Thursday, May 28, 2009

இந்துயாவில் மட்டும் ஏன் இவ்வளவு சித்தர்கள் மகான்கள் பிறந்துகொண்டே இருக்கிறார்கள்?


இந்தியாவில் மட்டும் ஏன் இவ்வளவு சித்தர்கள் பிறந்துகொண்டே இருக்கிறார்கள்?

ஜெருசலம்,அரேபியாவில் ஏசு பிரான் பிறந்தார்.மெக்காவில் நபிகள் நாயகம் பிறந்தார்.அதோடு சரி! அதன் பிறகு உலகில் எந்தநாட்டிலும் ஒரு மகான் கூடப் பிறக்கவில்லை.அமெரிக்காவில் திடீரென நான் தான் ஏசு என யாராவது கிளம்பினால் உடனே அமெரிக்க அரசு அந்த ஆளைத் தீர்த்துக்கட்டிவிடுகிறது.ஆனால், அமெரிக்கா கத்தோலிக்க கிறிஸ்தவ நாடு.கி.பி.2000 வாக்கில் ஏசு பூமிக்கு நேரில் வருவார் என்பதை நம்பும் நாடு.

உலகம் நாகரீகத்தின் உச்சம் பல இடங்களில் பரவியிருந்தாலும் முழுமை பெற்ற நாகரீகத்தின் உருவம்,வேதத்தில் தென்படுகிறது எனக்கூரியுள்ளார் மாக்ஸ்முல்லர்.இந்த ஆள் ஜெர்மன்காரன்.நமது வேதம்,இந்துமதம் இவற்றைப்பற்றி ஏராளமாக ஆராய்ச்சி செய்திருந்தாலும் திராவிடம் ஆரியம் என்ற அண்டப்புளுகை உருவாக்கியவன் இவனே!

இவனைத்தவிர கீத்,ப்ளூம் பீல்ட்,மாக்டனல்,விந்தர்நிட்ஸ் போன்றவர்கள் நமது வேதத்தின் தொன்மைகளை ஆராய்ந்து ஏராளமாக எழுதியுள்ளனர்.இவர்களது படைப்புகள் அனைத்தும் இன்றும் இங்கிலாந்தில் உள்ள இந்தியா ஆபிஸ் என்ற நூலகத்தில் இருக்கின்றன.
இந்த பூமியில் பாலைவனத்தில் கரும்பை விளைவிக்க முடியுமா? ஏனெனில் அதற்கு நிறைய தண்ணீர் தேவை.ஆற்றோரம் பேரிட்சையை விளைவிக்க முடியுமா? ஏனெனில் அதற்கு அதீத வெப்பமும் மிகக்குறைந்த தண்ணீரும் போதும்.
அதே போல மகான்கள் இந்த பூமியில்பிறப்பதற்கு ஏற்ற இடம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள நமது நாடு மட்டுமே பொருத்தமான இடம்!!!

No comments:

Post a Comment