Tuesday, July 5, 2011

மீண்டும் சனியும் செவ்வாயும் பார்க்கும் நிலை



ஜோதிடப்படி,செவ்வாயானது நெருப்புக் கோளாகும்.சனியானது காற்றுக் கோளாகும்.காற்றும் நெருப்பும் சேர்ந்தால்?

30.11.2011 வரையிலும் கன்னிராசிக்காரர்களுக்கு ஏழரைச் சனியில் ஜன்மச்சனியும்,கும்பராசிக்காரர்களுக்கு அஷ்டமச்சனியும் நடைபெற்றுவருவதால்,அவதிப்படுவது அனைவரும் அறிந்ததே.இவர்களுக்கு 30.11.2011 வரையிலும் நிம்மதி என்பதே கிடையாது எனக் கூறலாம்.

இந்நிலையில் 24.7.2011ஞாயிறு முதல் 10.9.2011 சனிக்கிழமைவரையிலும் மிதுனராசிக்காரர்களும்,கன்னி ராசிக்காரர்களும்,கும்ப ராசிக்காரர்களும் சனி செவ்வாய் பார்வைகளால் ஏதாவது ஒரு தேவையில்லாத வம்புச்சண்டையில் சிக்கும் வாய்ப்பு இருக்கிறது;அல்லது எதிர்பாராத விபத்தில் அல்லது புதிய குடும்பச்சண்டையில் ஈடுபட வாய்ப்பிருக்கிறது.

யார் தினமும் ஏதாவது ஒரு கோயிலுக்குப் போய்வருகின்றார்களோ அவர்களுக்கு இந்த பாதிப்பு மிகவும் குறைவாக இருக்கும்.
யார் தினமும் ஓம்சிவசிவஓம் ஜபித்துவருகிறார்களோ அவர்களுக்கு இந்த பாதிப்பு இராது.
யார் தினமும் ஏதாவது தியானமுறையைப் பின்பற்றுகிறார்களோ அவர்கள் நிம்மதியாக இருப்பார்கள்.
ஓம்சிவசிவஓம்

No comments:

Post a Comment