Monday, January 7, 2013

ஆன்மீகவாதிகள் தங்களைக் காத்துக் கொள்ள மகான் ரோமரிஷி அருளிய அறிவுரை




காப்பான கருவூரார் போக நாதர்
   கருணையுள்ள அகத்தீசர் சட்டைநாதர்
மூப்பான கொங்கணரும் பிரம்மசித்தர்
   முக்கியமாய் மச்சமுனி நந்திதேவர்
கோப்பான கோரக்கர் பதஞ்சலியார்
   கூர்மையுள்ள இடைக்காடர் சண்டிகேசர்
வாப்பான வாதத்திற்கு ஆதியான
   வாசமுனி கமலமுனி காப்புதானே.
                             பூஜாவிதி ஏழில் கவி எண் இரண்டு.

மாமேரு எனத் திகழும்,இந்த 14 ஞானிகள் அடங்கிய இந்தப் பாடலை தினமும் காலையிலும்,மாலையிலும் படித்து பாராயணம் செய்தும்,தினமும் பூஜை செய்தும்  வந்தால்,மனித வர்க்கம் அடையமுடியாத,அறியமுடியாத,உணரமுடியாத ஒன்றை நாம் ஒவ்வொருவராலும் உணர முடியும்.
அப்படி உணரும் நிலையை நாம் ஒவ்வொருவரும் எட்டிட குறைந்தது ஒரு வருடமும்,அதிக பட்சம் மூன்று வருடமும் தினமும் அதிகாலை அல்லது அந்திமாலையில் இந்த பாடலை பாராயணம் செய்ய வேண்டும்.
நன்றி:சித்தர்களின் தலைவர் அகத்தியர்.                               ஓம்சிவசிவஓம்

No comments:

Post a Comment