Saturday, April 16, 2016

ஒரே நேரத்தில் அண்ணாமலையார் அருளையும்,அன்னை அரசாலை அருளையும் அள்ளித் தரும் மந்திர ஜெபம்!!!






கலியுகத்தில் பிறந்திருக்கும் நாம்,நமது கடந்த ஐந்து முற்பிறவிகளில் செய்த நல்வினை,தீவினைகளின் தொகுப்பை அனுபவிக்கவே பிறந்திருக்கிறோம்;இருப்பினும்,ஈசன் கருணை மிகுந்தவன்;மனிதனாகப் பிறந்திருக்கும் ஒவ்வொரு ஆணுக்கும்,பெண்ணுக்கும் திருந்திட பலமுறை சந்தர்ப்பம் அளித்துக் கொண்டே இருக்கிறான்;அதை முறையாகவும்,முழுமையாகவும் பயன்படுத்துபவர்கள் தமது பிறவிகளின் எண்ணிக்கையை குறைத்துவிடுகிறார்கள்;இப்பிறவியில் இனி வர இருக்கும் இம்சைகளில் இருந்து மீண்டு விடுகிறார்கள்;


கடன்,நோய்,எதிரிகள்,தொல்லை,அவச்சொற்களால் தினமும் நிம்மதியிழத்தல்,ஒழுக்கமாக வாழ்ந்துவரும் வேளையில் ஒழுங்கீனமானவராக பிறர் சித்தரிப்பதால் வரும் சோகம்,திருமணத் தடை,கல்வித்தடை,பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையே நல்லுறவு இன்மை,கணவன் மனைவி இடையே ஒற்றுமையின்மை/புரிதல் இன்மை,சந்தேகப்படுதல் முதலான எந்த ஒரு வாழ்வியல் சிக்கல்களையும் இந்த தினசரி மந்திர ஜபம் தீர்த்து வைக்கும்;


பலருக்கு பணம் போதுமான அளவில் வருமானமாகவோ,லாபமாகவோ கிடைக்காமல் இருக்கிறது;அதையும் தீர்த்து வைக்கும் இந்த மந்திர ஜபம்;


இந்த மந்திர ஜபத்தை ஜபிக்கத் தேவையான பொருட்கள்:


பச்சைத்துண்டு, மகாலட்சுமி விளக்கு புதியது,பஞ்சுத்திரி,செக்கில் ஆட்டிய இலுப்பை எண்ணெய்

இந்த மந்திரம் ஜபிக்கத் தேவையான தகுதிகள்:

18 வயது நிரம்பிய ஆண்,பெண் எவரும் ஜபிக்கலாம்;
எந்த ஜாதி,மதம்,மொழி,இனமாக இருந்தாலும் ஜபிக்கலாம்;
இந்த மந்திரம் தினமும் ஜபிக்க வேண்டிய நேரம்:
தினமும் காலை 4.30 முதல் 5 மணி வரை மற்றும் இரவு 9 மணி முதல் 9.30 வரையிலான நேரத்தில் ஏதாவது 15 நிமிடம் வரை ஜபிக்க வேண்டும்;

இந்த மந்திரத்தை ஜபிக்கும் முறை:

புதியதாக வாங்கிய மகாலட்சுமிவிளக்கை வடக்கு நோக்கி தீபம் எரியுமாறு வைக்கவேண்டும்;
பச்சைத் துண்டின் மீது அமர்ந்து மகாலட்சுமி விளக்கில் இலுப்பை எண்ணெய் நிரப்பி,பஞ்சுத்திரியில் தீபம் ஏற்ற வேண்டும்;
பிறகு,கிழக்கு நோக்கி பச்சைத் துண்டின் மீது அமர்ந்து கொள்ள வேண்டும்;அப்படி அமர்ந்திருக்கும் போது,உடலின் எந்தப்பகுதியும் தரையில் படக் கூடாது;அப்படிப்பட்டால்,மந்திர ஜபத்துக்கான பலன் நம்மை வந்து சேராமல் பூமிக்குள் போய்விடும்;

ஓம் அகத்தியர் முதலான 18 சித்தர் பெருமக்கள் போற்றி என்று ஒருமுறை ஜபித்துவிட்டு,
ஓம் மகா கணபதி நமஹ என்று ஒருமுறை ஜபித்துவிட்டு,
ஓம் அருணாச்சலாய நமஹ என்று ஒருமுறை ஜபித்துவிட்டு,
ஓம் (உங்கள் குலதெய்வம்) நமஹ என்று ஒருமுறை ஜபிக்க வேண்டும்;

பிறகு, ஓம் வராகி சிவசக்தி ஓம் என்று ஜபிக்க ஆரம்பிக்க வேண்டும்;ஜபிக்கும் போது எண்ணக் கூடாது;

ஒரு அமாவாசையன்று இந்த ஜபத்தை ஆரம்பிக்க வேண்டும்;
அன்று முதல்தினமும் காலையில் 15 நிமிடமும்,இரவில் 15 நிமிடமும் ஜபித்து வரவேண்டும்;

இரண்டாவது அமாவாசை வரும் போது,ஜபநேரத்தை 30 நிமிடமாக உயர்த்துங்கள்;

மூன்றாவது அமாவாசை வரும் நாளில் இருந்து,ஜபநேரத்தை 45 நிடமாக அதிகப்படுத்துங்கள்;

நான்காவது அமாவாசையிலிருந்து தினமும் காலையில் 60 நிமிடமும்,இரவில் 60 நிமிடமும் ஜபித்து வரவும்;ஒரு நாளுக்கு ஒரு வேளைக்கு ஒரு மணி நேரம் வீதம்,இரண்டு மணி நேரம் வரை ஓம் வராகி சிவசக்தி ஓம் என்று ஜபித்தாலே அவர்களுடைய அனைத்து லட்சியங்களும் படிப்படியாக நிறைவேறும்;

முக்கியமான உபதேசம் என்னவெனில்,இந்த ஜபத்தை ரகசியமாக,எவரிடமும் தெரிவிக்காமல் பின்பற்றிவருவது அவசியம்;இதனால்,நீங்கள் சர்வசக்தி வாய்ந்த,அதேசமயம் அடக்கமான மனிதராகவும் இருப்பீர்கள்;இந்த உலகத்திலேயே நிம்மதியாக இருப்பவர் நீங்கள் மட்டுமே!

இந்த முறைப்படி மூன்று ஆண்டுகள் வரை தினமும் ஒம் வராகி சிவசக்தி ஓம் என்று ஜபித்துவந்தால்,இந்த உலகத்திலேயே அனைத்தும் உள்ளவர் நீங்கள் மட்டுமே!


வாழ்க பைரவ அறமுடன்:வளர்க வராகி அருளுடன்!!!

No comments:

Post a Comment