Thursday, October 13, 2011

தமிழ் உணர்வாளர்களை குழப்பி வைத்திருக்கும் பிரிவினைவாதிகள்







எனக்குத் தெரிந்து தமிழ் உணர்வாளர்களிடையே தமிழ்மீதான பற்றினைவிட,அவர்களின் சிந்தனை தெளிவாக இல்லை என்றே நினைக்கிறேன்.தேவநேயப்பாவணர் முதலான தமிழறிஞர்களோடு இவர்களின் சிந்தனை நின்றுவிடுகிறது.அதற்கும் முற்காலத்துக்குப்போவதே இல்லை;எனக்குத் தெரிந்து தமிழ் உணர்வுள்ளவர்களில் எத்தனை பேர்கள் திருமூலரின் திருமந்திரம்,அகத்தியரின் அகத்தியம்,திருக்குறள் வாசித்திருப்பார்கள் ? நிச்சயமாக இராது.தமிழ் உணர்வாளர்கள் அரசியல் களத்தில் நின்று செயல்பட்டாலும்,தமிழுக்காக ஒருங்கிணைந்து செயல்படுவதே இல்லை;கருணாநிதி மாதிரி தமிழ் உணர்வாளனாக காட்டிக் கொள்ள மட்டுமே முடிகிறது.

எனது அம்மாவும்,அப்பாவும் தமிழர்கள்.எனக்கு தமிழ் மொழியைத் தவிர,கொஞ்சம் சமஸ்க்ருதம்,கொஞ்சம் ஆங்கிலம் தெரியும்.வேறு எதுவும் தெரியாது.ஆனால்,நான் ஒரு புத்தகப்புழு.புத்தக சமுத்திரத்தில் 1988 முதல் மூழ்கி முத்தெடுத்துக்கொண்டிருக்கிறேன்.அதிலிருந்து கிடைத்த தகவல்களை உங்கள் முன் வைக்கிறேன்.தமிழ்,தமிழ் உணர்வு என்பதைப் பற்றி உங்களின் கருத்துக்களை எனக்கு மின் அஞ்சல் அனுப்பலாமே!

சிவபெருமானின் உடுக்கையின் ஒரு பக்கத்திலிருந்து தமிழும்,மறு பக்கத்திலிருந்து சமஸ்க்ருதமும் தோன்றியது.சிவபெருமானே தமிழை தென் நாட்டில் பரப்பிட அகத்தியரையும்,வட நாட்டில் சமஸ்க்ருதத்தை வட நாட்டில் பரப்பிட பாணினியையும் அனுப்பி வைத்தார்.ஆக,தமிழ் தந்தை எனப்படுபவர் அகத்தியர் மட்டுமே!!!

தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் அகத்தியரைப் பற்றிப் பேசுவதேயில்லை;ஆனால்,சமஸ்க்ருதத்தை எதிர்ப்பதில் தீவிரமாக இருக்கிறார்கள்.பிராமணர்கள் பேசும் மொழியாக இருப்பதால்,இவர்களுக்கு பிராமணர் மீதான வெறுப்பு அப்படியே சமஸ்க்ருதம் மீதும் பாய்ந்துவிட்டது.இதனால்,தமிழ்நாட்டில் சமஸ்க்ருதம் தமிழ் மொழிபெயர்ப்பு அடியோடு நின்றுபோய்விட்டது.பல அரிய,அபூர்வமான சமஸ்க்ருத ஜோதிடநூல்கள்,வைத்திய நூல்கள்,யோகாசன நூல்கள்,மனதத்துவநூல்கள் தமிழுக்கு மொழிபெயர்க்க முடியாமல் போய்விட்டன.

எனது சிற்றறிவுக்கு எட்டியவரையிலும்,தமிழ் மொழிக்கு சமஸ்க்ருதத்தால் ஏற்பட்ட தீங்கை விடவும்,கத்தோலிக்க மொழியான ஆங்கிலத்தால் ஏற்பட்டிருக்கும் அழிவே 10,000% அதிகம்.என்னதான் இருந்தாலும்,சமஸ்க்ருதம் நமது நாட்டின் மொழி! இந்தியாவின் தாய்மொழி சமஸ்க்ருதம் எனில்,இந்தியாவின் தந்தை மொழி நமது & எனது தமிழ்!!!

