Tuesday, January 22, 2013

ஜன்மச் சனி இருப்பவர்களின் மனோநிலை




ஒரு ராசியை கடக்க சனிபகவான் இரண்டரை ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறார்;இந்த இரண்டரை ஆண்டுகளை மாதக்கணக்கில் முப்பது என்றும்,நாட்கள் கணக்கில் தொள்ளாயிரம் என்றும் கூட கணக்கு எடுத்துக் கொள்ளலாம்;ஏன் இப்படி மாதக்கணக்கிலும்,நாட்கள் கணக்கிலும் எடுத்துக் கொள்ள வேண்டும்?


உங்கள் அருகில் கன்னி ராசியினர் இருந்தால் அவர்களிடம் கேட்டுப்பாருங்கள்;கன்னி ராசியினருக்கு ஜன்மச்சனி நிறைவடைந்து சில மாதங்களே ஆகியிருக்கின்றன;


ஜன்மச்சனி நடைபெற்றுவரும் காலத்தில்,எல்லா மனித உறவுகளும் நம்மை இழிவாகப் பார்க்கும்;ஒரு ரேஷன் கார்டு ஜெராக்ஸ் எடுக்க ஒரு நாள் ஆகிவிடும்;நாமெல்லாம் ஏன் தான் உயிரோடு இருக்கணும்? என்ற விரக்தியைக் கொண்டு வந்துவிடும்;புதிதாக திருமணம் ஆகியிருந்தவர்களாக இருந்தால்,அவர்கள் தமது வாழ்க்கைத் துணையை விட்டுப் பிரிய நேரிடும்;காமத்தால் உடம்பு தவியாய் தவிக்கும்;தனது வாழ்க்கைத் துணையோடு சேர்ந்து வாழ துடியாய் மனம் துடிக்கும்;ஆனால்,சமுதாயத்தில் இருக்கும் மரியாதை,சுயகவுரவம் போன்றவை அதை பெற்றோர்கள் அல்லது உடன்பிறந்தவர் அல்லது நட்பு வடிவில் தடுக்கும்;ஆணாக இருந்தால் நள்ளிரவு நேரத்தில் கூட தூங்காமல் தவிப்பார்கள்;பலர் இரவு முழுவதும் டிவி பார்ப்பார்கள்;சிலர் இந்த காலத்திலும் இரண்டாவது காட்சி எனப்படும் செகண்ட் ஷோவுக்கு சினிமாத்  தியேட்டரை நோக்கிப் படையெடுப்பார்கள்;பெண்ணாக இருந்து எவ்வளவு தைரியசாலியாக இருந்தாலும்,அழுதே ஆக வேண்டும்;ஒரு நாள் இருநாள் அல்ல குறைந்தது ஒன்றரை ஆண்டுகள் வரையிலும் அழுதே ஆக வேண்டும்.


ஏழரைச்சனியில் ஜன்மச்சனி வரும் வரையிலும்,நீங்கள் ஒழுக்கமானவராக இருந்தால் உங்களுக்கு ஒழுக்கமின்மையினால் ஏற்படும் அவமானங்களை உணருவீர்கள்;ஒருவேளை நீங்கள் ப்ளேபாய்,ப்ளே கேர்ளாக இருந்திருந்தால் ஒழுக்கத்தின் முக்கியத்துவமும் அதன் பரிணாமத்தையும் ஜன்மச்சனி வந்ததும் உணரத் துவங்குவீர்கள்;


ஜன்மச்சனி வரும் வரையிலும் நீங்கள் பணம்,பணம் என்று பண வெறியுடன் மட்டும் வாழ்க்கையை நடத்தியிருந்தால்,ஜன்மச்சனி வந்ததும்,(பலருக்கு ஜன்மச்சனி வரும் முன்பே) உங்கள் மொத்தக் கையிருப்பும் சூறையாடப்படும்;அல்லது முடக்கப்படும்;சக மனித நேயங்கள் எவ்வளவு முக்கியம் என்பதை உணருவீர்கள்;ஒருவேளை நீங்கள் உங்களைச் சுற்றியிருப்பவர்கள் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற பொதுநலவாதியாக இருந்தால்,ஜன்மச்சனி வந்ததுமே சுயநலவாதியாக உங்களை மாற்றிவிடும்;புறக்கணிப்பு என்றால் என்ன என்பதை  உணருவீர்கள்;திருமணமான பெண்கள் அல்லது ஒன்றிரண்டு குழந்தைக்குத் தாயாக ஆகும் பெண்கள் ஜன்மச்சனி சமயத்தில் தான் தற்கொலைக்கு முயற்சி செய்கிறார்கள்;அதில் சிலர் மட்டுமே வெற்றியும் பெறுகிறார்கள்.
ஆணைப் பொறுத்த வரையிலும்,திருமணமான சில வருடங்களுக்குள் ஜன்மச்சனி வந்தால் அவனை பெற்றவர்களே ஒதுக்கி வைத்துவிடுவார்கள்;அவன் பக்கம் இருக்கும் நியாயமான கோரிக்கைகளை காது கொடுத்துக் கேட்க ஒருவரும் இருக்க மாட்டார்கள்;பழிவாங்கும் உணர்ச்சி அடிக்கடி தலைதூக்கும்;காம ஏக்கத்தால் அவமானப்பட்டாவது தனது வாழ்க்கைத் துணையுடன் சேர்ந்து வாழ விரும்பும்;அப்படி அவமானப்பட்டப்பின்னரும்,சேர்ந்து வாழ முடியாது;இரண்டரை ஆண்டுகளில் தொள்ளாயிரம் நாட்கள் இருந்தாலும் ஜன்மச்சனியை அனுபவிப்பவர்களுக்கு தொள்ளாயிரம் ஆண்டுகளாக இருக்கும் என்பது அனுபவ உண்மை;


