Saturday, August 4, 2012

உலகத்தின் முதல் ஸ்ரீசொர்ண பைரவர்,ஸ்ரீசொர்ணதா தேவி சன்னதி,பொன்பேத்தி,அறந்தாங்கி வட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து உள்ளது. பொன் பேத்தி. பூவுலகு தோன்றிய காலம் முதற்கொண்டு நாகரீகமான மக்கள் வாழ்ந்து வரும் பொன் பேத்தி ஆன்மிகத்தில் சிறந்து விளங்கும் தலமாகும். 

இவ்வூரில் ஸ்ரீ பூதேவி உடணுறை சுந்தராஜ பெருமாள் அகிலாண்டேஸ்வரி உடனுறை பவானீஸ்வரர் கோவில் அமைந்து உள்ளது. வைகுண்டவாசன் சொர்ண வீற்றிருந்த சுந்தரராஜ பெருமாளாகவும், தாயார் சொர்ணலெட்சுமி தேவியாகவும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். நின்ற போலம், அனந்த சயன கோலம் போன்ற திருக்கோலங்களை எளிதில் தரிசிக்கலாம். 

இத்திருத்தலத்தில் புருசோத்தமன் அமர்ந்த கோலமாக அருளுவது அரிதிலும் அரிது. மேலும் விஷ்ணுபதி தலமாக சித்தர்களால் அடையாளம் காட்ப்பட்ட கோவில் இது. தேய்பிறை அஷ்டமி திதியன்று நடத்தப்பட்டு வருகின்ற யாக வேள்வியும், வைரவ மகரிஷியால் முதன் முதலில் தொடங்கப்பட்ட தலம் இதுவே ஆகும். 

ஸ்ரீ பைரவ மூர்த்தியின் திருப்தங்கள் சகல மூர்த்திகளுக்கும் பூலோகத்தில் தரிசனம் ஆன ஸ்தலம் ஆன ஸ்தலம். சுத்தமான பசும்பாலில் அபிஷேகம் செய்ம் போது வைரவர் உடலில் பல்வேற வண்ணங்கள் தோன்றுவதை பக்தர்கள் கண்கூடாக கண்டு வருகின்றனர். 

ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ பவானீஸ்வர் சுவாமி ஆலயத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் வைரவரிடம் பொன், வெள்ளி அல்லது தாமிரத்தால் ஆன சிற நாணய சாகுகளை கயிற்றில் கோர்த்து அவருககு சமர்ப்பித்து அதனை ஆண், பெண் இருபாலாரும் கையிலுட், இடப்பிலும் அணிந்தால் அதற்கு அபூர்வமான காப்பு சக்தி உள்ளது. ஆதலால் கலியுகத்தின் மகத்தான காப்பு சக்தி ஸ்தலமாக பொன்போத்தி விளங்கி வருகிறது. 

அஷ்டமி பைரவ தரிசனத்தால் ஆபத்து அடியோடு நீங்குகிறது. எம்பெருமான் ஸ்ரீ சுந்தரராஜ பெருமாளாக தாயாருடன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றார். தன்னை காணவரும் பக்தர்களின்  மனக்குறையையும் பொன். பொருள் குறையையும் தீர்த்து வைக்கின்றார். 

முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது இந்துக்களின்  புனித கடமையாகும். இதனை நீத்தார் கடன் என்று வள்ளுவ பெருந்தகையும் கூறியிருக்கிறார். பிதுர்களுக்கு கொடுக்கப்படும் தர்ப்பணதிதின் மூலம் முன்னோர்கள் மகிழ்ந்து நம்மை வாழ்த்துகிறார்கள். காசி, கயா, ராமேஸ்வரம் போன்ற இடங்களை விடவும் பன்மடங்கு சிறந்தது  பொன்பேத்தி ஆகும். நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் அன்னை அகிலாண்டேஸ்வரியின் கரணை பார்வையை காண கண்கோடி வேண்டும்.நன்றி:மாலைமலர்

No comments:

Post a Comment