Thursday, December 6, 2012

இல்லறமில்லாதத் துறவறம் மாபெரும் பாவம்!!!



 சித்தர்களை தரிசிக்க நாம் பலவழிகளில்  முயலுகிறோம்;தியானம்,தவம்,தீட்சை,மந்திரஜபம் என்று ஓராண்டு முதல் மூன்றே மாதங்கள் வரை பல்வேறு விதங்களில் முயற்சி செய்தால்,நாம் விரும்பும் சித்தரை இந்த கலியுகத்திலும் தரிசனமும்,ஆசியும் பெறலாம்;அப்படி தரிசனம் செய்பவர்கள் அனைவரையும் அந்த சித்தர் ஆசி புரிவார்;ஆனால்,அப்படி ஆசி பெறுபவர்களில் ஒரு கோடி பேர்களில் ஒருவருக்கு மட்டுமே நமது கருமவினைகளை சித்தர்கள் தீர்ப்பார்கள்:எனவே தான் நமது கருமவினைகளை நாமே தீர்த்துக்  கொள்வதற்காக தினமும் ஒருமணிநேரத்துக்குக் குறையாமல் ஓம்சிவசிவஓம் ஜபிக்கச் சொல்லி வலியுறுத்துகிறோம்;அல்லது தினமும் வீட்டிலேயே ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாட்டை தொடர்ந்து செய்யும்படி பதிவுகள் வெளியிட்டுக்கொண்டிருக்கிறோம்.

இதெல்லாம் நம்முடைய 40 அல்லது 50 அல்லது 60 வயதில் செய்து கொள்ளலாம் என்று எண்ணினால்,அந்த சமயத்தில் நமது மனமும்,உடலும் இந்தமாதிரியான ஆன்மீகநடவடிக்கைகளைத் தொடர்ந்து செய்வதற்கு ஒத்துழைக்காது;ஏனெனில்,நாம் கலியுகத்தில் வாழ்ந்து வருகிறோம்;நம்மைச் சுற்றிலும் காம குரோதங்களைப்பற்றிய அவலங்கள் அனுதினமும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன;கலியுகத்தின் உச்சத்தினால் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கையும்,ஒருத்திக்கு ஒருவன் என்ற கொள்கையும் காணாமல் போய்க்கொண்டிருக்கிறது;இதுதொடர்பான சம்பவங்களும்,செய்திகளும் தினமும் நமது காதுகளுக்கு வந்து கொண்டே இருக்கத்தான் செய்யும்.இதன் விளைவாக, எல்லோரும் தான் தப்புச் செய்றாங்க;நான்  செய்றதுல என்ன தப்பு? என்று 30 ஆம் வயதில் சிந்திக்கத்  துவங்கும் நாம் நமது 40 அல்லது 50 அல்லது 60 ஆம் வயதில் கடவுள் நம்பிக்கையை முழுமையாக இழந்துவிடுவோம்;தவிர,குடும்பத்தில் ஏற்படும் திடீர் பொருளாதார முன்னேற்றம் நம்மிடையே திமிரை வளர்த்துவிடும்;அல்லது பொருளாதாரச் சரிவை உண்டாக்கினாலும்,அது நம்மிடையே ‘எல்லாவற்றையும்’ அட்ஜஸ்ட் செய்து போக வைத்துவிடும்!!! அப்போது கடவுளை நம்பமாலேயே போய்விடுவோம்;காமமும்,அதிகாரபலமும்,பண பலமுமே கடவுள் என்று நினைத்து அதன்படி செயல்படத்துவங்கிவிடுவோம்;ஆனால்,கடவுளை நெருங்கிட இந்த 15/20/25/30 ஆம் வயதுகளிலேயே நாம் ஒவ்வொரு நாளும் முயற்சி எடுக்கமாட்டோம்;தவிர,நாம் வாழும் காலகட்டத்தில் நமது மனதுக்குள் நல்ல மற்றும் நம்பிக்கையளிக்கக் கூடிய விஷயங்களைப் பதிய வைப்பது மிகவும் கடினம்;ஆனால்,அவநம்பிக்கைத் தரக்கூடிய மற்றும் யாரையும் எப்போதும் எதற்காகவும் நம்பாத மனநிலையை சில நாட்களிலேயே உருவாக்கிவிடலாம்;இந்த சூழ்நிலையானது தமிழ் பேசும் மக்கள் வாழும் ஊர்களில் மட்டுமல்ல;உலகம்முழுவதுமே இப்பேர்ப்பட்ட நிலைதான் இருக்கிறது.