தெய்வத்தின் குரல் என்ற புத்தகம்,காஞ்சி சங்கராச்சாரியாரின் வாழ்க்கையையும்,பேச்சுக்களையும் விவரிக்கிறது.இந்தபுத்தகத்திலிருந்து கூட,சில பகுதிகளை ஆன்மீகக்கடலில் வெளியிட்டிருக்கிறேன்.தமிழ்ப்பண்பாடுதான் இந்துப் பண்பாடு,தமிழ்ப்பண்பாடுதான் இந்தியப் பண்பாடு என்ற அர்த்தம் வருமாறு காஞ்சி பரமாச்சாரியார் எழுதியுள்ளார்.இது எப்பேர்ப்பட்ட பெருந்தன்மை.பிராமணர்கள் என்ன இந்த தேசத்தின் சபிக்கப்பட்டவர்களா? அவர்களை சுயநலப்புலிகள் என சொல்லுகிறோமே,நாம் என்ன பொதுவுடைமைவாதிகளா?எல்லோரும் தான் சுயநலவாதிகள் தான்.
பிராமண ஆதிக்கத்தைக் கருவறுப்போம் என கத்துபவர்களுக்கு ஒன்றைச் சொல்லுகிறேன்.ஜாதிகளை ஒழிப்போம் என கத்துபவர்களுக்கும் ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன்.

எல்லோரையும் பிராமணராக்கிட நீங்கள் என்ன செய்தீர்கள்.பிராமணர்களின் புத்திசாலித்தனம்,அவர்கள் தினமும் மூன்றுதடவை காயத்ரி மந்திரம் ஓதுவதன் மூலமாகவும்,இந்து தர்ம சாஸ்திர நெறிகளை அப்படியே பின்பற்றுவதன் மூலமாகவும் 2000 ஆண்டுகளில் புத்திசாலி இனமாக உருவெடுத்திருக்கிறது.நீங்களும் அதேபோல்,பூணூல் அணிந்து,காயத்ரி மந்திரஜப முறையை உங்களின் ஜாதிக்கு,ஜாதி சிறுவர்களுக்கு சொல்லித் தர வேண்டியதுதானே.இந்த நூற்றாண்டில் இல்லாவிட்டாலும்,அடுத்த நூற்றாண்டிலாவது இந்தியா முழுக்க எல்லோரும் பிராமணராகிவிடலாமே!!

சினிமா பிரபலங்கள் பூணூலை அறுப்பதை பெருமையாகக் கருதுகின்றனர்.அதுதான் நாத்திகனுக்கு அடையாளமாம்.ஏன் கிறிஸ்தவ அல்லது இஸ்லாமிய மரபுகளை நக்கலடிக்க வேண்டியதுதானே? அப்படி நக்கல் செய்துவிட்டு,உயிரோடு இருந்துவிடுவாயா?பெற்ற தாய்க்குச் சமமானது நமது இந்து தர்மம்.உன்னைப் பெற்றதாயின் சேலையை நீ இப்படித்தான் உருவுவாயா?
சமஸ்க்ருதம் செத்த மொழி என்று கூப்பாடு போடுவது எனது காதில் கேட்கிறது.இந்த சொல்லாடலை கண்டுபிடித்ததே கத்தோலிக்க கிறிஸ்தவனாகிய ஆங்கிலேயன் தான்.ஏன் வெள்ளைத்தோலுக்கு நாம் மயங்குகிறோம்?அமெரிக்காவிலோ,இந்தியாவிலோ,தமிழ்நாட்டிலோ இரண்டு தமிழர்கள் சந்தித்துக்கொண்டால்,ஆங்கிலத்தில் பேசுவது பெருமை என நினைக்கிறோம்.இது அடிமைத்தனமாகத் தெரியவில்லையோ?புதுமைகளை ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்.ஆங்கில மொழி,ஆங்கிலப் பண்பாட்டைப்பின்பற்றுவதில் மட்டும் பகுத்தறிவு எங்கே போயிற்று? கருணாநிதி தமிழறிஞராக இருந்திருந்தால்,இங்கிலீஷ் மீடியம் பள்ளிகளைத் திறக்க அனுமதித்திருப்பாரா?இன்று தமிழ் எழுதத் தெரியாத,தமிழ் படிக்கத் தெரியாத ஒரு தமிழினம் தமிழ்நாட்டில் உருவாகிவிட்டது.இதை எதிர்த்து எந்த திருமாவளவன்,இராமதாசு,வைகோ போராடினார்கள்?மாற்றம் என்ற பெயரில் தமிழினத்தின் அடையாளங்களை நாசமாக்கிவிடலாமா?

