Friday, July 29, 2011

ஸ்திரி லோலன் எனப்படும் காமவெறியனை ஒழுக்கமுள்ளவனாக மாற்றிய ஓம்சிவசிவஓம்



அந்த இளைஞனுக்கு வயது 22.தனது நண்பனுக்காக ஜோதிடம் பார்க்க அவனுடன் வந்திருந்தான்.அந்த நண்பன் ஜோதிடம் பார்த்ததும்,அந்த இளைஞனுக்கும் தனக்கு ஜோதிடம் பார்க்கும் ஆர்வம் வந்தது.ஓரிரு நாளில் தனியாக வந்தான்.சில ஜோதிடபலன்களைச் சொன்னதும்,இடைமறித்து, ‘நான் ஒழுக்கமாக வாழ ஆசைப்படுகிறேன்.ஆனால்,எனக்கு கன்னியோகம் இருக்குமோ?’ எனக் கேட்டான்.

பொதுவாக முதல்தடவை ஜோதிடம் பார்க்க வருபவர்களுக்கு நெகடிவ்வான விஷயங்களைச் சொல்வதில்லை;ஏனோ,அந்த இளைஞனே தனது பிரச்னையை சொன்னதால்,அவனுக்கு ஜோதிட ஆலோசனை மூலமாக வழிகாட்டும் நிலை ஏற்பட்டது.ஆமாம்!

கன்னியோகம் உங்களுக்கு ஜாலியைத் தான் தருமே! வாழ்க்கையை இளமையோடு அனுபவிக்கலாமே என ஒரு பிட்டைப் போட்டேன்.

அதற்கு அந்த இளைஞன், “நீங்கள் சொல்வது நிஜம்தான்.ஆனால்,என்னால்,எனது அனுபவங்களை நண்பர்களிடம் சொல்லாமல் இருக்க  முடியவில்லை;இதனால்,என்னை எந்த நண்பனும்,உறவினரும் அவரது வீட்டுக்குள் வர விடுவதில்லை;எனக்கு அவமானமாக இருக்கிறது.எனவே,ஒரே ஒரு பெண்ணை விரும்பி,அவளுடன் மட்டுமே வாழ விரும்புகிறேன்” என சொன்னான்.அந்த இளைஞனின் பேச்சில் யதார்த்தமும்,குற்ற உணர்ச்சியும் உண்டானது.ஆனால்,அவனது ஜாதகத்தில் இன்னும் 14 ஆண்டுகளுக்கு கன்னியோகம் இருக்கிறது.விதியை எப்படி என்னால் மாற்றிட முடியும்? என யோசித்தேன்.
உங்களால் நாளை காலை 11 மணிக்கு சரியாக வந்து என்னைப் பார்க்க முடியுமா? எனக் கேட்டேன்.

அந்த இளைஞனும், “நீங்கள் என்ன சொன்னாலும் செய்கிறேன்.எல்லோரும் என்னைப் பற்றி நான் இல்லாதபோது கூட மரியாதையாகப் பேச வேண்டும்.எல்லோரின் வீட்டு விழாக்களிலும் சகஜமாகக் கலந்து கொள்ள வேண்டும்.அதற்கு மட்டும் வழி செய்யுங்கள்.எனக்கு கன்னி யோகம் வேண்டாம்” என உறுதியான குரலில் கெஞ்சினான்.

நாளைக்கு வரவும் என கூறிவிட்டு,அனுப்பிவிட்டு,அவனது ஜாதகத்தை அன்றிரவு சுமார் ஒரு மணி நேரம் வரையிலும் ஆராய்ந்தேன்.ஒரு சூட்சும வழி புலப்பட்டது.

மறுநாள்,ஓம்சிவசிவஓம் மந்திரத்தை தினமும் ஒரு மணி நேரம் வீதம் ஓராண்டு வரையிலும் ஜபிக்கும்படியும்,குறிப்பிட்ட நிறத்தில் இருக்கும் பட்டு ஆடையை தயார் செய்து அதைப் பயன்படுத்தி,ஓம்சிவசிவஓம் ஜபிக்கும்படி வழிகாட்டினேன்.

இரண்டு மாதங்கள் கடந்தன.மூன்றாம் மாதத்தில் ஒரு நாள் அந்த இளைஞன் உற்சாகமாக ஓடி வந்தான்.
“நீங்கதான் எனது வாழ்நாள் குரு! எனக்கு திருமணம் நிச்சயமாகி விட்டது.அதுவும் நான் எப்படியெல்லாம் எதிர்பார்த்தேனோ,அதே தகுதிகள்,அழகு,புத்திசாலித்தனம்,சுபாவம் இருக்கும் பெண்ணே எனக்கு மனைவியாக அமைந்துவிட்டாள்.இப்போது நான் ஒரு நாளுக்கு இரண்டுமுறை ஓம்சிவசிவஓம் ஜபித்துவருகிறேன்.இப்போது என்னை எல்லோரும் மதிக்கிறார்கள்.யாரும் என்னைப் புறக்கணிப்பதில்லை;எங்கே எதைப் பேச வேண்டுமோ,அதை மட்டுமே பேசுகிறேன்.எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது.ரொம்ப நன்றிகள்” என படபடவென பேசிவிட்டு,எனது பதிலுக்கு காத்திராமல் போயே விட்டான்.
ஓம்சிவசிவஓம்

5 comments:

  1. //என படபடவென பேசிவிட்டு,எனது பதிலுக்கு காத்திராமல் போயே விட்டான்.//

    அப்ப பட படப்பு குறைய வில்லை எனில் ஓம்சிவசிவஓம் வேலை செய்ய வில்லை என்று தானே அர்த்தம் :)

    //அவனது ஜாதகத்தில் இன்னும் 14 ஆண்டுகளுக்கு கன்னியோகம் இருக்கிறது//
    அனுபவிக்க தெரியாத பயல்....உங்களை வந்து பார்த்து இருக்க கூடாது...என்னை வந்து பார்த்து இருக்கனும் :)

    கிருஷ்ணா நாவை நாம் பரமாத்மா என்று சொல்லுகிறோமே....அவன் பல பெண்களோடு வாழ்ந்தவன்....

    யார் யார்க்கு எதை அனுபவிக்க பிறந்து இருக்கிறார்களோ அதை நன்றாக அனுபவிக்க வேண்டும்
    இந்த பிரபஞ்சத்தில் பூமியை படைத்த கடவுள் எவ்வளவு அழகை இங்கே கொட்டி வைத்து உள்ளான்....
    அதை 22 வயதில் அனுபவிக்காமல்...62 வயதிலா அனுபவிக்க முடியும்??

    எதை செய்தாலும் ஒரு விழிப்புணர்வுடன் செய்ய வேண்டும்....அது தான் ஆன்மிகம் :)

    ReplyDelete
  2. kanniyogam endraal enna? adhai jadhagathil eppadi kandupidippadhu?

    ReplyDelete
  3. ஏய்யா,, உன்னோட பதிலுக்கே காத்திராம ஓடறான், அவன் உன்னை குருன்னு சொல்லிருக்கான். கிறுக்கு பயபுல்லையே.

    ReplyDelete
  4. kanniyogam endral enna? adhai eppadi therindhu kolla mudiyum?

    ReplyDelete
  5. நிஜச்சம்பவங்களை அப்படியே சொல்லக் கூடாது என்பது பத்திரிகை தர்மம்.திட்ட ஒரு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்தமைக்கு நன்றி சொல்லுங்கள்;

    ReplyDelete