Thursday, April 7, 2016

திறமைக்கு அங்கீகாரமும்,உழைப்புக்கு ஏற்ற மரியாதையும் தரும் அன்னை ஆதிவராகி வழிபாடு!


1960களுக்குப் பிறகு,தமிழ்நாட்டில் அறிவாளிகளுக்கும்,உழைப்பாளிகளுக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்கிறதா? கிடைப்பது படிப்படியாக குறையத் துவங்கியது;

அப்படிக் கிடைத்திருந்தால்,அவருக்கு ஸ்ட்ராங்கான ரெக்கமண்டேஷன் அல்லது தனிப்பெரும் செல்வாக்கு இருந்தால் மட்டுமே கிடைக்கும்;

இன்றைக்கோ இன்னும் பலவிதமான லாபிகள் உருவாக்கி வைத்திருந்தால் மட்டுமே திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கிறது;உழைப்புக்கு ஏற்ற மரியாதையும் கிடைக்கிறது;

1990களில் குறுக்கு வழிகளில் பதவிக்கு வந்தார்கள்;

2000 களில் குறுக்கு வழிகளில் பதவிக்கு வந்தவர்கள்,தன்னைச் சுற்றிலும் அதே போன்ற அணியை உருவாக்கினார்கள்;

2010களில் இருந்து குறுக்கு வழிகளில் வருபவர்களை மட்டுமே அதிகாரத்தில் அமர வைத்தார்கள்;இதனால்,உழைப்பவர்கள் உரிய அங்கீகாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர்;

10 ஆண்டுகள் என்று இல்லை;20 ஆண்டுகள்,30 ஆண்டுகளாக உழைத்த உழைப்பிற்கு உரிய மரியாதை இல்லாமல் கடுமையான மன உளைச்சலில் வாழ்ந்து வருபவர்கள் மிக அதிகம்;

அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் குறைந்த பட்சம் ஒராண்டு வரை;அதிக பட்சம் மூன்று ஆண்டுகள் வரை தினமும் அன்னை ஆதிவராகி என்ற அரசாலை என்ற வாராகியை வழிபடவேண்டும்;

வழிபட ஆரம்பித்த மூன்றாம் நாளில் இருந்தே அன்னை ஆதி வராகியின் சூட்சுமப் பாதுகாப்பு கிட்ட ஆரம்பிக்கும்;90 நாட்களுக்குப் பிறகு,அடுத்துக் கெடுப்பவர்கள் விலகிச் செல்ல ஆரம்பிப்பார்கள்;180 ஆம் நாளில் இருந்து இதுவரை இருந்து வந்த துரோகச் சுவர்கள் தகர்ந்துவிடும்;300 ஆம் நாளில் இருந்து உழைப்புக்கும்,திறமைக்கும் உரிய அங்கீகாரம் கிட்டும்;


நீங்கள் செய்ய வேண்டியது இரண்டே இரண்டு கட்டுப்பாடுகள் தான்;
1.அசைவம் சாப்பிடக் கூடாது;
2.இந்த அன்னை ஆதிவராகி என்ற அரசாலை வழிபாட்டை பரமரகசியமாக தினமும் பின்பற்ற வேண்டும்;(அலுவலகத்தில் அங்கீகாரம் கிடைக்க விரும்புவோர் அலுவலகத்தில் இது தொடர்பான எந்த ஒரு விவாதமும் வைத்துக் கொள்ளக் கூடாது;வீட்டில்/குடும்பத்தில் அங்கீகாரம் கிடைக்க விரும்புவோர் வீட்டில் ரகசியம் காத்து வழிபடவேண்டும்)

இந்த இரண்டு விதிமுறையையும் பின்பற்றிக் கொண்டு, அன்னை ஆதி வராகியின் 12 பெயர்களை தினமும் காலையில் 15 நிமிடமும்,இரவில் 15 நிமிடமும் ஜபிக்க வேண்டும்;

ஒரு மாதம் ஆன பின்னர்,காலையில் 30 நிமிடமும்,இரவில் 30 நிமிடமும் தினமும் ஜபிக்க வேண்டும்;

மூன்றாம் மாதம் துவங்குவதற்கு முன்பு எம்மை ஒரு முறை நேரில் சந்திப்பது அவசியம்;


காலையில் 6 மணிக்குள்ளும்,மாலை 6 மணிக்குப் பிறகு இரவு 11 மணிக்குள் வரும் நேரத்தில் ஜபிப்பது நன்று;


அரசாலையின் அருளைப் பெற்றுத்தரும் வராகி சித்தரின் பெயருடன்(பெயரைச் சேர்த்தால் 13 பெயர்கள்!!!)


ஓம் ரீங் வாத்தியாரைய்யா வாத்தியாரைய்யா
பஞ்சமீ
தண்டநாதா
சங்கேதா
சமேஸ்வரீ
சமய சங்கேதா
வராகி
போத்ரிணீ
சிவை
வார்த்தாளி
மகாசேனா
ஆக்ஞாசக்ரேஸ்வரி
அரிக்நீ


இவைகள் தான் அந்த 12 பெயர்கள்!




No comments:

Post a Comment