ஜன்மச்சனி ஒரு சிலருக்கு மட்டும் நன்மைகளைத் தரும்;ஜன்மச்சனி காலத்தில் திருமணத்தை முடித்து வைக்கும்;அல்லது சொந்தமாக வீடு அல்லது தொழில்நிலையத்தை உருவாக்கித் தரும்;அதே சமயம்,கடனைத் தர வைக்கும்;கடன் தந்தவர்களின் சுயரூபத்தை புரிய வைக்கும்;
ஒழுங்காக வேலைக்குச் சென்று கொண்டு இருப்பவரை,சொந்தத் தொழில் செய்யத் துவங்கும் காலமும் ஜன்மச்சனி காலமே! சொந்தத் தொழிலை துவங்க வைத்து விட்டு கையிருப்பை கரைக்க வைத்துவிட்டு சுயதொழில் செய்யத் துவங்க தூண்டியவரிடமிருந்து மனக்கசப்பை உருவாக்கிவிடும்;
சொந்தத் தொழில் பார்த்துக் கொண்டிருந்தால்,அதை கைவிடவும் வைக்காமல்,வேலைக்குச் செல்லவும் வைக்காமல் கடனாளிகளிடம் ஒவ்வொரு நாளும்,ஒவ்வொரு நொடியும் அவமானப்பட வைக்கும் காலமும் ஜன்மச்சனி காலமே! ஜன்மச்சனி காலத்தில்  திருமணம் செய்யாமல் இருப்பது ரொம்ப நல்லது; உங்களது மகளுக்கு வரும் வரன்களில் பொருத்தம் மட்டும் பார்த்து முடிக்காதீர்கள்;கூடவே,அந்த வரனுக்கு ஏழரைச்சனி இருக்கிறதா? என்று பாருங்கள்;அதுவும் ஏழரைச்சனியில் ஜன்மச்சனி இருக்கும் வரனாக இருந்தால்  தயவு செய்து திருமணம் முடிக்க வேண்டாம்;விரையச்சனி,வாக்கு/பாதச்சனி எனில் திருமணம் செய்யலாம்;அஷ்டமச்சனி இருந்து,பொருத்தங்கள் போதுமான அளவில் இருந்தாலும் திருமணம் செய்யாமல் இருப்பது நல்லது;ஒரு ஜோதிட சர்வே எடுக்க வேண்டும்: யாரெல்லாம் ஜன்மச்சனி காலத்தில் திருமணம் செய்கிறார்களோ,அவர்கள் ஜன்மச்சனி முடிந்த சில வருடங்களில் பிரிந்து விடுகிறார்கள்;அப்படி பிரிந்து வேறு திருமணம் செய்பவர்களின் சதவீதம் எவ்வளவு? என்பதை சர்வே எடுத்தால் தான் மானுட வாழ்க்கையின் பல ரகசியங்கள் புரியும்.இதன் மூலமும் பல கர்மவினைகளை முழுமையாக நீக்கிட முடியும்.


கஞ்சனாக இருப்பவர்களுக்கு ஜன்மச்சனி வந்ததும்,ஊரை விட்டே ஓட வைக்கும்;ஊதாரியாக இருப்பவர்களுக்கு சிக்கனத்தின் முக்கியத்துவத்தை புரிய வைக்கும்;அரசியல்வாதி,டாக்டர்,பொறியாளர்,பேராசிரியர்,ஜோதிடர்,  ஆண்,பெண்,அலி என்ற திருநங்கை,குழந்தை,பள்ளி மாணவன்,கோவில் பூசாரி, பெட்டிக்கடை நடத்துபவர்,ஏழை,பிச்சைக்காரர்,பணக்காரன்,மகத்தான தொழிலதிபர், நடிகர்,மந்திரவாதி,அரசியல்தலைவரின் மகன்,ஹிந்து,முஸ்லீம்,கிறிஸ்தவர்,நாத்திகன்,எழுத்தாளர்,பத்திரிகையாளர்,கவிஞர்,ஓட்டுநர்,பெரும் செல்வச் செழிப்பு மிக்கவரின் ஒரே வாரிசு என்ற பேதம் எல்லாம் சனிபகவானிடம் சிறிதும் கிடையாது;அனைவரையும் சரி சமமாக சித்ரவதைக்கு உள்ளாக்குவார்; அதே சமயம்,கடந்த ஐந்து பிறவிகளில் நாம் செய்த பாவ வினைகளை அனுபவிப்பது ஜன்மச்சனி மற்றும் அஷ்டமச்சனி காலத்தில் தான்!

