Friday, May 1, 2009

தீபம் ஏற்றும் முறையும் அதனால் கிடைக்கும் நன்மைகளும்


முதலில் கிழக்கு நோக்கி ஒரு திரியும்
2வது வடக்கு நோக்கி ஒரு திரியும்
3வது மேற்கு நோக்கிஇரு திரியும் ஏற்ற வேண்டும்.தெற்கு நோக்கி தீபம் ஏற்றக்கூடாது.

குளிர்விக்கும் போது,
முதலில் மேற்கே உள்ள திரிகளையும்
2வது வடக்கே உள்ள திரியையும்
3வது கிழக்கே உள்ள திரியையும் குளிர்விக்க வேண்டும்.ஊதி அணைக்கக் கூடாது.அப்படி அணைப்பது சாவுச் சடங்கிற்குச் சமமானது.(நாம் பிறந்த நாள் விழாக்களில் என்ன செய்கிறோம்? என்பதை இப்போது நினைவு கூரவும்.அது மிகவும் தவறான அணுகுமுறை)

மேற்கூறிய முறைப்படி, 8 நாட்களுக்கு தினமும் 1 மணி நேரம் வீதம் நெய்யில்- தாமரை நூல் திரியில் தீபம் ஏற்றி- எரிய விடுவது நமது வீட்டில் உள்ள
வாஸ்து குற்றங்களை சரி செய்யும்.குழந்தைகள் செய்யும் சேஷ்டைகள் குறையும்.
எனது அனுபவத்தில் பிரிந்தவர்கள்- ஒரு போதும் சேரவே வாய்ப்பு இல்லை என நம்பியிருந்தேன்.அவர்கள் இந்த பரிகாரத்தால் ஒன்றிணைந்தனர்.ஆமாம்!!!பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர்ந்தனர்.
தீபம் ஏற்றுங்கள்!!! வளமுடன் வாழுங்கள்!!!

1 comment:

  1. Dear sir

    when this prayer has to be started, ie. this is also to be started on "amavasai".

    also Morning or evening

    kindly explain

    ReplyDelete