Friday, May 13, 2011

நேருவுக்குப் புரியாத ராணுவ நம்பிக்கை





இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்துவிடும் என்பது உறுதியானவுடன்,இந்திய ராணுவத் தலைமைத் தளபதியைத் தேர்வு செய்வதற்காக நேரு தலைமையில் ஒரு கூட்டம் கூட்டப்பட்டது.

நீண்ட ஆலோசனைக்குப்பின்,நேரு சொன்னார்:

“ஆங்கில அதிகாரி ஒருவரிடம்,இந்தியாவின் ராணுவத் தலைமைத் தளபதி பொறுப்பை ஒப்படைத்துவிடுவோம்.ஏனென்றால்,நம்மவர்களுக்கு,ராணுவத்தை நடத்திச் செல்வதற்குப் போதுமான அனுபவம் கிடையாது”என்றார்.கூட்டத்திற்கு வந்த அனைவரும்,இந்தக் கருத்தை ஏற்றுக் கொண்டனர்.

ஆனால்,ஒரு ராணுவ அதிகாரி மட்டும், “ஐயா,ஒரு வேண்டுகோள்”என நேருவிடம் கூறிவிட்டு,

“இந்த நாட்டை நல்ல முறையில் ஆட்சி நிர்வாகம் செய்வதற்குக் கூட நம்மவர்களுக்குப் போதுமான அனுபவங்கள் இல்லை.ஆகையால்,நம் இந்தியாவின் முதல் பிரதமராக ஒரு ஆங்கிலேயரை நியமித்துவிடலாமா?” என உறுதியான குரலில் கேட்டார்.

கூட்டத்தில் அதிர்ச்சியும்,அமைதியும் நிலவியது.நேரு வழக்கத்துக்கு மாறாக கோபப் படாமல்,

“இந்தியாவின் ராணுவத்தின் தலைமைத் தளபதிப் பதவியை ஏற்பதற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?”எனக் கேட்டார்.

ஆனால்,அந்த ராணுவ அதிகாரியோ, “எனக்கு வேண்டாம்.எங்கள் உயர் அதிகாரியாகிய லெப்டிணெண்ட் ஜெனரல் கரியப்பா தான் இந்தப் பொறுப்புக்கும்,இங்குள்ளவர்களுக்கும் பொருத்தமானவர்”என்றார்.

பிரதமரின் கருத்துக்கு எதிராக இப்படி கருத்து தெரிவித்தவர் லெப்டிணெண்ட் ஜெனரல் நட்டுசிங் ரத்டோர்.சுதந்திர இந்தியாவின் முதல் ராணுவ லெப்டிணெண்ட் ஜெனரல்!!!

No comments:

Post a Comment