Friday, December 9, 2011

மாதவிலக்கு மற்றும் மாந்திரீகப்பிரச்னைகளைத் தீர்க்கும் தேரடி முனீஸ்வரர்,சிவகிரி,நெல்லைமாவட்டம்






$ உங்களின் குல தெய்வம் முனீஸ்வரரா?

$ உங்களின் பெயர் முனித் தொடர்புடையதாக இருக்கிறதா?

(உதாரணம்:முனிராஜ்,இசக்கிமுனி,ஜடாமுனி,பாண்டிமுனி,முனீஸ்வரி,முனீஸ்வரன்,முனிரத்ரன்,முனியாண்டி,முனிரத்தினம்,ரத்தினமுனி,ராஜமுனி. . .)

அல்லது

$ உங்களுக்கு/ உங்கள் வீட்டுப் பெண்களுக்கு மாதவிலக்குப் பிரச்னைகள் பல வாரங்களாக/மாதங்களாக/வருடங்களாக இருக்கின்றனவா?

அல்லது

$ உங்களுக்கு/உங்கள் குடும்பத்தாருக்கு மாந்திரீகப்பிரச்னைகள் இருந்து,அதிலிருந்து மீண்டு நிம்மதியாகவும்,நியாயமாகவும் வாழ விரும்புகிறீர்களா?

இவற்றில் ஏதாவது ஒன்றிற்கு ஆம் எனில்,நீங்கள் செய்ய வேண்டியது இது மட்டுமே!

 ஒன்பது வெள்ளிக்கிழமைகளுக்கு நீங்கள் நெல்லை மாவட்டம் சிவகிரிக்கு வர வேண்டும்.சிவகிரி பேருந்து நிலையத்துக்கு அருகில் தேரடி முனீஸ்வரர் கோவில் இருக்கிறது.இங்கே வர வேண்டும்;வந்து வெள்ளிக்கிழமை மாலை 5 மணி முதல் 7 மணிக்குள் பின்வரும் பொருட்களுடன் வந்து படையலிட்டு வழிபட வேண்டும்.வழிபட்டப்பின்னர்,வேறு எந்த கோவிலுக்கும் செல்லாமலும்,யார் வீட்டிற்கும் செல்லாமலும் உங்களுடைய இருப்பிடத்துக்குச் செல்ல வேண்டும்.நியாயமாக வாழ்ந்து வருபவர்களுக்கு உடனடிப்பலனை இந்த வழிபாடு செய்கிறது.தொலை தூர மாவட்டம்/மாநிலம்/நாட்டிலிருந்து வருபவர்கள் மாதம் ஒரு வெள்ளிக்கிழமை அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு வெள்ளிக்கிழமை இவ்வாறு வருகை தந்து வழிபாடு செய்யலாம்.

தேரடி முனீஸ்வரரை வழிபட கொண்டு வர வேண்டிய பொருட்கள்: நான்கு வாழைப்பழங்கள்,பத்திகட்டு,டையமண்டு கல்கண்டு,கற்பூரம் கொஞ்சம்.
இந்த வழிபாட்டை ஆரம்பிக்க அசைவத்தை அடியோடு விட்டுவிட வேண்டும்.முறையற்ற உறவுகளை நீக்கியிருக்க வேண்டும்.வன்மம்,பழியுணர்ச்சி,பொறாமை குணங்களைக் கட்டுப்படுத்தி வேண்டினால்,ஓரிரு தடவைகளில் வழிபாடு செய்ததுமே பலன்கள் கிடைக்கத்துவங்கும்;முயன்று பார்க்கலாமா?

படத்தில் இருப்பது சிவகிரி தேரடி முனீஸ்வரர் சன்னதி***

ஓம்சிவசிவஓம் ஓம்ஹரிஹரிஓம்





No comments:

Post a Comment