Friday, April 15, 2016

சனியின் தாக்கத்தைக் குறைக்கும் ஸ்ரீசரபேசவழிபாடு


சென்னை மயிலாப்பூர் தெற்கு மாடவீதியில் அமைந்திருப்பது அருள்மிகு காமாட்சி சமேத ஸ்ரீவெள்ளீஸ்வரர் ஆலயம் ஆகும்;

இந்த ஆலயத்தில்,ஸ்ரீசரபேஸ்வரருடம் ஸ்ரீசனிபகவான் அருள்பாலித்துவருகிறார்;

இங்கே ஒவ்வொரு சனிக்கிழமை காலை 9 முதல் 10.30 மணி வரையிலும்,ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 முதல் 6 மணிக்குள் ஸ்ரீசரபேஸ்வரரையும்,ஸ்ரீசனிபகவானையும் வலம் வரவேண்டும்;எட்டு முறை வலம் வரவேண்டும்;அப்படி வலம் வரும் போது பின்வரும் ஸ்ரீசரபேஸ்வரரின் காயத்ரி மந்திரத்தை எட்டின் மடங்குகளில் ஜபிக்க வேண்டும்;

ஓம் தத்புருஷாய வித்மஹே
துரிதசகாய சரணாகத தேவாய தீமஹி
தந்நோ துரிதசகாய சரணாகத சரபேஸ்வர ப்ரசோதயாத்

என்பதே அந்த மந்திரம்!

 இப்படிச் செய்து வருவதன் மூலமாக 16.12.2017 வரை அஷ்டமத்துச்சனியால் அவதிப்படும் மேஷராசியினரும்;

16.12.2017 வரை கண்டச்சனியால் சிரமப்பட்டுவரும் ரிஷபராசிக்காரர்களும்;

16.12.2017 வரை வாக்கு(பாத)சனியால் அவதிப்படும் துலாம் ராசியினரும்;

16.12.2017 வரை ஜன்மச்சனியால் படாதபாடுபட்டுவரும் விருச்சிகராசிக்காரர்களும்;

16.12.2017 வரை விரையச்சனியால் கஷ்டப்படும் தனுசுராசிக்காரர்களும்;

16.12.2017 வரை அர்த்தாஷ்டமச்சனியால் அவதிக்குள்ளாகி வரும் சிம்மராசிக்காரர்களும்;

26.3.2016 சனிக்கிழமை முதல் 11.8.2016 வியாழக்கிழமை வரை சனியின் வக்கிரத்தால்(உடன் இருக்கும் செவ்வாயாலும்) அவதிப்படும் மேஷம்,ரிஷபம்,மிதுனம்,கடகம்,சிம்மம்,கன்னி,துலாம்,விருச்சிகம்,தனுசு,மகரம்,கும்பம்,மீனம் ராசிகாரர்களும்;

நிம்மதியடைவார்கள்;கூடவே,ஸ்ரீசரபேஸ்வரரின் அருட்ப்பார்வையும் படுவேகமாகக் கிட்டும்;

அசைவம்,மது இவைகளைக் கைவிட்டவர்களுக்கே இந்த வழிபாட்டுமுறை பலன் தரும் என்பதை இக்கணத்தில் மறவாதீர்கள்;

ஓம் அகத்தீசாய நமஹ


No comments:

Post a Comment