Thursday, May 14, 2009

வெள்ளைக்காரர்களை ஆச்சரியப்படவைக்கும் இந்து நுண்கலைகள்


வெள்ளைக்காரர்களை ஆச்சரியப்பட வைக்கும் இந்து நுண்கலைகள்

உங்களுக்குத் தெரியுமா? உலகில் பல நாடுகள் நமது இந்துயாவின் புராதனம்,பழமையான கலைகள்,அவற்றில் புதைந்துள்ள அதிமேதாவித்தனம் கண்டு மிரண்டுபோயிருக்கின்றன.அவை எவையென்றால்,ஜோதிடம்,வாஸ்து,பஞ்சபட்சி சாஸ்திரம்,சாமுத்ரிகா லட்சணம்,மாந்திரீகம்,சகுனம் என்ற நிமித்திகம் இவைகள்தான்.இவற்றில் ஏராளமான நன்மைகள் (மனிதகுலத்திற்குத் தேவையானவை) நிரம்பியுள்ளன.இதனால இவற்றைப்பற்றி ஆராய சுவிடசர்லாந்தில் வேதிக் ஸயன்ஸ் என்ற பெயரில் 20 ஐரோப்பியநாடுகள் ஒன்று சேர்ந்து ஆண்டுக்கு 100 கோடி யூரோக்கள் கொடுத்து இக்கலைகளை ஆராய்ந்து வருகின்றன.கி.பி.1700 முதல் இன்று வரை ஜெர்மனி,இங்கிலாந்து,அமெரிக்கா,சுவிட்சர்லாந்து நாடுகள் இவற்றை ஆராய்ந்து கொண்டே இருக்கின்றன.நாம் சுதந்திரம் அடைவதற்கு சில காலம் முன்பு,தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் உள்ள சரபோஜி நூலகத்திலிருந்து சில லட்சக்கணக்கான ஓலைச்சுவடிகளை இங்கிலாந்து தனி கப்பலில் தனது நாட்டிற்குக் கொண்டுசென்றது.
சமஸ்கிருதத்திலும் ஆங்கிலத்திலும் தேர்ச்சி பெற்ற பண்டிதர்களை(இக்காலத்தில் புரபசர்) இங்கிருந்து இங்கிலாந்திற்கு நிரந்தரக் குடியுரிமை கொடுத்து அழைத்துச் சென்றுவிட்டனர்.
அந்த ஓலைச்சுவடிகளில் இருப்பதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வேறொரு நிபுணர்குழு மூலமாக மொழிபெயர்ப்பை சரிசெய்கின்றனர்.துல்லியமாக மொழி பெயர்த்திருந்தால் மூலப்பிரதியான ஓலைச்சுவடியை எரித்துவிடுகின்றனர்.இதுதான் இன்றுவரை நடைபெறுகிறது.
இப்படி நமது அறிவுச்செல்வங்களை இங்கிலாந்து களவாடி உருவாக்கப்பட்டவையே எண்ஜோதிடம் எனப்படும் நியூமராலஜி, ரேடாரில் சிக்காத விமானம் மற்றும் பல.

ஒரு மனிதன் பிறந்த நேரத்தில்-பிறக்கும் இடத்தைப் பொருத்து அவனை நவக்கிரகங்கள் ஆட்சி செலுத்துகின்றன.மனிதனுக்கும் நவக்கிரகங்களுக்கும் உள்ள தொடர்பை விவரிப்பது ஜோதிடம்.
ஒருவனது பிறந்த ஜாதகத்தில் எந்தக்கிரகம் வலிமையாக இருக்கிறதோ அதைக்கண்டறிந்து அந்த மனிதன் சில குறிப்பிட்ட கிழமை,நவரத்தினக்கல்,நிறமுள்ள ஆடைகளைப் பயன்படுத்தி வாழ்வில் ஜெயிக்க வழிகாட்டுவது தந்திரா சாஸ்திரம்.
ஒருவன்/ள் பிறந்திருப்பது வளர்பிறை அல்லது தேய்பிறை என்பதைக் கண்டறிந்து, 15 நாட்களில் குறிப்பிட்ட நேரத்தைப்பயன்படுத்தி ஜெயிக்க உதவும் சூட்சுமக் கலையே பஞ்சபட்சி சாஸ்திரம்!!!
ஒருவன் பிறந்த நட்சத்திரத்தைக்கண்டறிந்து அவனுக்கு குறிப்பிட்ட நட்சத்திரம் நிற்கும் நாளில் தியானம் சொல்லிக்கொடுத்து அவனது பாவங்களை அழித்து அவனை வாழ்வின் எந்த துறையிலும் அல்லது அவன் விரும்பும் துறையில் ஜெயிக்கவைக்க வழிகாட்டுவது சரக்கலை!!!
சரக்கலைக்கு மிஞ்சியகலை இவ்வுலகில் கிடையாது.
இக்கலைகளில் முழுத்திறமைவாய்ந்தவர்களே ரோமரிஷியும், அகத்தியரும்.,காகபுசுண்டரும்.
அதனால்தான் இவர்கள் பல லட்சம் ஆண்டுகள் இந்த பூமியில் வாழ்ந்துவருகிறார்கள்.

No comments:

Post a Comment