Thursday, May 21, 2009

வைரங்களும் அவற்றின் குணங்களும்











வைரங்களும் அவற்றின் குணங்களும்
1.ஈகாபதி வைரம்:இதன் அலைகள் மனதை ஒருமுகப்படுத்தும். துறவிகளில் ராஜயோகிகள் இதை அணிந்து கொள்வர்.

2.பீங்கள வைரம்: இது மிக அபூர்வமான வைரம்.இளமையை ஈர்க்கும் காந்த அலைகளை வெளியிடும்.இதை யார் அணிந்திருக்கிறார்களோ அவரை ஏராளமானவர்கள் விரும்புவர்.

3.தனஞ்ஜெய வைரம்: இது அதிருஷ்டம் தரும்.

4.வஜ்ராவத வைரம்: இது மன உறுதியை அணிந்திருப்பவர்களுக்குத் தரும்.ராமாயண காலத்தில்- இலங்கை அசோகவனத்தில் சிறை பட்டிருந்த சீதைக்கு அனுமன் தந்தது இந்த ரக வைரத்தைத் தான்!!! இது கற்பகமரக்கரியில் 10,000 ஆண்டுகள் கர்ப்பத்தில்(புவி அழுத்தத்தால்)உண்டாகும்.

5.பூதேஷி வைரம்: இது அசாத்திய வல்லமை உடையது.இதை இனங்காண்பது கடினம்.
சில சீனர்கள் இதை மட்டுமே வணங்குவர்.எவருக்கு பிறந்த ஜாதகத்தில் குருச்சந்திரயோகம்-முழுமையாகவும்-எந்த வித தோஷமின்றியும் உள்ளதோ அவரை இந்த வைரம் தானாகவே அடைந்துவிடும்.வேறு எவரிடமும் தங்காது.

6.ருத்ரமணிவைரம்: இதை மாந்தீரீக முறைப்படி இதில் குறிப்பிட்ட விதமாக பட்டைதீட்டினால்,இது கொலை வெறியைக் கிளப்பும்.

7.அபேத வைரம்:இதன் ஒளி திருஷ்டியை நீக்கும்.இது நல்லவர்களிடம் இருக்கும்போது நன்மைகளையும் கெட்டவர்களிடம் இருக்கும்போது தீமைகளையும் அணிந்திருப்பவருக்குத்தரும்.

8.சாளக்கிராமவைரம்: இதை விஷ்ணுவின் விழி எனக்கூறுவர்.செல்வத்தின் அதிதேவதை மகாலஷ்மி தாண்டவமாடுவாள்.இதை அணிவதை விட வழிபடுவதே மிக நன்று.வட நாட்டில் உள்ள பட்டோடி,அம்பானி,குல்கர்னி,தாண்டன்,டாடா,பிர்லா இவர்களின் குலதெய்வங்கள் வாழும் கோவிலில் இந்த வைரங்கள் கொண்டு ஸ்தாபிதம் செய்யப்பட்டுள்ளன.மிகக் கடினமான பூஜைகள்,பூசாரி அனுஷ்டானங்களைப் பின்பற்ற வேண்டும்.

9.ஆதித்யவைரம்: புத்தொளி,தன்னம்பிக்கையூட்டும்.குளிர்ச்சியான(சீதள)மனித உடலை உஷ்ணம் நிறைந்த உடலாக்கிவிடும்.

10.ஜலபாண வைரம்:இது மிகுந்த யோகமுடையது.இந்த வைரத்தை அணிபவர் ஒரே நேரத்தில் ஐந்து பெண்களைக்கூட படுக்கையில் திருப்திபடுத்த முடியும்.உடலின் நரம்பு மண்டலம்,இதய மண்டலத்தின் வலிமையை பல மடங்கு அதிகரிக்கச்செய்யும்.
பொதுவாக நவக்கிரகங்களில் சந்திரனின் ஆதிக்கம் பெற்ற நவரத்தினக்கல் வைரம் ஆகும்.ஜோதிடப்படி, சந்திரனே மனிதனின் மனம் செயல்படக்காரணமாகிறான்.ஒருவர் பிறந்த ஜாதகத்தில் சந்திரன் இருக்குமிடத்தை வைத்தே அந்த ஜாதகரின் சுபாவத்தை அறியமுடியும்.
ஒருவரது ஒழுக்கம், மன உறுதி, சிந்திக்கும் தன்மை இவற்றையும் சந்திரனின் நிலையைக்கொண்டு அறியலாம்.
ஜாதகப்படி,எப்பேர்பட்ட பாவமுள்ள ஜாதகமாக இருந்தாலும் மேற்கூறியுள்ள வைரங்கள் மனிதனின் சிந்தனையில் மிகப்பிரம்மாண்டமான மாற்றத்தை நிச்சயம் உண்டுபண்ணும் என்பது அனுபவ உண்மை.வாழ்க வளமுடன்!!!






























No comments:

Post a Comment