Monday, August 16, 2010

பாரதத்தின் பெருமையைப் பறைசாற்றும் மாவட்ட ஆட்சியாளர்


நம் தேசத்தின் பெருமையை பறைசாற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர்

இந்தியாவின் சுதந்திர தின இந்நாளில் நம் தேசத்தின் விடுதலைக்காகபாடுபட்ட அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் அனைத்து தமிழ்மக்களின்சார்பில் என்றும் மறவாத நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.இந்திய சுதந்திர போராட்டத்துக்காக பாடுபட்ட அத்தனை நல்லஉள்ளங்களையும் நினைவு கொள்ளும் இந்த நாளில் பெற்ற சுதந்திரத்தைசத்தியமான வழியிலும் நேர்மையான வழியிலும் கொண்டு செல்லும்ஒரு மனிதரைப்பற்றிய சிறப்புப்பதிவு.
மக்களுக்கு அரசாங்கத்தால் கிடைக்கும் பலன்கள் இடைத்தரகர்கள்யாரும் இல்லாமல் நேரடியாக செல்ல வேண்டும் என்பதில் இவருடையமுயற்சி தெரிகிறது. ஆங்கிலம் பேசிக்கொண்டு வருபவரிடம் தான்பேசுவோம் என்ற எந்த பந்தாவும் இல்லாமல் ஒரு விவசாயிகூட மாவட்ட ஆட்சித்தலைவரிடம் நேரடியாக பேசலாம் என்றபாதையை வகுத்தவர். லஞ்சம் என்ற ஒன்று தன் மாவட்டத்தில்எங்குமே காணமல் செய்ய வேண்டும் என்பதற்கு முன் உதாரணமாகதிகழ்பவர். ஒரு மாவட்டத்தில் நடக்கும் அத்தனை புகார்களையும்ஆன்லைன் மூலம் உடனுக்குடன் தன் கவனத்துக்கு கொண்டு வரவேண்டும் என்ற நோக்கில் இணையதளம் மூலம் புகார் செய்யும்முறையை அறிமுகப்படுத்தி புதுமைக்கு வித்திட்டவர் மட்டும்அல்லாமல் 1450 புகார்களுக்கு தீர்வும் அளித்துள்ளார்.நாமக்கல் மாவட்ட மக்கள் ஆன்லைன் -ல் புகார் அளிக்கவேண்டிய இணையதள முகவரி :
http://namakkalcollector.netதன் வங்கி சேமிப்பு 7,172 ரூபாய் என்பதை வெட்ட வெளிச்சமாகஅனைவருக்கும் காட்டியவர். விவசாயிகளிடம் சென்று அவர்களிடம்நேரடியாக பேசி பிரச்சினைகளை தீர்க்க வழி செய்வது இன்னும்சொல்லிக்கொண்டே போகலாம் இத்தனை புகழுக்கும் சொந்தகாரர்நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சகாயம் அவர்கள், எளிமை,அன்பு ,பணிவு , கனிவு என்ற மூன்றும் நாம் இவரிடம் இருந்துகற்றுக்கொள்ள வேண்டியது. இந்த சுதந்திர தின நாளில் சத்தியத்தையும்,நேர்மையையும், தேசப்பக்தியையும் வாழ்வின் ஆதாரமாக கொண்டுவாழும் இந்த மாவட்ட ஆட்சித்தலைவருக்கு வின்மணியின் சார்பிலும்நம் அனைத்து நண்பர்களின் சார்பிலும் சல்யூட். நன்றி ஐயா என்றும்நாங்கள் உங்களோடு வேராக இருந்து உங்களின் அனைத்துமுயற்சிக்கும் பக்கபலமாக இருப்போம்.

1 comment:

  1. ஆனால் இவருக்கு சிறந்த மாவட்ட ஆட்சியர் விருது வழங்க படவிலையே ??? ..

    ReplyDelete