Saturday, October 30, 2010

நன்றி:தமிழ் வெப்துனியா மற்றும் அன்மிகக்கடலின் கருத் து

இந்தியாவை எங்களின் ஏற்றுமதிக்கான பெரிய சந்தையாகவே பார்க்கிறோம்: அமெரிக்கா
அதிபர் பராக் ஒபாமாவின் இந்தியப் பயணத்தில் இரு நாடுகளுக்கு இடையே பல வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றும், அமெரிக்கப் பொருட்களின் ஏற்றுமதிக்கு உள்ள தடைகளை நீக்க இந்தப் பயணத்தில் பேச்சுவார்த்தை நடக்கும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்காவின் பாதுகாப்பு துணை ஆலோசகர் மைக் ஃபுரோமேன், “அமெரிக்காவின் ஏற்றுமதிகளுக்கு இந்தியா ஒரு மிகப் பெரிய சந்தை, அதே நேரத்தில் அமெரிக்காவில் முதலீடு செய்வதற்கான ஊற்று. இதனை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்காவின் ஏற்றுமதிகளுக்கு உள்ள தடையை நீக்க அதிபர் ஒபாமா பேசுவார்” என்று கூறியுள்ளார்.

அமெரிக்க பொருட்கள் இந்திய சந்தையை அடைவதற்கு உள்ள தடைகளை அகற்றவும், ஏற்றுமதியின் மூலம் அமெரிக்காவில் வேலை வாய்ப்புகளை பெருக்குவதுமே பராக் ஒபாமாவின் முக்கிய பயண நோக்கமாக இருக்கும் என்றும் மைக் ஃபுரோமேன் தெரிவித்துள்ளார்.


ஆமாம் ஆமாம் .அமெரிகாவாகிய எங்களுக்கு இந்தியா ஒரு குப்பை தொட்டி. எங்களது நாட்டின் தடை செய்யப்பட்ட மருந்துகள் , உரங்கள், உணவுப் பொருட்கள் ,அணு மின்சார உற்பத்தி உதிரி பாகங்கள் அனைதைதிலும் பயன்படுத்தி வீணாக போனவை கல் அனைத்தையும் ஐந்து மடங்கு விலைக்கு உங்கள் தலையில் கட்டவே எங்கள் அதிபர் டெல்லி வருகிறார். நீங்களும் எங்கள் குப்பையை வாங்காவிட்டால் விபரமான சீனாவா வாங்கும்? என்று இதறுகு அர்த்தம்.

எதிலும் அசால்டாக இருக்கும் இந்தியா ,இதிலும் வழக்கம் போல இருக்கும்.நமக்கு நமது பலம் தெரிய வில்லை.இன்னும் எதனை நாளுக்குத்தான் இளிச்சவாய நாடாக இருக்கப்போகிரோமோ?

No comments:

Post a Comment