Thursday, April 7, 2016

ஆன்மீக லட்சியம்

வெறும் ஐந்து ஆண்டுகள் மக்களின் வாக்கின் மூலமாக ஒரு ஊரை நிர்வாகிக்கும் பொறுப்பு(பதவி அல்ல;) நம்மில் வெகு சிலருக்கு வந்து சேருகின்றது;

8,00,00,000 தமிழர்களை 235 பேர்கள் நிர்வாகிக்கின்றனர்;அதுவும் அவர்களின் ஆயுள் முழுக்க அல்ல;வெறும் ஐந்து ஆண்டுகள்! இந்த ஐந்து ஆண்டு அதிகாரத்திற்கே இப்படி பெருமைப்பட்டு,தன்னை முன்னிலைப்படுத்துகின்றனர் வெற்றி பெற்றவர்கள்!

எத்தனையோ பிறவிகளாக சேமித்த புண்ணியத்தால்,இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் பிறந்திருக்கின்றோம்;அடுத்த பிறவி இன்னும் உயர்வாக அமைய வேண்டுமா? அல்லது இனி இந்த பூமியில் பிறக்காமலேயே இருக்க வேண்டுமா?

பின்வரும் காரியங்களை உங்கள் வாழ்நாளில் செய்து முடித்துவிடுங்கள்;உங்களின் ஆன்மீக லட்சியம் அல்லது ஆன்மீக நோக்கங்கள் நிறைவேறும்;

சுய கட்டுப்பாட்டு விதி எண் 1.அசைவம்,மது இவைகளைத் தவிர்த்துவிட்டு இவைகளைச் செய்தால் மட்டுமே நிறைவேறும்;

சுய கட்டுப்பாட்டு விதி எண் 2:உங்களுக்கு உபதேசம் செய்பவரைத் தவிர வேறு எவரிடமும் இது தொடர்பாக கலந்து ஆலோசனை செய்ய வேண்டாம்;அப்படிச் செய்தால்,குழப்பமே மிஞ்சும்;

பத்து ஆண்டுகளில் 1000 முறை அண்ணாமலை கிரிவலம் சென்று வரவும்;இதைச் செய்ய முடியாதவர்கள் திருவாதிரை நட்சத்திரம் வரும் இரவில் கிரிவலம் செல்லவும்;அப்படி 108 திருவாதிரை நட்சத்திர நாட்களில் அண்ணாமலை கிரிவலம் செல்வது அவசியம்;

உங்கள் பிறந்த ஜாதகப்படி,உங்களுக்கு என்றே இருக்கும் ஒரு கோவிலுக்கு ஒரு வருடத்தின் குறிப்பிட்ட நாளில் சென்று அபிஷேகம் செய்யவும்;

ஒரு தமிழ் வருடத்திற்குள்(சித்திரை 1 முதல் பங்குனி 30க்குள்) அட்டவீரட்டத் திருத்தலங்களுக்கு ஒரு முறை பயணித்து வரவும்;

ஒரு பசுவை உங்கள் ஜாதகப்படி அமைந்திருக்கும் ஆலயத்திற்கு தானமாகத் தரவும்;

3,00,000 முறை அஷ்ட கணபதி மந்திரம் ஜபித்து மந்திர ஸித்தி அடையவும்;

குறைந்தது 1000 நாட்கள் அதிகபட்சமாக 3000 நாட்கள் தினமும் காலையில் 30 நிமிடமும்,இரவில் 30 நிமிடமும் ஆதிவராகி வழிபாடு+மந்திரஜபம்+தானம்+அர்ப்பணம்(தர்ப்பணம் அல்ல) செய்து வரவும்;

மாதம் ஒரு நாள் உள்ளூரில் இருக்கும் சிவாலயத்தின் வாசலில் அன்னதானம் அல்லது அதற்கு இணையான தானம் செய்யவும்;

மாதம் ஒரு நாள் குலதெய்வ வழிபாடு செய்யவும்;

உங்களுடைய ஜனன நட்சத்திர சித்தரை தரிசிக்க முயற்சிக்கவும்;

இவைகள் அனைத்தையும் உங்களுடைய 15 வது வயதில் இருந்து 65 வது வயதிற்குள் பூர்த்தி செய்யவேண்டும்;


மற்றவை தங்களை நேரில் சந்திக்கும் போது. . . கை.வீரமுனி. . .ஸ்ரீவில்லிபுத்தூர். 9092116990

No comments:

Post a Comment