Tuesday, August 17, 2010

மூலிகைகள் பற்றிய யதார்த்தங்கள்

மூலிகைகளைப் பொறுத்தவரையிலும் வில்வம்,துளசி இவைகள் பொடிகளாகவே கதர்க்கடைகளில் கிடைக்கின்றன.அவற்றை தினமும் காலையில் பல்துலக்கிவிட்டு,வெறும்வயிற்றில் சாப்பிட்டுவருவது மிகுந்த நன்மையளிக்கும்.அப்படி வெறும் வயிற்றில் சாப்பிட்டாலும்,சாப்பிட்டு அரைமணிநேரம் வரையிலும் காபி டீ,குளிர்பானங்கள்,ஹார்லிக்ஸ் முதலான சூடான பானங்கள் சாப்பிடாமலிருப்பதும் அவசியம்.

சில மூலிகைப்பொடிகளை தேனிலும்,சிலற்றை சூடான பாலிலும் கலந்து அருந்தவேண்டியிருக்கும்.வில்வம்,துளசி முதலானவற்றைச் சாப்பிடும்முன்பு,உங்களுக்கு நீண்டநாட்கள் தெரிந்த சித்த அல்லது ஆயுர்வேத வைத்தியரிடம் ஆலோசனை கேட்டுச் சாப்பிடுவது அவசியம்
.

No comments:

Post a Comment