இந்த வேதனைகளுக்குத் தீர்வு என்ன?

அசைவம் சாப்பிடுபவர்கள் தான் ஏழரைச்சனி காலத்திலும்,அஷ்டமச்சனி காலத்திலும் படாத பாடு படுகிறார்கள்;எனவே,முதலில் அதைக் கைவிட வேண்டும்;


பிறகு,தினமும் ஸ்ரீகால பைரவ மந்திரங்களில் ஏதாவது ஒன்றை ஜபிக்க வேண்டும்;எங்கே? அருகில் இருக்கும் பழமையான சிவாலயத்தினுள் அமைந்திருக்கும் ஸ்ரீகாலபைரவர் சன்னதியில்! அல்லது நமது வீட்டுப்பூஜை அறையில்!! தொலைதூர நாடுகளில் இருப்போர் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி  அமர்ந்து ஜபிக்கலாம்;பின்வரும் மந்திரங்களில் ஏதாவது ஒன்றை ஜபிக்கலாம்;




ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

அல்லது

ஓம் ஹ்ரீம் க்ரீம் ஹீம் ஹ்ரீம் காலபைரவாய போற்றி

இவற்றில் ஏதாவது ஒன்றை மட்டும் ஜபிக்க வேண்டும்


இவ்வாறு ஜபித்து வந்தால்,ஒரு சில வாரங்களுக்குப் பிறகு,சனியின் தாக்கம் குறையத் துவங்கும்;அதை உணர்ந்த உடனே,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷணபைரவர் வழிபாட்டையும் துவங்கிவிட வேண்டும்.
போன மூன்று பிறவிகளில் முழுவதும் அல்லது மூன்று பிறவிகளில் ஏதாவது ஒரு பிறவியில் மட்டுமாவது ஸ்ரீகால பைரவர் வழிபாட்டை பின்பற்றியவர்களின் ஜாதகம் எப்படி இருக்கும் தெரியுமா?


ரிஷபலக்னத்தில் பிறந்து,ரிஷபராசி அல்லது கன்னி ராசி அல்லது மகர ராசியில் சனி இருக்கும் போது பிறந்திருப்பார்கள்;இந்த கிரக அமைப்போடு எந்த ராசியாக இருந்தாலும் அவர்களுக்கு ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி,பாதச்சனி ஒரு சிறு கஷ்டத்தையும் தராது;அல்லது சுவாதி நட்சத்திரத்தில் சனி வக்கிரம் ஆகாமலிருக்கும் போது பிறந்திருப்பார்கள்;இதைத் தவிர வேறு எவ்வளவு யோக ஜாதகமாக இருந்தாலும்,அவர்கள் ஏழரைச்சனியை ஏழரை ஆண்டுகளுக்கு அனுபவித்தே ஆகவேண்டும்;


இதைத் தவிர வேறு வழி இல்லை; டிசம்பர் 2012 முதல் டிசம்பர் 2014 வரை இந்த மனநிலையை அனுபவித்து வருபவர்கள் ஜன்மச்சனியினால் அவதிப்படும் துலாம் ராசியினரும்,அஷ்டமச்சனியினால் கஷ்டப்பட்டுவரும் மீனராசியினருமே!


டிசம்பர் 2014 முதல் ஜீன் 2017 வரை அனுபவிக்க இருப்பவர்கள் விருச்சிகராசியினரும்(ஜன்மச்சனி); மேஷராசியினரும்(அஷ்டமச்சனி) ஆவர்.

ஜீன் 2017 முதல் ஜன்மச்சனி தனுசு ராசிக்கும்,அஷ்டமச்சனி ரிஷபராசிக்கும் ஆரம்பமாக இருப்பதால் இப்போதிருந்தே ஸ்ரீகால பைரவர் வழிபாட்டைத்  துவக்கிவிடுவது அவசியம்;                 எனவே,தற்போது ஓம்சிவசிவஓம் ஜபித்து வரும் விருச்சிகராசி மற்றும் மேஷராசியினர் அதற்குப்பதிலாக,தினமும் ஸ்ரீகாலபைரவர் வழிபாட்டைத் துவக்குவது நல்லது;நீங்கள் எப்போதெல்லாம் அண்ணாமலைக்குச் செல்கிறீர்களோ அந்த நாளிலும்,அமாவாசை நாட்களிலும் மட்டும் ஓம்சிவசிவஓம் ஜபித்தால் போதுமானது;                    


ஓம்சிவசிவஓம்

No comments:

Post a Comment