Friday, September 30, 2016

மனிதர்களின் குணங்களும் அவைகளின் செயல்பாடுகளும்


ஒவ்வொரு மனிதனுக்கும் ரஜோ குணம்,தாமச குணம்,சாத்வீக குணம் என்று மூன்று விதமான குணங்கள் உண்டு;ரஜோ குணத்தில் வீரம்,கோபம்,சுறுசுறுப்பு,ஆற்றல் போன்றவை சுபாவங்களாக இருக்கின்றன;

தாமச குணத்தில் சோம்பேறித்தனம்,மந்த நிலை,அக்கறையின்மை,கவனமின்மை போன்ற உபயோகம் அற்றவை மனிதனை இயக்கிப் பாழ்படுத்துகின்றன;

சாத்வீக குணத்தில் கடவுள் பக்தி,சத்தியம் கூறுதல்,நல்ல எண்ணங்கள்,நற்காரியங்கள் போன்ற உத்தம சுபாவங்கள் மனிதனை தெய்வீக நிலைக்கு உயர்த்திட துணைபுரிகின்றன;

இந்த மூன்று குணங்களின் பல்வேறு விகிதாச்சாரங்களுடன் வாழ்பவனே ஒரு மனிதன் ஆவான்;இதனால் தான் அகரம்,உகரம்,மகரம் என்ற மூன்றுவிதமான ஓங்கார அட்சரங்கள் மனிதனுடைய மூன்று விதமான குணங்களைக் குறிப்பதால் தான் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு முறையில் ஓங்காரத்தை உச்சரிக்கின்றான்;

ரஜோ குணத்தை அதிகமாக உடையவன் ஓங்காரத்தை ஒருவிதமாகவும்;
தாமச குணத்தை அதிகமாகக் கொண்டவன் மற்றொரு முறையிலும்;
சாத்வீக குணத்தை அதிகமாக உடையவன் வேறொரு முறையிலும் இதனை உச்சரிக்கின்றார்கள்;
நன்றி:ஓங்கார மகிமை

ஓம் அருணாச்சலாய நமஹ

ஓம் அகத்தீசாய நமஹ

No comments:

Post a Comment