அண்ணாவும்,பெரியாரும் சொன்னது என்ன? எத்தனை நாத்திகவாதிகள் இவர்களின் எழுத்துக்களை கரைத்துக் குடித்திருப்பார்கள்.நாத்திகம் தமிழினத்தின் உணர்வு அல்ல;பக்தியும்,சகிப்புணர்ச்சியுமே தமிழினத்தின் அடையாளங்கள்.

கருணாநிதியின் அரசியல் தந்திரம் புரியாமல்,பல லட்சம் அப்பாவித் தமிழர்கள்,நாத்திகத்தைப்பின்பற்றி,தனது 20,30 வருட சம்பாத்தியத்தை இழந்திருக்கிறார்கள்.இந்தி எதிர்ப்புக்குப் போராடிய கையோடு,தனது உறவினர்களையும்,நெருக்கமானவர்களையும் இந்தி படிக்க வைத்து,அவர்களுக்கு டெல்லி செக்ரட்ரியேட்டில் வேலை வாங்கித் தர வைத்ததும் இந்த கருணாநிதிதான்.திராவிடத்தால் வீழ்ந்தோம் என்ற பெயரில் குமரிப்பதிப்பகம்,8,நீலா தெற்குவீதி,நாகப்பட்டிணம் என்ற பதிப்பகம் ஒரு புத்தகம் வெளியிட்டிருக்கிறது.அதில் தமிழர்களையும்,தமிழ் உணர்வாளர்களையும் எப்படியெல்லாம் கருணாநிதி முட்டாளாக்கியிருக்கிறார்  என்பதை விவரித்துள்ளது.

தமிழ் உணர்வாளர்களாக இருப்பவர்களுக்கு,தமிழ்த் தந்தை அகத்தியர்;தமிழ்த்தாயின் பிறந்த நாளாக சித்திரை ஒன்றாம் நாள் இருக்கட்டும்;தமிழ் இனத்தின் தேசிய சொத்தாக அகத்தியம்,தொல்காப்பியம்,திருமந்திரம்,திருப்பாவை,ஐம்பெரும்காப்பியம்,ஐச்சிறுங்காப்பியம் இருக்கட்டும்.
தமிழினத்தின் சகோதர மொழியாக சமஸ்க்ருதம் இருக்கட்டும்.நாத்திகம் தமிழனத்தின் அடையாளம் அல்ல;காணபத்தியமும்,சைவமும்,வைணவமும்,சாக்தமும்,சவுரமும்,கவுமாரமும்(முருகக் கடவுள் வழிபாடு)தமிழினத்தின் வழிபாட்டு முறையாக இருந்து வருகிறது.தமிழன் தனது சுய பலத்தையும்,தனது வரலாற்றுப்பெருமையை உணர்ந்தால்,கருணாநிதி போன்றவர்களால் அரசியல் செய்ய முடியாது.கருணாநிதி தமிழினத்தலைவராக இருந்திருந்தால்,இலங்கையில் நமது தமிழ் உறவுகள் நாசமாகக் காரணமாக இருந்திருப்பாரா?

ஓம்சிவசிவஓம்










11 comments:

  1. pooda loosu payele .. agathyaruku munndi tamil. indiaula irrudu irruku. murganidam tamil katraver thaan agasthyer.

