Friday, December 21, 2012

பெண்களும்,குழந்தை வளர்ப்பும் பற்றி நியூரோதெரபிஸ்ட் டாக்டர் விஜய் ஆனந்த் அவர்களின் பேட்டிகள்-5 பாகங்கள்




இந்த உலகின் எந்த ஒரு பண்பாட்டை விடவும் உயர்ந்த பண்பாடு நமது இந்துப் பண்பாடு! ஒவ்வொரு மனிதனும் எப்படி வாழ வேண்டும்? எப்படி பழக வேண்டும்? என்பதை இந்த உலகிற்குச் சொல்லிக் கொடுத்தது நமது இந்துப் பண்பாடுதான்.இதை  கடந்த 200 ஆண்டுகளாக மேல்நாட்டு ஆராய்ச்சிகள் தொடர்ந்து நிரூபித்துக்  கொண்டே இருக்கின்றன;திராவிடக் கட்சியோ இந்த ஆராய்ச்சி முடிவுகளை தினசரிகளில் வெளிவராமல் பார்த்துக் கொள்கின்றன;நாமோ அவர்களையே தொடர்ந்து ஆளும்கட்சியாக்கிக் கொண்டே இருக்கிறோம்;300 ஆண்டு கிறிஸ்தவ ஆங்கிலேய ஆட்சியினால் நமது பாரம்பரியமும் பெருமையும் மிக்க வீரவிளையாட்டுக்களின் முக்கியத்துவத்தை மறந்து,மட்டையடி என்ற விளையாட்டின் பின்னால் அணிவகுத்தோம்;


சுதந்திரம் வாங்கியப்பின்னர் நமது தேசிய மொழிகளான தமிழையும்,சமஸ்க்ருதத்தையும் மறந்து,ஆங்கிலம் பேசுவதையும் எழுதுவதையும் பெருமையாக நினைக்கத் துவங்கினோம்;அடிமைபுத்தியை மெக்காலே கல்வித் திட்டத்தின் மூலமாக நமக்குத் தெரியாமலேயே நமக்குள் திணித்தான் கிறிஸ்தவ ஆங்கிலேயன்!!


தமிழ்த்திரைப்படங்கள்,மெகாத் தொடர்களின் நமது தமிழ்ப்பண்பாடு மற்றும் இந்துப்பண்பாடு சார்ந்த நம்பிக்கைகளை கொச்சைப்படுத்தப்படும்போதும்,கேலி செய்யப்படும்போதும் நாம் அதை நினைத்து கொந்தளிப்பதில்லை;மாறாக சிரிக்கிறோம்;இப்படி சிரிப்பதே மெக்காலே கல்வித் திட்டத்தின் வெற்றி! நாம் எப்போது நம்முடைய முன்னோர்களின் சாதனைகளை  உணரப் போகிறோம்?

தற்போது அவனது உணவுப்பழக்கத்துக்கு நம்மை அடிமைப்படுத்திவிட்டான்;இதனால்,பெருமையும்,மதிப்பும் மிகுந்த நமது பெண் இனம் எப்படியெல்லாம் ஆரோக்கியத்தை இழந்து வருகிறது? என்பதை நான்கு பாகங்களாக நமது நியூரோதெரபிஸ்ட் டாக்டர் விஜய் ஆனந்த் பேசியிருக்கிறார்.கேட்போமா?






இவரது செல் எண்:9894487122 (9AM to 9PM)

இவரது மின் அஞ்சல்:neurovijay@gmail.com

ஓம்சிவசிவஓம்

No comments:

Post a Comment