Friday, September 30, 2016

உங்கள் ஒவ்வொருவருடைய முழுக் கர்மவினைகளையும் ஒரே நாளில் தீர்க்கும் அரிய பவுர்ணமி வழிபாடு!!!



தமிழ்நாட்டில் வாழ்ந்துவரும் எட்டுகோடி மனிதர்கள் ஒவ்வொருவருமே 100 கோடி ரூபாய் சொத்துக்கு அதிபதியாக,கோடீஸ்வரராக தமது வாழ்நாள் முழுவதும் வாழமுடியும்;

நமது பாரத தேசத்தில் வாழும் 130 கோடி மனிதர்கள் அனைவரும் தலா 100 கோடி ரூபாய் சொத்தினை தமது ஆயுள் முழுவதும் அனுபவிக்க முடியும்;

நாம் வாழ்ந்து வரும் பூமியில் 700 கோடி மனித ஜீவன்கள் வாழ்ந்து வருகின்றார்கள்;இவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.100 கோடிக்கு அதிபதியாக்கி இந்த பூமியையே குபேரப்பட்டணம் ஆக்கிவிடமுடியும்;

இருந்தும் கூட,ஏன் வறுமையும்,நோயும்,கடனும்,விரக்தியும் இந்த பூவுலகத்தின் பெரும்பகுதியை ஆட்சிபுரிகின்றன?

ஏனெனில்,இந்த பூமியில் வாழ்ந்து வரும் 700 கோடி மனிதர்களில் 699 கோடிபேர்கள் தினமும் நினைப்பது என்னதெரியுமா?
நாம் எப்போதும் ஏழையாகத் தான் வாழவேண்டும்!(இப்படி வாழத்தான் பிறந்திருக்கின்றோம்) இதுதான் நமது தலைவிதி என்று நம்புவதுதான்!!

கடந்த ஐந்து முற்பிறவிகளில் நாம் செய்த பாவ மற்றும் புண்ணியச் செயல்களின் விளைவுகளை அனுபவிக்கவே பிறவி எடுத்துள்ளோம்;விதியை மதியால் வெல்லலாம் என்பது பொழுது போகாத பெருசுகள் வேலைவெட்டி இல்லாமல் சொன்ன வீண்வாதம் அல்ல;மன சக்தியை பக்தி மயமாக்கி,பக்தியின் மூலமாக ஒரே பிறவியில் அதுவும் இந்தப் பிறவியிலேயே அனைத்து முற்பிறப்பு கர்மாக்களையும் கரைத்துவிட்டு சுபிட்சமாக வாழ முடியும் என்பதற்கான உள்ளார்த்தம் தான் அது!!!

15.10.16 சனிக்கிழமைஅன்று நட்சத்திர மரங்களை சைவ ஆகமமுறைப்படி நட்டு சிவவழிபாடுசெய்ய வேண்டும்;இதன்மூலமாக இதுவரை நாம் செய்த அனைத்து கர்மவினைகளும் இதன் மூலமாக காணாமல் போய்வீடும்;(அவரவர் பிறந்த நட்சத்திரத்திற்கு உரிய மரக்கன்றுகளை முறைப்படி இந்த நாளில் நட திட்டமிட்டிருக்கின்றது மஹாவில்வம் பவுண்டேஷன்!)

15.10.16 சனிக்கிழமை அன்று காலை 8 மணிக்கு ராஜபாளையம் தாலுகா சோழாபுரம் கிராமம் அருள்மிகு குழல்வாய்மொழி அம்பாள் சமேத விக்கிரபாண்டீஸ்வரர் திருக்கொவிலுக்கு வந்துவிடவேண்டும்;இரவு 7 மணி வரை இங்கேயே இருக்க வேண்டும்;மதியம் அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது;

வர விரும்புவோர் அவரவர்களது பெயர்,ஜன்ம நட்சத்திரம்,வசிக்கும் ஊர்,செல் எண் இவைகளை maghavilvam@gmail.com என்ற மின் அஞ்சலில் பதிவு செய்து கொள்ளும்படி வேண்டுகின்றோம்;


வழித்தடம்:வடக்கு தமிழ்நாட்டில் இருந்து:ராஜபாளையம் வந்து,அங்கிருந்து திருநெல்வேலி சாலையில் 8 வது கி.மீ,தொலைவில் சோழாபுரம் அமைந்திருக்கின்றது;

தெற்கு தமிழ்நாட்டில் இருந்து:சங்கரன் கோவில் நகரில் இருந்து ராஜபாளையம் சாலையில் முறம்பு என்ற கிராமத்து நிறுத்தத்தில் இறங்கவேண்டும்;அங்கிருந்து ஒரு கி.மீ.தொலைவில் ராஜபாளையம் சாலையில் பயணிக்க வேண்டும்;ஆட்டோ வசதிகள் முறம்பு கிராமத்தில் கிடைக்கின்றன;

ரயில் மார்க்கம்;சென்னை டூ செங்கோட்டை ரயிலில் ராஜபாளையம் வந்தடையவேண்டும்;பழைய பேருந்து நிலையத்தில் இருந்து சோழாபுரம் செல்லும் டவுண் பஸ்பயணம் வழியாக சோழாபுரம் வந்தடையலாம்;

விமான மார்க்கம்;மதுரை உள்நாட்டு விமான நிலையம்;திருச்சி சர்வதேச விமான நிலையம்;




No comments:

Post a Comment