    ReplyDelete
  2. Hello Sir,

    Nice article.
    All these actions has been taken for their POLITICS. But the people only "BALI GADA". All their family members are well educated in HINDI and married with ONLY BRAHMIN FAMILY... (Mr. Daya Nidhi & Mr. Kala Nidhi & the GREAT MR. Maran)....UPADESAM UOORUKU MATTUM THAAN....Mr. Karuna will smash Coconut before he starts the Election Campaign and his Wife & another Wife (Thunaivi - What a great a Tamil Word defined by him) will do prayer in Thirunallar Temple and even in Andhra Temples .... But Appavi THAMIZHAN (???) should not pray...and have to speak and die for THAMIZH (???) Vazhga Thamizh .... (AVARGALAI MATTUM Vazha Vaithu Kodirukum Thamizh)

    ReplyDelete
  3. mr.theivam,am a weaver.yes.am BC.am not a bramin.am not ADMK fan.am a hindu maniac.

    ReplyDelete
  4. elai olinthirunthu loosu enbavanei.murugan yaaruda? sivanathu magan thaaney.nee oru koolaida.

    ReplyDelete
  5. eppadi irunthalum sari, ini Hindu mathathaiyum, Hindu tharmathaiyum valarkka namaal mudinthathai seiom. but ini arasiyal illamal eluthungal

    ReplyDelete
  6. Naathigam pesupan thaan tamilan entral sorry i am not tamilan,
    tamilluku naathigan seitha pavaan sollill vadika mudiyathu,

    meendu varuvoom, naathigam allipom,

    ReplyDelete
  7. பரவாயில்லை;தமிழ்நாடே திமுக அல்லது அதிமுக என இரண்டே இரண்டாகப் பிளவு பட்டுநிற்கிறது என்பது தெரிகிறது.கருணாநிதி முழு நாத்திகராக இருந்தால்,தஞ்சை பெரிய கோவிலின் ஆயிரம் ஆண்டு நிறைவு விழாவுக்கு கோவிலின் வாசல் வழியாக நுழைய வேண்டியதுதானே.ஆக,சென் டிமெண்ட் என்ற பூதத்திற்கு நாத்திகத் தலையும் நடுங்கவே செய்கிறது. திமுக வின் தேர்தல் பிரச்சாரப் பாடல்களின் தொனியில் இஸ்லாமிய இசையும்,நடையும் தூக்கலாகத் தெரியும்.

    ReplyDelete
  8. எவனோ ஒரு முகம் தெரியாத கோழை என்னை லூசு என்று எழுதியிருக்கிறான்.அகத்தியருக்கு முன்பே தமிழ் இருந்ததாம்.தமிழுக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியரின் குரு அகத்தியர் என்பது அந்த தலையில்லாதவனுக்குத் தெரியாதோ? நாத்திகம் பேசி நடிப்பது கேவலமில்லையா?

    ReplyDelete
  9. இந்தியாவின் ஆன்மா இந்து மதம் மட்டுமே.இங்கிலாந்தின் ஆன்மா அரசியல்.நேருவின் தொலைநோக்கில்லாத செயல்பாடுகளால்,இந்து தர்மம் அரசியல் லாபத்துக்காக சிதைக்கப்பட்டுவருகிறது.இதை பெரும்பாலான இந்துக்கள் உணரவில்லை;அப்படி உணர்ந்தால்,இத்தாலி பாஸ்போட் வைத்துக்கொண்டு இளைஞர் காங்கிரஸ் நடத்தும் ராகுல்,இந்தியாவில் அரசியல் செய்ய முடியுமா?

    ReplyDelete
  10. நல்ல பதிவு ! வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. திருவடி தீக்ஷை(Self realization)
    இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
    சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.



    Please follow

    http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk (PART-1)

    (First 2 mins audio may not be clear... sorry for that)

    (PART-2) http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4

    http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo (PART-3)




    Online Books
    http://www.vallalyaar.com/?p=409


    Contact guru :
    Shiva Selvaraj,
    Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
    17/49p, “Thanga Jothi “,
    Kalaignar kudi-iruppu – Madhavapuram,
    Kanyakumari – 629702.
    Cell : 92451 53454

    ReplyDelete