Wednesday, May 27, 2009

மீண்டும் வல்லரசாகும் இந்தியா


மீண்டும் வல்லரசாகும் இந்தியா

ஆமாம்!!! கி.பி.1700 வரையிலான 20,000 ஆண்டுகளுக்கு இந்த பூமிக்கு ஒரே வல்லரசாக நமது இந்துயா இருந்தது.ஆங்சன் மடிசன் எழுதியுள்ள வர்ல்டு எக்கானமி-எ மில்லினியல் பெர்ச்பெக்டிவ் என்ற புத்தகம் 2007 இல் வெளியானது.இப்புத்தகம் பலரின் கண்களைத் திறக்கும் விதமாக இருக்கிறது.கி.பி.1700 ஆம் ஆண்டு வாக்கில் இந்தியாவும் சீனாவும் சேர்ந்து உலக பொருளாதாரத்தில் ஏறத்தாழ சரிபாதி பங்களிப்பைக் கொண்டிருந்தது.அதாவது இந்துயாவின் பங்களிப்பு 25% ஆகவும் சீனாவின் பங்களிப்பு 22% அளவிற்கும் இருந்தது.கி.பி.1820 லும் இதே நிலைதான் தொடர்ந்தது.அச்சமயத்தில் இன்றைய ஜப்பான் நமது நாட்டிடமிருந்து ஸ்பின்னிங் டெக்னாலஜியை இறக்குமதி செய்துள்ளனர்.கி.பி.1950 வாக்கில் இந்த இரு நாடுகளின் உலகப்பொருளாதாரப்பங்களிப்பு 9% ஆகக் குறைந்துவிட்டது.நாம் 4% ஆகவும், சீனா 5% ஆகவும் சிறுத்துவிட்டது.

அமெரிக்கப்பொருளாதரம் நுகர்வை மையமாகக்கொண்டது.அங்கு மக்கள் தொகை இன்று 27.5.2009 30 கோடி.ஆனால் மொத்த அமெரிக்கர்களும் பயன்படுத்தும் கடன் அட்டை அதாங்க க்ரெடிட் கார்டுகள் 120 கோடி.ஒரு அமெரிக்கனுக்கு சராசரியாக 3 கிரெடிட் கார்டு.பிறகு எப்படி அமெரிக்கா உருப்படும்?அவர்களின் தனிமனித சேமிப்பு வெறும் 2% மட்டுமே!
ஆனால் நாம்?!
உலகிலேயே அதிகமான தனிநபர் சேமிப்பைக் கொண்டுள்ள முதல் நாடு நாம்தான்.எவ்வளவு தெரியுமா? 35% அதாவது சேமிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை சுமார் 40 கோடி.
அமெரிக்க மக்கள் தொகையை விட இந்திய டீன் ஏஜ்களின் எண்ணிக்கை அதிகம்.1.1.2009 அன்று 25 கோடி இளம் இந்தியர்கள் உள்ளனர்.இளைஞர்களின் மொத்த எண்ணிக்கை 40 கோடிகள்.(உலக ஆரோக்கிய அமைப்பின் மதிப்பீட்டின் படி 35 வயது வரை ஒருவர் இளைஞர்தான்).இந்த டீன் ஏஜகளின் எண்ணிக்கை 1.1.2020இல் 60 கோடிகளாகிவிடும்.யோசியுங்கள்.
இது தவிர நம் நாடு வல்லரசாவதற்கு வேறு பல காரணங்கள் உள்ளன.அவற்றை சேகரித்துக்கொண்டிருக்கிறேன்.சில நாட்கள் பொறுங்கள்

No comments:

Post a Comment