Thursday, October 13, 2011

யோகாசனத்தை தனியார் சொத்து ஆகாமலிருக்க. . .




பாரத அரசின் கவுன்சில் பார் சயின் டிபிக் அண்டு இண்டஸ்ட்ரியல் ரிஸர்ச்(CSIR)அமைப்பு 500 யோகாசனங்களை காப்புரிமை பெற்றவை ஆக்கும் செயல்முறையைத் துவக்கிவிட்டது.

காரணம்?

சில அமெரிக்க,ஐரோப்பிய நிறுவனங்கள் சில யோகாசனங்களை தங்களின் கண்டுபிடிப்பு(வெள்ளைக்காரனுங்க எப்பவுமே இப்பிடித்தான்) என்று கூறி காப்புரிமை பெற முயற்சி செய்தன.(அட போங்கப்பா,ஜெர்மன் காரன் காப்புரிமையே வாங்கிட்டானாம்.அது எது தெரியுமா? விநாயர் முன்னாடி தோப்புக்கரணம் போடுவோமே,அதுக்கு! இனி நாம் விநாயகர் முன்னாடி தோப்புக்கரணம் போடணும்ணா,ஜர்மனிக்கு பேடன் ட் தொகை கட்டணும்)ஒவ்வொரு யோகாசனத்தின் ஒளிப்படப்பதிவு,மருத்துவ குணம் ஆகியவற்றை சி.எஸ்.ஆர்.ஐ. ஆவணப்படுத்தி வருகிறது.பதஞ்சலி முனிவர் போன்றோர் தவமிருந்து உலகுக்கு அளித்த யோகக் கலையை சில சுயநல கத்தோலிக்கக் கிறிஸ்தவக் குழுக்கள் தனியுடமை ஆக்குவதை தடுப்பது பாரத அரசின் நோக்கம் ஆகும்.

ஆதாரம்:ஹிந்துஸ்தான் டைம்ஸ் 7.6.11.
விஜயபாரதம்,பக்கம் 11,30.9.11

No comments:

Post a Comment