Saturday, October 8, 2011

விஜயாபதியில் இருக்கும் சித்தர்பீடம்













நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே (இராதாபுரம் தாலுகாவிலிருந்து பத்து கிலோமீட்டர்கள்தூரத்தில் இருக்கும்)விஜயாபதியில் இன்றும் தவம் செய்துவரும் விஸ்வாமித்ர மகரிஷி அவர்களின் அன்பான ஆசிர்வாதத்தினாலும்;

எனது மானசீக ஆன்மீக குரு மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின் ஆசியோடு,இந்தப் பதிவு ஆன்மீகக்கடல் வாசகர்களுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.



இந்தப்படத்தில் இருப்பது விஜயாபதி ஸ்ரீவிஸ்வாமித்ரமகாலிங்கசுவாமி திருக்கோவிலின் மூலவராகிய விஸ்வாமித்ர மகாலிங்கசுவாமிசன்னிதியின் பின்புறத்தில் அமைந்திருக்கிறது.இந்தக் கோவிலுக்கு வருகைதரும் பக்தர்கள் இந்த சித்தர்பீடத்தினுள் அமர்ந்து தியானித்து,தங்களது நியாயமான கோரிக்கைகளை வேண்டினால்,வெகு விரைவில் நிறைவேறும் என்பது அனுபவ உண்மை!!!



இந்தபுகைப்படத்தை பிரிண்ட் எடுத்து,புகைப்படமாக உங்கள் பூஜையறையில் நிறுவிக்கொள்ளவும்.



அல்லது



உங்கள் கணினியின் திரையில் வால்பேப்பராக வைத்துகொள்ளவும்.,உங்களின் நியாயமான கோரிக்கைகளை வேண்டிக்கொண்டு,ஓம்சிவசிவஓம் தினமும் ஜபித்துவரவும்.



இதனால்,இரண்டு விதமான நன்மைகள் உண்டாகும்.இந்த சித்தரின் ஆசி உங்களுக்குக் கிடைக்கும்.நீங்கள் விரைவாக விஜயாபதிக்கு ஒருமுறை வருவதற்கான சந்தர்ப்பம் அமையும்.இந்த சன்னிதியின் எதிரே ஒவ்வொரு பவுர்ணமியன்றும் ஒரு இளைஞர்,ஒற்றைக்காலில் நின்று மணிக்கணக்காக தவம் செய்து வருகிறாராம்.



இந்த சித்தர்பீடத்தை வழிபட்டவாறு ஓம்சிவசிவஓம் ஜபித்துவந்தால்,மனதில் தேவையற்ற காம எண்ணங்கள் அடியோடு நின்றுவிடும்;வன்மம் எனப்படும் பழிவாங்கும் குணம்,பொறாமை முதலான தீயகுணங்கள் விலகுகின்றன.முயன்றுபார்ப்போமா?



ஓம்சிவசிவஓம்



ஓம்விஸ்வாமித்ர மகரிஷியே போற்றி! போற்றி!! போற்றி!!!




1 comment: