Wednesday, August 4, 2010

ஒரு இந்துச்சம்பிரதாயம்


ஒரு இந்துச்சம்பிரதாயம்

தமிழ்நாடு மாநிலம்,தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகில் இருக்கும் ஊர் எட்டயபுரம்.இங்குதான் ஆங்கிலேயனை எதிர்த்துப்போரிட்ட கட்டபொம்மன் மகாராஜா வாழ்ந்தார்.இவரை காட்டிக்கொடுத்த எட்டப்பனும் இதே பகுதியில்தான் வாழ்ந்தான்.

எட்டப்பனின் செய்கையை மறக்காமலிருக்கும்பொருட்டு,இப்பகுதி மக்கள் ஒரு சிறு காரியம் செய்துவருகின்றனர்.

எண்களை எண்ணும்போது ஆறு,ஏழு,எட்டு என நாம் பொதுவாகக் குறிப்பிடுவோம்; ஆனால்,எட்டயபுரம் மக்கள் ஆறு,ஏழு,மகாராஜா,ஒன்பது என்றே இன்றும் குறிப்பிட்டு வருகின்றனர்.

அதே போல்,எண்பது என்பதை மகாராஜா பத்து என்றும்,

எண்ணூறு என்பதை மகாராஜாநூறு என்றும்,

எட்டாயிரம் என்பதை மகாராஜா ஆயிரம் என்றும் பயன்படுத்திவருகின்றனர்.

இவர்களைப்போன்ற ராஜவிசுவாசம்மிக்க மக்கள் இருக்கும்வரை நமது பாரதப்பண்பாட்டை இந்த உலகமே எதிர்த்தாலும் யாராலும் அழிக்க முடியாது.

ஆதாரம்:ஆகஸ்டு,1982ஆம் ஆண்டில் வெளிவந்த ஆனந்த விகடன்.

No comments:

Post a Comment