Saturday, May 30, 2009

இந்தியப் பொருளாதாரத்தின் இன்றைய நிலை என்ன?


இந்தியப்பொருளாதாரத்தின் இன்றைய நிலை என்ன?
மேல்நாடுகளின் வளர்ச்சி உச்சத்தில் இருந்த கால கட்டத்தில் மேக்ஸ் வெபர் என்ற பொருளாதார மண்டு( என்றால் அறிவாளி என்ற அர்த்தமும் உண்டு)மேதை நமது இந்துயாவைப்பற்றியும் இந்தியப்பொருளாதாரம் பற்றியும் ஒரு கருத்து கூறினார்.
இந்தியர்களின் மதிப்பீடுகளும், சாதிப்பிரிவினைகளும், அவர்களது வளர்ச்சிக்குத் தடையாக உள்ளன.நமது குடும்ப அமைப்பு முறை, பாவ-புண்ணியத்தில் நம்பிக்கை, மறு பிறவியில் நம்பிக்கை போன்றவை இந்துயா முன்னேறாமல் தடுக்கும் காரணிகள்.(ஆனால் இன்று அமெரிக்க ஒபாமா அமெரிக்கர்களே உங்களது முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும் .குடும்பமாக சேர்ந்து வாழப்பழகுங்கள்.அப்போதுதான் நமது அமெரிக்கா மீண்டும் வலிமை பெறும் என உபதேசிக்கிறார்)

அதாவது நாம் ஆங்கிலேயர்கள் நம்மை நிர்வகித்த போதும் அவர்களே பொறாமைப்படுமாறு வளமாக இருந்துள்ளோம்.
பின்னர் நாம் பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைய என்ன காரணம்?
நாம் நமது பாரம்பரிய பொருளாதார மதிப்பீடுகளை மறந்து மேலைநாட்டவரின் அடியொற்றி நமது பொருளாதாரத்தை வகுத்துக்கொள்ளப் பலவந்தப்படுத்தப்பட்டதுதான்.இந்த பலவந்தம் முதலில் ஆங்கிலேயர்களால் நம்மிடையே பிரயோகிக்கப்பட்டது(அப்ளிகேட்).. .. பின்னர் நம்மை ஆண்ட ஆட்சியாளர்களால் இன்றும் தொடர்ந்து பிரயோகிக்கப்பட்டு வருகிறது.

இருந்த போதிலும் நாம் முன்னேறி வருகிறோம்.நமது இந்துயாவில் உள்ள தொழில்நகரங்களின் மொத்த எண்ணிக்கை 2100(மனதில் சிவகாசி அல்லது திருப்பூர் அல்லது கோயம்புத்தூர் அல்லது சூரத்தை நினைத்துகொள்ளவும்.இந்நகரங்களுக்குப் போயிருந்தால்தான் நமது நாட்டின் பொருளாதார முதுகெலும்பு உங்களுக்குப்புரியும்)
நம் நாட்டிலுள்ள தொழில்களின் எண்ணிக்கை 8.5கோடி
முறைசாரா தொழில்களின் எண்ணிக்கை 4.4 கோடி
சிறு தொழில்களின் எண்ணிக்கை 3 கோடி
குடும்ப நிர்வாகத்தின் கீழ் வரும் கம்பெனிகள் 7,25,000
தொழில் முதலீடுகளில் 98.8% குடும்ப சேமிப்பிலிருந்து வருகின்றன.வெளிநாட்டிலிருந்து வரும் தொழில்முதலீடு 1.2% மட்டுமே!!!
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 35% சேமிப்பாகும்.
கி.பி.2002 கணக்குப்படி, உலகளவில் சுயதொழில் புரிவோர் எண்ணிக்கையில் இரண்டாமிடத்தில் இருப்பது நமது இந்துயாதான்.நம் நாட்டில் 18 முதல் 64 வயது வரை உள்ள தொழில்புரிவோரின் எண்ணிக்கை இந்திய மக்கள் தொகையில் 18%
சீனாவில் இது 12.3% மட்டுமே!
அமெரிக்காவில் இது 11% மட்டுமே!!
இந்தியாவில் முறைப்படி பதிவுசெய்யப்படாத தொழிலகங்கள் மட்டும் 4.8 கோடி.
இந்துயாவின் மொத்த மக்கள் தொகையில் 92%பேர்கள் சுயதொழில் புரிவோர்.இதில் 80% பேர்களுக்கு உறவினர்கள்தான் தொழில்செய்ய நிதியுதவி செய்கிறார்கள்.இதன் மூலம் மேக்ஸ் வெபரின் கூற்று கடைந்தெடுத்த தப்பு என்பது நிரூபணம் ஆகிறது.
வெள்ளைக்காரன் பேச்சைக்கேட்டால் இப்படித்தான் உருப்படாமப் போகணும்

1 comment:

  1. aanmigakkadal@gmail.com
    இப்படிக்கு
    ஆன்மீகக்கடல்

    ReplyDelete