Friday, December 9, 2011

சந்திரகிரகண நேரத்தை(10.12.11 சனி மாலை) பயன்படுத்துவோம்




கார்த்திகை மாதம் 24 ஆம் நாள் சனிக்கிழமை மாலை 6.14 முதல் இரவு 9.47 வரையிலும் சந்திரகிரகணம் ஏற்பட இருக்கிறது.ஓம்சிவசிவஓம் ஜபிப்பவர்கள் இந்த நேரம் முழுவதையும் பயன்படுத்திக்கொள்ளவும்.


ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் ஓம்சிவசிவஓம் மந்திர ஜபம் செய்து வருபவர்கள்,இந்த கிரகண நேரத்தில் ஒரே ஒரு முறை ஓம்சிவசிவஓம் ஜபித்தாலே,அவர்கள் பல லட்சம் கோடி தடவை ஓம்சிவசிவஓம் ஜபித்த பலன்களை அடைவார்கள்;மேலும் நமது கர்மவினைகளால் நாம் ஏதாவது ஒரு வழியில் கஷ்டப்பட்டுக்கொண்டிருப்போம்;நமது ஓம்சிவசிவஓம் மந்திர ஜபம் அந்த கஷ்டங்களை குறைக்க ஆரம்பித்திருக்கும்;அதே சமயம்,அடுத்த சில மாதங்கள் கழித்தே நமது கர்ம வினைகள் தீரும் சூழ்நிலை உருவாகும்;ஆனால்,இந்த  கிரகண நேரத்தில் நாம் ஒரு மணி நேரம் ஓம்சிவசிவஓம் ஜபித்தால்,வெகு விரைவாக நமது கர்மவினைகள் தீர்ந்துவிடும்.


தவிர,இந்த கிரகண நேரத்துக்கு முந்தைய மூன்று மணி நேரமும்,பிந்தைய இரண்டு மணி நேரமும் நாம் எதுவும் சாப்பிடாமலிருந்து,இந்த கிரகண நேரத்தில் குறைந்தது பத்து நிமிடம்,அதிகபட்சம் இந்த கிரகண நேரம் முழுவதும் ஓம்சிவசிவஓம் ஜபிக்கும்போது எந்தமாதிரியான மனநிலையை உணர்ந்தீர்கள்? என்பதை மின் அஞ்சலில் எழுதியனுப்பலாமே!


ஓம்சிவசிவஓம்








No comments:

Post a Comment