Sunday, July 17, 2011

திருச்சியில் நியூரோதெரபி டாக்டர் பா.விஜய் ஆனந்த்

எனக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக மன அழுத்தம் இருந்தது.மனதிற்குள் இப்போது செய்யும் வேலையில் கவனமாக இருப்பதற்குப்பதிலாக,அடுத்த வேலையை எப்போது துவங்குவோம்? என்ற பதட்டம் இருந்தது.



எனது நண்பரும்,டாக்டருமாகிய பா.விஜய் ஆனந்த் அவர்களை தற்செயலாக சந்தித்தேன்.எனக்கு மருத்துவ ஆலோசனை கேட்டேன்.



அவர் எனது இரண்டு உள்ளங்கைகளையும் அகல விரிக்க வைத்துப் பார்த்தார்.உங்களுக்கு வயிற்றில் பிரச்னை இருக்கிறது.அதுவும் மிகக் கடுமையாக இருக்கிறது என்றார்.இரண்டு பகல்கள் அவரோடு தங்கினேன்.முதல் நாள் எனது கால்விரல்களில் ஒருவித சுளுக்கு எடுத்தார்.எடுத்த ஒரு மணி நேரத்தில் உடலுக்குள் ஏதோ ஒரு மாற்றம் உண்டானது.மறுநாள்,என்னை குப்புறப் படுக்க வைத்து,எனது கீழ்முதுக்குப்பகுதியில் சில இடங்களில் மிதித்து சிகிச்சையளித்தார்.வலியில் கதறினேன்.இருந்தும் அவர் விடவில்லை.சுமார் 30 நிமிடங்கள் வரையிலும் நரக வேதனைதான்.அதன்பிறகு,எனது உணவுப்பழக்கத்தில் சில மாறுதல்களைச் செய்யும்படி ஆலோசனை தெரிவித்தார்.



அடுத்த சில நிமிடங்களில் எனது இரண்டு ஆண்டு மன உளைச்சல் அடியோடு நீங்கியது.இப்போது முன்பை விட வேகமாகவும்,கவனமாகவும் எனது பணிகள்,சேவைகளைத் தொடருகிறேன்.நியூரோதெரபிக்கு நன்றிகள்!!!



டாக்டர் பா.விஜய் ஆனந்த்,திருச்சி செல் எண்:81248 79155.

1 comment:

  1. please give correct details .because many users are reading dont make hem fools.stop giving false ideas

    ReplyDelete