்.இங்கு இருக்கும் சிவபெருமான்,சனி பகவானின் அம்சத்தோடு அருள்கிறார்.இங்கு மேற்கூறிய சனிப்பிரதோஷ நாட்களில் கால பைரவர் வழிபாடு செய்வது சிறப்பாகும்.
ஓம்சிவசிவஓம்                        ஓம்ஹரிஹரிஓம்



No comments:

Post a Comment