ஒருபக்கம் தாம்பத்தியக் கடமைகளைச் செய்தவாறே,மறுபக்கம் தினசரி நமது வேலை அல்லது தொழிலைச் செய்தவாறே,இன்னொரு பக்கம் தினமும் ஓம்சிவசிவஓம் ஜபித்து வரவேண்டும்;அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாடு/ஸ்ரீகாலபைரவர் வழிபாட்டைச் செய்து வர வேண்டும்.காம நடவடிக்கைகளில் தாம்பத்தியம் என்பது பாவம் அல்ல;வாழ்க்கைத் துணைக்குத் துரோகம் செய்வதே பாவம் ஆகும்;ஒரு கோடி மனிதர்களில் யாராவது ஒருவருக்கு மட்டுமே காம ஆசை அற்றுப்போகும் மன மற்றும் ஆத்மவலிமை பிறக்கும்போதிருந்தே இருக்கும்;அவர்கள் முந்தைய ஐந்து ஜன்மங்களில் தினமும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் அல்லது ஸ்ரீகாலபைரவர் வழிபாட்டைப்பின்பற்றி வந்தவர்கள் என்பது பல  யுகங்களாக மறைக்கப்பட்ட தேவரகசியம் ஆகும்;

நாம் எல்லோரும் சாதாரண மானிடப்பிறவிகள்;காமத்தில் முழுதிருப்தியை எட்டாமல் ஆன்மீக வாழ்க்கையில் இறங்கினால்,காவி உடுத்தி காண்ட்ராக்ட் போட்டவனின் ‘கதி’தான் உண்டாகும்.இல்லறத்தில் நமது முழுமையான கடமைகளை நிறைவேற்றிக்கொண்டே,படிப்படியாக= முழுமையான துறவறத்திற்கு வருவதே ஒவ்வொரு  இந்துவின் முழுமையான லட்சியம் ஆகும்.

இந்து தர்மத்தில் மட்டுமே கோடிக்கணக்கான கடவுள்கள் இருக்கிறார்கள்:நாம் அடுத்த பிறவியில் இன்னும் சிறந்த பிறப்பாக பிறக்க வேண்டும் எனில்,தினசரி விநாயகர் வழிபாடு,மாதம் அல்லது ஆண்டுக்கு ஒருமுறை குலதெய்வ வழிபாடு மற்றும் தினமும்  ஸ்ரீகால பைரவர் அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு என்று வரையறுத்துக்கொண்டு குறைந்தது பத்து வருடங்களுக்கு வழிபாடு செய்து வந்தாலே நமது முற்பிறவி மற்றும் முன்னோர்களின் கர்மவினைகளை அடியோடு நீக்கிவிட முடியும்.சிலருக்கு ஸ்ரீபைரவர் வழிபாட்டைச் செய்ய மனம் வராது;அவர்கள் தினமும் ஓம்சிவசிவஓம் ஜபித்து வரலாம்;ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம் குறைந்தது பத்து வருடங்களுக்கு ஓம்சிவசிவஓம் ஜபித்து வர,நல்ல பலன்கள் கிடைக்கும்;
எந்த ஒரு மந்திரமும் ஒரு  லட்சம் தடவை ஜபித்தப்பின்னரே அதற்கு முழு சக்தி கிடைக்கும்;நமது கட்டுப்பாட்டுக்கு வரும்;ஆனால்,ஓம்சிவசிவஓம் மந்திர ஜபமானது சுமார் 20,000 அளவைக் கடந்ததுமே நமக்கு படிப்படியான அதே சமயம் அஷ்டகர்மசக்திகளையும் தரத்துவங்கும்;நாம் கொஞ்சம்,கொஞ்சமாக புண்ணிய ஆத்மாவாக உயரலாம்;
தினமும் ஓம்சிவசிவஓம் ஜபித்து வருபவர்கள் தேய்பிறை அஷ்டமி வரும் நாளில் ஓம்சிவசிவஓம் ஜபிப்பதை நிறுத்திவிட்டு,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாட்டைச் செய்து வரலாம்;

தினமும் ஸ்ரீகாலபைரவர் அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாட்டைத் தொடருபவர்கள்,அமாவாசையன்று மட்டும் ஒரு மணி நேரம் வரை ஓம்சிவசிவஓம் ஜபித்தும் வரலாம்;எக்காரணம் கொண்டும் ஒருவரே ஓம்சிவசிவஓம் மந்திரஜபத்தையும்,ஸ்ரீபைரவர் வழிபாட்டையும் பின்பற்றக் கூடாது;இரண்டுமே மிக பிரம்ம்மாண்டமான சக்திகள் ஆகும்.ஏதாவது ஒரு சக்தியைப் பெற மட்டும் முயற்சிக்கவும்.அதுவே போதும்.விடாமுயற்சியுடன் இந்த ஜபம் அல்லது வழிபாடுகளை செய்து வரும்போது காரியத்தடை வரத்தான் செய்யும்;அதைப் பார்த்தெல்லாம் மலைத்துவிடக் கூடாது;நாம் நமது தலையெழுத்தையே மாற்றிடவே,இந்த வழிபாட்டுமுறைகளைச் செய்துவருகிறோம்;அதுவும் நாளைய எதிர்காலம் முதல் அடுத்த பிறவியின் எதிர்காலம் வரை மாற்றிட இதைவிட்டால்,இந்த கலியுகத்தில் வேறு வழியே கிடையாது;

ஓம்சிவசிவஓம்

No comments:

Post a Comment