Wednesday, October 27, 2010

அகத்தியரின் மைந்தன் ஹனுமத்தாசன் சிவனடி சேர்ந்தார்

 

அகத்திய மகரிஷியின் மைந்தன் ஹனுமத்தாசன் சிவனடி சேர்ந்தார்.ஜீவ நாடி பார்த்து பல மக்களின் வாழ்க்கையில் ஆன்மீக ஒளியேற்றிய ஹனுமத்தாசன் நேற்று(26.10.2010) சென்னையில் இறைவனடி சேர்ந்தார்.அவருக்கு வயது 66.சென்னை துறைமுகத்தில் பணிபுரிந்துவந்த அவர்,பிரபல ஜோதிடராகவும் பணியாற்றினார்.

 

தினத்தந்தியில் அகத்தியரின் ஜீவ நாடி என்ற தொடரை சுமார் 300 வாரங்களுக்கு எழுதி அகத்தியரின் பெருமையை பரப்பினார்;தினத்தந்தி ஆன்மீக மலரில் அதிசய சித்தர்கள் என்ற தொடரின் மூலம் சதுரகிரியின் பெருமைகளை உலகம் அறியச் செய்தவர்.

 

அவரது இயற்பெயர் த.கி.இராமசாமி.அவரது மனைவியின் பெயர் சூடாமணி.அவருக்கு ஒரு மகனும்,ஒருமகளும் இருக்கின்றனர்.

 

அவரது குடும்பத்தாருக்கு நமது ஆன்மீகக்கடலின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்..

3 comments:

  1. அன்னாரின் குடும்பத்தாருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

    அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லோருக்கும் பொதுவான இறையிடம் பிரார்த்திப்போம்.

    ReplyDelete
  2. வணக்கம் ஐயா அனுமந் தாசன்(இராமசாமி) அவர்களை நான் பெர்சொனலக நன்கு அறிவேன் நல்ல மனது கொண்டவர் அவர் நிச்சயமாக சொர்க்க தில் நல்ல ஆன்மாகலோடு வாசம் செய்வார் சரி அவருடைய பணி யை எனி யார் தொடர்ந்து செய்வார்கள் தயவு செய்து தெரிவிக்கவும் நன்றி

    ReplyDelete
  3. reserved his place in heaven ,requires blessings from him........

    ReplyDelete